உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, February 18, 2011

அல்லாஹ்வின் அருளுடனும் மக்களின் நல்லாதரவுடனும் நடந்த அதிரை ஜூம்ஆ

அதிரை ஜூம்ஆ கமிட்டியின் ஏற்பாட்டில் CMP லைன் பகுதியில் அமைந்துள்ள AL மெட்ரிக்குலேசன் (EPS) பள்ளி வளாகத்தில் நடந்த இந்த முதல் ஜூம்ஆவில் மவ்லவி. கோவை மீரான் முகைதீன் ஸலாஹி MA அவர்கள் கலந்து கொண்டு முதல் அமர்வில், அல்லாஹ்வால் சபிக்கப்பட்ட 16 பேர் என்ற தலைப்பின் கீழ் அச்சமூட்டி எச்சரிக்கும் ஒர் சிறந்த உரையை நிகழ்த்தினார்கள்.(இதுவரை 6 பேர் குறித்து மட்டுமே விளக்கமளிக்கப்பட்டுள்ளது அடுத்த சந்தர்ப்பங்களில் உரை விளக்கம் தொடரும் இன்ஷா அல்லாஹ்)

இரண்டாவது அமர்வில், இன்றைய அரபுலகில் நடந்துவரும் அரசியல் மாற்றங்களின் பின்னனியை கருத்திற் கொண்டு இஸ்லாம் கூறும் அரசியல் குறித்து காலத்திற்கேற்ற உரை நிகழ்த்தப்பட்டது

குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அதிரையில் நடந்த முதல் ஜூம்ஆவில் ஏகத்துவவாதிகளுடன் ஏராளமான பொதுமக்களும் அழைக்காமலேயே பெண்களும் கலந்து கொண்ட நிகழ்வு நாம் முறையாக குர்ஆனையும் ஹதீஸையும் எத்திவைத்தால் மக்கள் ஏற்றுக்கொள்ளத்தயார் என்பதையும் நாம் இணைந்து செய்ய வேண்டிய இன்னும் பல கடமைகளையும் நினைவுபடுத்தி சென்றுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்.




அதிரையிலிருந்து
அப்துல் காதர் .S

4 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    நல்ல முயற்சி தொடர்ந்து நடப்பதற்கு இறைவனைப் பிறார்திக்கிறேன்.
    ஜும்ஆ நிகழ்ச்சியை வீடியோ எடுத்து போட்டால் நன்றாக இருக்கும் போட்டோவை மட்டும் போடுவதற்கு பதிலாக

    ReplyDelete
  2. Insha allah video will be download shortly

    ReplyDelete
  3. சகோதரர் ஜாகிர் அவர்களே!
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    இன்ஷா அல்லாஹ் வீடியோ பதிவு விரைவில்
    AIM

    ReplyDelete
  4. அல்ஹம்துலில்லாஹ்.மேலும் தொடரட்டும்.

    ReplyDelete