உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, November 4, 2011

ஹஜ்ஜின்போது கட்டாயமாக தவிர்க்க வேண்டிய தவறுகள்.







அ) இஹ்ராம் அணிவதில் தவறிழைப்பது
முழு அளவு படத்தைப் பார்1) சில ஹாஜிகள் ஜித்தா விமான நிலையத்தை அடையும் வரைக்கும் இஹ்ராம் அணிவதை தவிர்த்து விடுகின்றார்கள். அதாவது ஹஜ்ஜுச் செய்வதற்குண்டான நிபந்தனைகளில் தலையாததான இஹ்ராம் அணிதல் மற்றும் ஹஜ்ஜிற்கான நிய்யத் வைத்தல், இவற்றை அதற்குரிய மீகாத் என்ற எல்லைகளைக் கடப்பதற்கு முன்பாக நிறைவேற்றி விட வேண்டும் என்பது கட்டாயச் சட்டமாகும். ஆனால், சிலர் ஜித்தா விமான நிலைய எல்லையானது, மீகாத் அல்லவே என நினைத்து, ஜித்தா விமான நிலையத்தில் விமானம் இறங்கும் பொழுது இஹ்ராம் மற்றும் நிய்யத் வைக்காமல் இருந்து விடுகின்றார்கள்.
ஹஜ் மற்றும் உம்ரா செய்ய வருபவர்கள், அதற்குரிய எல்லைகளில் இஹ்ராம் அணிந்து விட்டு வருவதற்கு அந்தந்த பகுதிகளுக்கென்றே உள்ள எல்லைகளை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டி விட்டுச் சென்றிருக்கின்றார்கள்.

எனவே, ஹஜ் அல்லது உம்ரா செய்ய விரும்புகின்ற ஒருவர், இந்தக் குறிப்பிட்ட எல்லைகளைக் கடக்கும் பொழுது இஹ்ராம் அணிந்திருப்பதுடன், ஹஜ்ஜுக்கான நிய்யத்தையும் வாயால் மொழிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

இதுவன்றி, குறிப்பிட்ட மீகாத் எல்லைகளை இஹ்ராம் அணியாமலும், நிய்யத் செய்து கொள்ளாமலும் கடந்து விடுவாராகில், அந்த மனிதர் ஒரு பாவத்தைச் செய்தவராகி விடுகின்றார். இதற்குப் பரிகாரமாக அவர் ஒரு ஆட்டைப் பலி கொடுக்க வேண்டும்.
ஜித்தாவை மீகாத்தாகக் கொள்வது என்பது, ஜித்தாவை இருப்பிடமாகக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே உரித்தானதாகும். எனவே,

ஜித்தாவாசிகளுக்கான மீகாத் அவரவர் இல்லங்களேயாகும்.
இந்த சட்டம் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்குப் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் ஒன்று தங்களது புறப்பாடு நடைபெறுகின்ற இடத்தில் வைத்து இஹ்ராம் அணிந்து கொள்வது மற்றும் நிய்யத் செய்து கொள்வது. அல்லது விமானம் ஜித்தாவை நெருங்குவதற்கு சற்று 15 நிமிடங்களுக்கு முன்னால் இஹ்ராமை அணிந்து கொண்டு, நிய்யத்தும் செய்து கொள்வது. இது தான் மிகச் சிறந்த முறையாகும்.

2) சிலர் இஹ்ராமை அணிந்து கொண்ட பின், புகைப்படம் எடுத்துக் கொள்கின்றார்கள். இந்தப் புகைப்படத்தை தங்களது நண்பர்கள், உறவினர்களிடம் காட்டுவதற்கும், தங்களது ஞாபகார்த்தத்திற்காகவும் வைத்துக் கொள்கின்றார்கள். இது தவறானதொரு செயலாகும். ஏனென்றால்,
ஒருவர் அத்தியவசியமல்லாத ஒன்றிற்காக ஒருவர் தன்னைப் புகைப்படம் எடுத்துக் கொள்வது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்திருக்கும் வழிமுறைக்கு மிகவும் முரண்பாடான செயலாகும். இவ்வாறு புகைப்படம் எடுக்கக் கூடியவர்களை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபிமொழிகள் எச்சரிக்கின்றன என்பது குறித்து அவர்களுக்கு ஞாபகமூட்டி எச்சரிக்கை செய்ய வேண்டும். ஒரு நன்மையான காரியத்தைத் தொடங்குகின்ற ஒருவர், பாவமான காரியத்தைச் செய்து விட்டு நன்மையான காரியத்தைத் தொடங்குவது முரணான செயலாகும்.

இவ்வாறு நீங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டு, பிறரிடம் காட்டுவதன் மூலம் அதனைப் பார்க்கக் கூடியவர், என்ன இந்த மனிதர் ஹஜ்ஜுச் செய்து வந்து விட்டேன் என்பதைப் பெருமையடித்துக் கொண்டு திரிகின்றாரே என்று உங்களைத் தவறாகவும் எண்ணக் கூடும். இவ்வாறு பெருமையடிப்பது, உங்களது வழிபாட்டிற்கான கூலியை – நன்மையைப் பாழடித்து விடும். இது நயவஞ்சகர்களது நிலையாகும்.

