உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, March 4, 2012

கோவை தடா ரபீக் அவர்களுடன் நேர்காணல் (AUDIO)

தடா, அரச பயங்கரவாதத்தின் ஒர் முகம். அந்த அகோர முகம் ஏன் நம் சகோதரனுடன் ஒட்டி உறவாட வேண்டும்? இது அவர் பயின்று வாங்கியதோர் பட்டமா? இல்லையில்லை, இந்த சகோதரனும் கோவையில் ஓர் முஸ்லீமாய் பிறந்ததற்காக அதிகார வர்க்கம் அவர் விரும்பாமலேயே திணித்த பெயர். கடந்து சென்ற கண்ணீர் காலத்தின் ஓர் அடையாளமாய் அவருடன் இன்றும் தேங்கி நிற்கின்றது.


அதெல்லாம் சரி, பேட்டி காணும் அளவுக்கு தடா ரபீக் என்ன சமுதாயத் தலைவரா என சிலர் நினைக்கலாம் ஆனால் ஒரு சில (இயக்க) சமுதாயத் தலைவர்களால், சமுதாயத்தின் பாராமுகத்தால் பாதிக்கப்பட்டவர் என்பது உள்ளம் சுடும் நிஜம்.


அவருடைய சிறைவாழ்வையோ, அதன் காரண காரியங்களோ இங்கே அலசவில்லை மாறாக அவர் உள்ளே செல்லுமுன் அவருடைய குடும்ப நிலை வெளியே வரும் போது அவர் கண்ட குடும்ப நிலை என்ற கோணத்தில் மட்டுமே அவர்களுடன் ஓர் சிறிய நேர்காணல்.




"கோவை சிறைவாசிகள்" ஆனதால் வாழ்ந்து கெட்ட (பொருளாதாரத்தால் சீரழிந்த) நூற்றுக்கணக்கான குடும்பங்களை உணர்ந்து கொள்ள, சகோதரர் தடா ரபீக் ஒரு சோற்றுப்பதம். 


பேட்டியின் போது உடனிருந்த சகோதரர்கள்

தனிப்பட்டதோர் குறுகிய பயணமாய் துபை வருகை தந்துள்ள சகோதரர் தடா ரபீக் அவர்களுடன் AIM வலைதளத்திற்காக உரையாடியது

அதிரை அமீன்

புகைப்படங்கள் : பொறையார் ஜக்கரியா

No comments:

Post a Comment