உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, June 3, 2013

02.06.2013ல் அபுதாபி சிட்டி மற்றும் முஸஃபாவில் நடைபெற்ற தஃவா நிகழ்ச்சிகள்

ஏகனின் அருளாள், 02.06.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் பகல் 12 மணிவரை அபுதாபி சிட்டி, காலிதியா பகுதியில் முற்றிலும் பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி 'மார்க்கக் கல்வியின் அவசியம்' என்ற தலைப்பின் கீழ் நடைபெற்றது. 


முதலில் பாடம் பின் படாத்திலிருந்து கேள்வி பதில் என சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் நடத்திய இச்சிறப்பு வகுப்பில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இத்தர்பியாவிற்கான ஏற்பாட்டினை சகோதரி ஆயிஷா அவர்கள் திறம்பட செய்திருந்தார்கள்.


மாலை மஃரிப் முதல் இஷா வரை, முஸஃபா 10ல் அல் ஜஸீரா ஃபார்மஸி பின்புறம் அமைந்துள்ள சகோதரர் புதுக்கோட்டை ஜமால் அவர்கள் இல்லத்தில் குடும்பத்தினருக்கான தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் 'மறுமையில் முஹமது நபி (ஸல்) அவர்களின் உம்மத்' என்ற பொருளில் குடும்பத்தினருக்கான தஃவா நடைபெற்றது. இதிலும் திரளான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை 'எம்ப்பவர்' ஜமால் பிரதர்ஸ் வெகுசிறப்புடன் செய்திருந்தனர்.

மேற்காணும் இரு நிகழ்வுகளிலும் கலந்து கொண்ட, ஏற்பாடு செய்த, மார்க்கத்தை அதன் தூய வடிவில் எத்தி வைத்த, கேட்ட நல்ல விஷயங்களை தங்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்திட நல்லெண்ணம் கொண்டவர்கள் என அனைவருக்கும் எல்லாம் வல்ல ரஹ்மான் இம்மையிலும் மறுமையிலும் அவர்தம் பாவங்களை மன்னித்து சுவர்க்க வாழ்வை பரிசாக வழங்குவானாக!

அபு சுமைய்யா

No comments:

Post a Comment