உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, January 26, 2012

அதிரை நகைக்கடையில் கொள்ளை

நமதூர் ECR சாலையில் அமைந்துள்ள, ராமச்சந்திர பத்தர் என்பவருக்கு சொந்தமான KR ஜூவல்லரியில் நேற்றிரவு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. அதிரையில் பிரதான சாலையில் அமைந்துள்ள இந்த நகைக்கடையை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் மர்ம நபர்கள்.

வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் உள்ள ECR சாலையில் நடைபெற்றுள்ள இந்த துணிகர கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் காவல்துறையின் செயல்பாட்டினை கேள்விக்குறியுடன் பார்க்கத் துவங்கியுள்ளனர். காவல்துறை துரித நடவடிக்கை எடுத்து உண்மை குற்றவாளிகளை கைது செய்யுமா? அல்லது வழமைபோல் வலைவீசி தேடிக் கொண்டிருக்குமா? என்பதே வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் ஒரே அச்சம்.

குறிப்பு : ராமச்சந்திர பத்தர் அவர்கள் பழக இனிமையானவர் மேலும் முஸ்லீம்களுடன் மிகவும் இயல்பாக பழகக்கூடியவர். நகைக்கடை வரை தன்னிலை உயர்ந்தாலும் தான் மேலத்தெருவில் நடத்தி வரும் பத்தர் தொழிலையும் இன்று வரையும் தொடர்பவர். சில ஆண்டுகளுக்கு முன் மகன் எனும் மக்கட் செல்வத்தை இழந்தவர் தற்போது தொழில் எனும் பொருட் செல்வத்தையும் இழந்து நிற்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

Abu Abdur Rahman

No comments:

Post a Comment