உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, June 7, 2013

06.06.2013 துபையில் மதுக்கூர் மர்கஸில் கோவை அய்யூப் உரை

கடந்த ஒரு வார காலமாக அபுதாபியிலும் முஸஃபாவிலும் தினமும் காலையிலும் மாலையிலும் நடைபெற்று வந்த சகோதரர் கோவை S. அய்யூப் அவர்களின் தொடர் தஃவா நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இறுதியாக துபை மாநகரில், கோட்டைப்பள்ளி அருகேயுள்ள பஞ்சாப் தர்பார் ரெஸ்ட்டாரெண்ட் 3 வது மாடியில் அமைந்துள்ள மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை மர்கஸில் பயான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் இறைவனை சந்திக்கும் வேளையில்?! என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிய சகோதரர் அய்யூப் அவர்கள், மறுமை நாளில் தீயோர்களுக்கு கிடைக்கக்கூடிய தண்டனைகளையும் நல்லடியார்களுக்கு கிடைக்கக்கூடிய கண்ணியங்களையும் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் பட்டியலிட்டார்கள். 




 


 
தமிழக தவ்ஹீத் எழுச்சியின் ஆரம்ப காலங்களில், அமல்களின் சிறப்பு என்ற புத்தகத்தை விடுத்து குர்ஆன் ஹதீஸ் பக்கம் ஒரு நாளும் வரமாட்டார்கள் என தப்லீக் சகோதரர்களை விமர்சிப்பதுண்டு. அப்படி விமர்சனம் செய்தவர்களே, விமர்சனம் செய்ய பயிற்றுவிக்கப்பட்டவர்களே காலப்போக்கில் ஓர் தனி மனிதனின் லாஜிக் மார்க்கத்தை விட்டு வெளியேற முடியாததோடு அவர் சொல்வது மட்டுமே மார்க்கம் என்றும், பிற தாயிக்கள் கூறும் நல்லதை கேட்காதே, நல்லதை பேசாதே, நல்லதை பார்க்காதே என உல்டா காந்தி குரங்குகளுக்கு ஈடாயினர்.







 
 
துபை மாநகரை பொறுத்தவரை சமீப ஆண்டுகளில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பேசும் பிற தமிழக தாயிக்களுக்கும் அவர்தம் இஸ்லாமிய கருத்துக்களுக்கும் செவிதாழ்த்தி கேட்கும் போக்கு அபரிமிதமாக அதிகரித்துள்ளது என்பது நேற்றிரவு நடைபெற்ற கோவை அய்யூப் அவர்களின் நிகழ்ச்சியிலும் எதிரொலித்தது. ஆங்காங்கே இருந்தவர்களை எல்லாம் நேற்று ஓரிடத்தில் பார்க்கும் போது எஞ்சியவர்களுக்கும் விரைவில் ஹிதாயத் எனும் நேர்வழி கிடைத்திட எல்லா நல்லுள்ளங்களைப் போலவே எமதுள்ளமும் பிரார்த்தித்தது..

சகோதரர் கோவை அய்யூப் அவர்களின் இந்த ஒன் அண்டு ஒன்லி துபை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையை சேர்ந்த சகோதரர்கள் சீறிய முறையில் செய்திருந்தனர், அல்ஹம்துலில்லாஹ். 

அதிரை அமீன்

No comments:

Post a Comment