அல்லாஹ்வின் அருளால் 09.03.2012 வெள்ளி மாலை மஃரிப் தொழுகைக்குப்பின் துபை மாநகரில், தவ்ஹீத் இல்லத்தில் கூடியது. சுமார் 4 மணி நேரம் நீண்ட அமர்வில் முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டன.
சிறப்பாக, அதிரையிலிருந்து மையப்படுத்தப்பட்டு குர்ஆன் ஹதீஸை பின்பற்றும் சகோதரர்கள் ஒலியலை ஊடாக ஓரலையாய் நேரலையில் சென்னை, துபை, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிலிருந்தும் இணைக்கப்பட்டு மசூரா நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அலசப்பட்ட விஷயங்கள், முடிவுகள் குறித்து நிர்வாகிகள் மூலம் ADT குழுமத்தில் இன்ஷா அல்லாஹ் வெளியிடப்படும்.
இன்ஷா அல்லாஹ் ADT யின் அடுத்த தொடர் அமர்வு எதிர்வரும் 15.03.2012 வியாழன் பின்னேரம் இஷா தொழுகைக்குப்பின் தவ்ஹீத் இல்லத்தில் கூடும் என்றும், குர்ஆன் ஹதீஸை பின்பற்றும் அமீரகம்வாழ் அனைத்து அதிரை சகோதரர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
செய்தியும் நிழற் பதிவும்
S. அப்துல் காதர்
No comments:
Post a Comment