உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, June 5, 2013

04.06.2013 அபுதாபி சிட்டி மற்றும் முஸஃபா தஃவா எழுச்சிகள்

இஃலாஸூடன் எந்த ஒரு நற்காரியத்தை துவங்கினாலும் எல்லாம் வல்ல அல்லாஹ் அதை வெற்றி பெறச் செய்வான் என்பதற்கான சான்றுகளாக அமைந்தன இன்று (04.06.2013 செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற தஃவா நிகழ்ச்சிகள், அல்ஹம்துலில்லாஹ்.

அபுதாபி சிட்டியில் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை முற்றிலும் பெண்களுக்காக மட்டும் நடைபெறும் சகோதரர் கோவை அய்யூப் அவர்களின் தர்பியா நிகழ்ச்சி இன்றும் தொடர்ந்தது, முதல் நாள் சுமார் 30 பெண்களுடன் தொடங்கிய தர்பியா அல்லாஹ்வுடைய கிருபையால் சுமார் 70 பெண்கள் வரை என அதிகரித்தது. சகோதரி ஆயிஷா அவர்களின் தலைமையிலான பெண்கள் குழுவினருக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்கூலியை வேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக. 

மாலையில் மஃரிப் முதல் இஷா வரை, முஸஃபா 10ல் சகோதரர் ஜமால் பிரதர்ஸ் இல்லத்தில் மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்ட ஏகத்துவ பிரச்சார நிகழ்ச்சியில் சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் கலந்து கொண்டு "இஸ்ரா வ மிஹ்ராஜ்" - நடந்தது என்ன? என்ற தலைப்பில் படிப்பினை தரும் ஓர் வரலாற்று ஆய்வுரை நிகழ்த்தினர்.






 
இந்த நிகழ்ச்சியில் தத்தமது குடும்பங்களுடன் பலர் கலந்து கொண்டதும், ஏராளமான புதிய சகோதரர்கள் வருகை தந்ததும் இந்தக் களத்தில் தஃவா நிகழ்வுகளை இன்னும் வீரியத்துடன் போதிய கால இடைவெளியில் நடத்த வேண்டும் என்ற உத்வேகத்தை விதைத்து சென்றது என்றால் அது மிகையல்ல. புகழனைத்தும் ரப்பு ஒருவனுக்கே!

அபு அஸ்அத்            

No comments:

Post a Comment