அதிரையில் நிலவிய உள்ளாட்சித் தேர்தல் சூடு 25.10.2011 பதவியேற்பு வைபவத்தன்று பெய்த மழையுடன் குளிரத் தொடங்கியுள்ளது. பேரூர் தலைவராகவும் வார்டு கவுன்சிலர்களாகவும் பொறுப்பேற்ற அனைவரின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.
அனைத்து சகோதர நல்லுள்ளங்களும் நமதூருக்கு வேண்டிய நலப்பணிகளை மீடியாக்கள் வழியே பட்டியலிட்டுள்ளதை புதிய பொருப்பாளர்களான தாங்கள் படித்திருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள் அதில் சகோதரர் ஜமாலுதீன் அவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் நடைமுறையிலுள்ள பல நல்ல பணிகளை குறிப்பிட்டுள்ளார்கள். புதிய பேரூர் நிர்வாகிகளான தாங்கள் அதே போன்ற பணிகளை இன்னும் செம்மையாக செய்திடுவீர்கள் என நம்புகிறோம். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு நமதூருக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை பெற்றுத்தர வேண்டும்.
AIM
No comments:
Post a Comment