உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, October 14, 2011

தொழுகை

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!
கண்ணியமிக்க சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
வல்ல அல்லாஹ் நமக்கு விதியாக்கிய கடமைகளில் முதன்மையானது தொழுகையாகும். அல்லாஹ் திருமறையில்...
'நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது' (அல்குர்ஆன் 4:103)
தொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்!
'ஆனால், இவர்களுக்குப் பின் (வழிகெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்;. அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்;. (இழிவான மன) இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள்' (அல்குர்ஆன் 19:59)
'தவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர. அத்தகைய (ஸாலிஹான)வர்கள்; (ஜன்னத்தில்) சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்;. (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது' (அல்குர்ஆன் 19:60)
'இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்பார்கள்' (அல்குர்ஆன் 107:4-5)
'ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம். எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஸ்டமடைந்தவர்கள்' (அல்குர்ஆன் 63:9)
குர்ஆன் விரிவுரையாளர்கள் மேற்கண்ட வசனங்களுக்கு விளக்கமளிக்கையில், இறைவனை நினைவு கூர்தல் என்பது ஐந்து நேரத் தொழுகையைக் குறிக்கிறது. யாராவது ஒருவர் கொடுக்கல் வாங்கல், தன்னுடைய குடும்பத்தினருக்காக சம்பாதிப்பது அல்லது தன்னுடைய குழந்தைகளுடன் இருப்பது போன்ற காரியங்களுக்காக தொழுகையை விட்டுவிடுவாரானால் அவர் நஸ்டத்திற்கு உள்ளானவராவார்.
மறுமையில் முதல் விசாரணை தொழுகையைப் பற்றியதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும்' (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அபூதாவுத்)
நரகவாசிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது அல்லாஹ் கூறுகிறான்:
'உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?' (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: 'தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. 'அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்க வில்லை. '(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம். 'இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். 'உறுதியான (மரணம்) எங்களிடம் வரும் வரையில் (எனக் கூறுவர்) (அல்குர்ஆன் 74:42-47)
தொழுகையை விடுவது இறை நிராகரிப்பு:-
'நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்;. அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்;. தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்;. இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள்' (அல்குர்ஆன் 30:31)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
'ஒரு முஸ்லிமுக்கும் இணைவைத்தலுக்கும், இறை நிராகரிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவது தான்' (ஆதாரம்: முஸ்லிம்)
'முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையேயுள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான்' (ஆதாரம்: அஹ்மத், திர்மிதி)
 'நிராகரிப்புக்கும் இஸ்லாத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம் தொழுகையே. எவன் அதனை விடுகின்றானோ நிராகரித்தவனாகின்றான்' (ஆதாரம்: இப்னு ஹிப்பான்)
அபூதர்தா(ரலி) அவர்கள் கூறினார்கள்: 'எவனிடம் தொழுகை இல்லையோ அவனிடம் ஈமான் இல்லை' (ஆதாரம்: திர்மிதி)
'யார் ஒருவர் வேண்டுமென்றே தொழுகையை விட்டு விடுகிறாரோ அவர் அல்லாஹ்விடத்தில் எதையும் அடைய இயலாது' (இப்னுமாஜா)
தொழாதவர்களின் நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது:
'அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில்; அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை' (அல்குர்ஆன் 9:54)
தொழுகையை நிலைநாட்டுபவர்களே மார்க்கத்தில் சகோதரர்கள்:
'அவர்கள் தவ்பாச் செய்து (திருந்தி), தொழுகையை நிலைநாட்டி, ஜக்காத்தும் கொடுத்தால் அவர்கள், மார்க்கத்தில் உங்கள் சகோதரர்களே' (அல்-குர்ஆன் 9:11)
'மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை; முஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளை யிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார் களானால் தம் உயிர், உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள். இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறனாலே) தவிர! மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள். (ஆதாரம்: புகாரி)
'நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன்;. நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஜகாத்தும் கொடுத்து, என் தூதர்களை விசுவாசித்து, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்காக அழகிய கடனும் கொடுப்பீர்களானால் நிச்சயமாக நான் உங்கள் பாவங்களை மன்னித்து சதா நீரருவிகள் கீழே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளில் உங்களை நுழைய வைப்பேன்;. எனவே இதற்குப்   பின்னரும், உங்களில் எவரேனும் (இம்மார்க்கத்தை) நிராகரிப்பின் நிச்சயமாக அவர் நேரான வழியிலிருந்து தவறிவிட்டார்' (அல்குர்ஆன் 5:12)
கருணையாளனாகிய அல்லாஹ் நம் குற்றங்களை மன்னித்து முஸ்லிமான நம் அனைவைரயும் தொழுகையை முறைப்படி பேணி நடப்பவர்களாக ஆக்கியருள்வானாக!
வெளியீடு: தவ்ஹீத் இல்லம் தஃவா குழு

No comments:

Post a Comment