இன்ஷா அல்லாஹ் இந்த வருட ஹஜ்ஜூப் பெருநாள் திடல் தொழுகை வரும் 07.11.2011 அன்று காலை சரியாக 7.30 மணியளவில் CMP லைன் பகுதியில் அமைந்துள்ள ALMS (EPS) பள்ளி வளாகத்தில் நடைபெறும்.
வழமையாக பெருநாள் தொழுகை நடைபெறும் சானா வயல் திடல், பெய்துவரும் தொடர் மழையால் தொழுகை நடாத்திட தகுதியற்று இருப்பதால் இம்முறை ALMS (EPS) பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிரை ஈத் கமிட்டி அறிவித்துள்ளது.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் வழமைபோல் குறித்த நேரத்திற்குள் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அனைவருக்கும் இதயங்கனிந்த ஹஜ்ஜூப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இப்புனிதமிகு நன்னாளிலே ஏந்தல் ரஸூல் (ஸல்) அவர்கள் அரஃபா பெருவெளியில் ஆற்றிய, வரலாற்று சிறப்புமிக்க, இன்றளவும் முஸ்லீம்கள் பின்பற்றி வரும் உரையின் சாராம்சத்தில் சிலவற்றை கீழ்க்காணும் தொடுப்பை சுட்டி கேட்கலாம்.
No comments:
Post a Comment