உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, June 4, 2013

03.06.2013 அபுதாபி காலிதியாவில் நடைபெற்ற மார்க்க பயான்

தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவாற்றிய மார்க்க பயான் 03.06.2013 திங்கள் அன்று மாலை மஃரிப் தொழுகைக்குப்பின் இஷா வரை அல் ஒமைர் டிராவல்ஸ் பில்டிங்கில் நடைபெற்றது.


நிகழ்ச்சியில் சகோதரர் அய்யூப் அவர்கள், 'இஸ்லாம் வளர்ந்த விதமும் இன்றைய வளர்ச்சியும்' என்ற தலைப்பில் எளியதொரு ஆய்வுரை நிகழ்த்தினார். நபி (ஸல்) அவர்கள் மற்றும் ஸஹாபாக்களின் மாசற்ற தியாகங்களை நினைவுகூர்ந்த சகோதரர் இஸ்லாத்தின் இன்றைய அசூர வளர்ச்சியையும் நமது கடமைகளையும் எடுத்துரைத்த அதேவேளை சர்வதேச சமூகத்தால் இஸ்லாத்தின் மீது திட்டமிட்டு வீசப்படும் அவதூறுகளையும் அம்பலப்படுத்தினார்.


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொறியாளர் ஜெய்லானி அவர்களின் வழிகாட்டலின் அடிப்படையில் சகோதரர் சலாவுதீன் அவர்கள் திறம்பட ஏற்பாடு செய்திருந்தார். திரளான சகோதரர்கள் பங்குபெற்று பயனடைந்து சென்றனர். 

அபு அஸ்அத் 

No comments:

Post a Comment