உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, January 12, 2012

நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!

கண்ணியமிக்க சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இந்த உலகில் தோன்றிய, தோன்றவிருக்கிற மனிதர்கள் அனைவரும் மரணத்தை சுவைப்பவர்களே! அந்த மரணத்திற்கு பின் இறைவனின் நீதி விசாரணைக்கு பின் சுவனம் எனும் சுக வாழ்க்கையை அடைய வேண்டுமெனில், அதற்கான சேமிப்பு நன்மை மட்டுமே!
இறைவன் வழங்கிய ஆயுளைக்கொண்டு இருக்கும் காலத்தில் நன்மைகளை சேகரித்து வைத்தால்தான் மறுமையில் சுவனத்தின் திறவுகோலாக அது அமையும். அதைவிடுத்து மனம்போன போக்கில் நமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் மறுமையில் கைசேதப்படும் நிலைவரும். எனவேதான் வல்ல அல்லாஹ் கூறுகின்றான்;

'ஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும், (தொழுகைக்கான)  ஒரு திசையுண்டு. அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக உள்ளனர், நற்செயல்களின்பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றல் மிக்கோனாக இருக்கிறான்' (அல்குர்ஆன் 2:148)

இந்த வசனத்தில் அல்லாஹ் நன்மையின் பக்கம் முந்திக்கொள்ளுமாறு நம்மைப் பணிக்கின்றான். நற்செயல் என்பது நாம் நினைப்பது போன்று தொழுகை-நோன்பு-ஹஜ் போன்றவை மட்டுமல்ல. இதுபோன்ற அமல்களோடு நம் அன்றாட வாழ்வை இறைமறை-இறைத்தூதர்(ஸல்) வழியில் அமைத்துக் கொள்வது, நாம் பேசும் பேச்சுக்களை உண்மையானதாகவும், பொய்கள்-புறம்-அவதூறுகள்-வீண் தர்க்கங்கள் தவிர்ந்து கொள்வது, நம்முடைய நடை-உடை-உணவு-வியாபாரம்-இல்லறம்-உறவுமுறை பேணல் போன்ற-வற்றை குர்ஆன்-ஹதீஸ் வழியில் அமைத்துக் கொள்வது இவை யாவும் நமக்கு நன்மையானதாக மாறிவிடும்.
உதாரணமாக ஸலாம் கூறுவதை எடுத்துக் கொண்டால், ஒருவர் அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொன்னால் 10 நன்மைகளும், அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ் என்றால் 20 நன்மைகளும், அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்து{ஹ என்றால் 30 நன்மையையும் கிடைக்கின்றது. இந்த நன்மைகளை பெறுவதற்காக பலமணி நேரம் நாம் செலவளிக்கவேண்டியதில்லை. ஒரு சில நிமிடங்களில் இந்த நன்மை நமக்கு கிடைத்துவிடும். நம்மில் எத்துனை பேர் ஸலாம் சொல்லுவதில் கவனம் செலுத்துகிறோம்..?

இதுபோன்ற நன்மையை அள்ளித்தரும் பல்வேறு சின்ன சின்ன செயல்கள் நம்மால் பாராமுகமாக விடப்-பட்டதற்கு காரணம் அவற்றை சேகரிப்பதில் நமக்கிருக்கும் ஆர்வமின்மைதான். சின்ன சின்ன செயல்களுக்கும் பெரிய கூலியை அல்லாஹ் வழங்குகின்றான்.அருமை சஹாபாக்கள் நன்மையை அடைந்து கொள்ளும் அமல்கள் என்ன என்பதை ஆர்வத்துடன் நபியவர்களிடம் கேட்டதோடு, அதை உடனடியாக அமுல்படுத்தியும்
காட்டியுள்ளார்கள்.

நான் (நபி(ஸல்) அவர்களிடம்), 'இறைத்தூதர் அவர்களே! அறப்போர் புரிவதை சிறந்த நற்செயலாக நாங்கள் கருதுகிறோம். எனவே, (பெண்களாகிய) நாங்களும் அறப்போர் புரியலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(பெண்களான) உங்களுக்குச் சிறந்த அறப்போர், பாவச் செயல் கலவாத ஹஜ் தான்' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷh(ரலி) நூல்: புஹாரி 2784

ஆண்கள் அறப்போரில் பங்கெடுத்து அதன்மூலம் மிகப்பெரிய நன்மையை ஈட்டிக்கொள்கிறார்களே என்று ஆதங்கம் அடைந்த அன்னையவர்கள் பெண்களுக்கும் இந்த நன்மை கிடைக்காதா என்ற ஆர்வத்தில் அதுபற்றி நபியவர்களிடத்தில் கேட்கிறார்கள் எனில், சஹாபாக்களின் நன்மையை தேடும் தாக்கத்தை புரிந்துகொள்ளலாம்.

ஏழை மக்கள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'பொருளாதாரச் செல்வம் பெற்றவர்கள் நாங்கள் தொழுவது-நோன்பு வைப்பது போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் அவர்கள் தங்கள் பொருளாதாரத்தின் மூலம் ஹஜ் உம்ரா செய்கின்றனர்; அறப்போரிடுகின்றனர்;. தர்மமும் செய்கின்றனர். (ஏழைகளாகிய நாங்கள் இவற்றைச் செய்ய முடிவதில்லை)' என்று முறையிட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும்; ஸுப்ஹானல்லாஹ் 33 முறையும், அல்ஹம்துலில்லாஹ் 33 முறையும் அல்லாஹு அக்பர் 33 முறையும் கூறுங்கள் என்றார்கள். அல்லது 'ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்து லில்லாஹி வல்லாஹு அக்பர்' என்று 33 முறை கூறுங்கள். இதனால் ஒவ்வொரு வார்த்தையையும் 33 முறை கூறியதாக அமையும்' என்று விளக்கம் தந்தார்கள்.            அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புஹாரி 843
மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்...

நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது அல்லது உங்கள் விரிப்புக்குச் செல்லும் போது 33 முறை 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்றும், 33 முறை 'அல்ஹம்துலில்லாஹ்' (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், 34 முறை 'அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்லுங்கள். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதை விடச் சிறந்ததாகும்' என்று கூறினார்கள்.   அறிவிப்பவர்: அலீ(ரலி) நூல்: புஹாரி 5361

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே! அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) ஆதாரம்: புஹாரி 6405

எனவே நன்மையை அள்ளித்தரும் அமல்களை அறிவோம். அதை செயல்வடிவில் கொண்டு வந்து மறுமைக்கான சேமிப்பாக்குவோம் இன்ஷh அல்லாஹ்.

(நன்றி: mugavaiexpress.blogspot.com)

வெளியீடு: தவ்ஹீத் இல்லம் தஃவா குழு

No comments:

Post a Comment