உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, March 31, 2012

கோவை அய்யூப் நிகழ்வில் இஸ்லாத்தை ஏற்ற இருவர்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்


துபை அவ்காஃப் ஏற்பாட்டில் மம்ஸார் அவ்காஃப் அரங்கில் 30.03.2012 வெள்ளியன்று நடைபெற்ற இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்வின் இறுதியில் 2 சகோதரர்கள் இஸ்லாத்தை தங்களின் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டார்கள். எல்லாப் புகழும் வல்லோன் அல்லாஹ்வுக்கே!


தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்ந புஷ்பநாதன் என்ற சகோதரர் யாஸீன் என்றும் பெரம்பலூர் மாவட்டம் அரியலூரை சேர்ந்த செல்வராசு என்ற சகோதரர் உமர் என்றும் தங்களுடைய பெயரை தெரிவு செய்தவர்களாக இஸ்லாத்தினுள் பாலகர்களாய் நேற்று முதல் தவழத் துவங்கினர்.


இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்களுக்கு அவ்காஃப் சார்பாக குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. சொற்பொழிவு நிகழ்ச்சிக்குப் பின், இஸ்லாத்தை ஏற்ற மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முஸ்லீமல்லாத சகோதரர்களுக்கும் சிறப்பு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் சகோதரர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்கள்.


உண்மைதனை உணர்ந்து வரும் மக்கள் அலை முன், கடல் நுரைகளாய் நிறைந்து காணும் இஸ்லாத்தை இலவசமாக பெற்ற பெரும்பான்மைவாத முஸ்லீம்களே! நாம் எப்போது குர்ஆனையும் நபிகளாரின் நடைமுறைகளையும் வாழ்க்கையில் கொண்டு வரப்போகிறோம்? அதுபோல் ஏகத்துவம் பேசிக்கொண்டே இயக்கங்களில் தொலைத்த இஸ்லாத்தை மீட்டெடுக்கப் போவது என்னாளோ?

 
மம்ஸரிலிருந்து மஃஸரை நோக்கி
S.அப்துல் காதர்

No comments:

Post a Comment