3) இன்னும் சிலர் இஹ்ராம் அணிய ஆரம்பித்த பொழுது எதனைத் தங்களுடன் வைத்திருந்தார்களோ, அதாவது காலணிகள், பணம் மற்றும் தேவையான பொருட்களில் எதனை வைத்திருந்தார்களோ அதனை கடைசி வரைக்கும் அணிந்திருப்பது மற்றும் பயன்படுத்துவது. இன்னும் இஹ்ராமை ஆரம்பிக்கும் பொழுது எதனைத் தன்னோடு வைத்திருக்கவில்லையோ அதனைப் பயன்படுத்த மறுப்பது. இது மிகப் பெரும் தவறாகும். இஹ்ராம் அணிந்திருக்கின்ற நிலையில் உங்களுக்குத் தேவைப்படும் எந்தப் பொருளையும் வாங்கலாம், பிறரிடம் பெற்றுக் கொள்ளலாம், இன்னும் இஹ்ராமைக் கூட மாற்றி அணிந்து கொள்ளலாம். இன்னொரு புதிய இஹ்ராமைக் கூட வாங்கி அணிந்து கொள்ளலாம். அதுபோல அணிந்திருக்கின்ற காலணிகள் தொலைந்து விட்டாலோ அல்லது பழுதாகி விட்டாலோ இன்னொரு காலணிகளை வாங்கி அணிந்து கொள்ளலாம். இவற்றில் எதுவுமே இஹ்ராமையோ அல்லது ஹஜ்ஜையோ பாதித்து விடாது.

இஹ்ராம் அணிந்திருக்கின்ற நிலையில் இருக்கக் கூடிய ஆண், எப்பொழுதும் தனது தோள் புஜங்களை இஹ்ராமைக் கொண்டு மறைத்தே வைத்திருக்க வேண்டும். அவ்வாறல்லாமல், தோள் புஜங்கள் தெரிய விட்டுக் கொண்டு இருப்பது தவறாகும். தவாஃபின் ஆரம்ப மூன்று சுற்றுக்களில் மட்டுமே ஒருவருக்கு வலது தோள் புஜம் திறந்திருக்க வேண்டியது சுன்னத்தாகும். அதுதவிர மற்ற நேரங்களில் மூடியே வைத்திருக்க வேண்டும்.

4) சில பெண் ஹாஜிகள் இஹ்ராம் உடையானது ஒரு குறிப்பிட்ட கலரில் தான் அமைந்திருக்க வேண்டும் என்று நினைப்பது தவறாகும். உதாரணமாக, பச்சை நிறம். பெண்களைப் பொறுத்தவரை, இஹ்ராம் அணிவதற்கு ஒரு குறிப்பிட்ட உடையோ அல்லது நிறமோ அவசியமல்ல. அலங்காரம் செய்யப்பட்ட, இறுக்கமான அல்லது உடலுறுப்புக்களை வெளிக்காட்டும் அளவில் உள்ள உடைகள் தான் அணிவதற்குத் தடை செய்யப்பட்டவைகள். இத்தகைய உடைகளை சாதாரண நாட்களிலும் இன்னும் ஹஜ்ஜின் பொழுது இஹ்ராமாகவும் அணியத் தடை செய்யப்பட்டிருக்கின்றன.

5) இன்னும் சில பெண்கள் இஹ்ராமின் பொழுது, தங்களது முகத்தை மூடிக் கொண்டிருக்கின்ற துணியை விலக்கி விட்டு விடுகின்றார்கள். இதுவும் தவறானதாகும். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் அறிவிப்பின்படி, பெண்கள் தங்களது முகத்தை அந்நிய ஆடவர் பார்க்காதிருக்கும் பொருட்டு, மூடியே வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். முகத்தை மூடக் கூடிய துணி, முகத்தை மறைப்பது தவறாக மாட்டாது.

6) தொடக்கு நிலையில் உள்ள பெண்கள், மீகாத் எல்லைக்கு வந்து விட்ட பிறகு தங்களுக்கு தொடக்கு ஏற்பட்டு விட்டதை கண்டவுடன், நமக்குத் தான் தொடக்காகி விட்டதே, இனி நாம் மீகாத் எல்லையில் இஹ்ராம் மற்றும் நிய்யத் வைக்க வேண்டியதில்லை. இஹ்ராம் மற்றும் நிய்யத் செய்து கொள்வதற்கு தூய்மையான நிலை அவசியமாயிற்றே என்று கருதி, இஹ்ராம் மற்றும நிய்யத் செய்து கொள்ளாமலேயே மீகாத்தைக் கடந்து விடுகின்றார்கள். இது பொதுவாக நடைபெறுகின்ற தவறாகும், மாதாந்திரத் தீட்டானது ஒருத்தி இஹ்ராம் மற்றும் நிய்யத் செய்து கொள்வதற்குத் தடையாக அமையாது. எனவே, மாதாந்திரத் தீட்டுக் கண்ட பெண், மீகாத் எல்லையில் இஹ்ராம் மற்றும் நிய்யத் செய்து கொள்வதோடு, தவாஃப் என்ற வலம் வருதலைத் தவிர ஏனைய ஹஜ்ஜின் அனைத்து கிரியைகளிலும் கலந்து கொள்ள வேண்டும். இது அவளது மாதாந்திரத் தீட்டி நிற்கும் வரைக்கும் இந்த நிலையில் தொடர்ந்திருக்க வேண்டும்.
ஒரு பெண், இஹ்ராம் மற்றும் நிய்யத் செய்யாமல் மீகாத் எல்லையைக் கடந்து விட்டாளென்று சொன்னால், அவள் மீண்டும் மீகாத்திற்குச் சென்று அங்கு வைத்து இஹ்ராம் அணிந்து பின் நிய்யத் செய்து கொண்டு மக்காவிற்குள் பிரவேசிக்க வேண்டும். அவ்வாறில்லா விட்டால், அவள் இதற்குப் பகரமாக ஒரு ஆட்டை பலி கொடுக்க வேண்டும்.

ஆ) தவாபின் பொழுது
முழு அளவு படத்தைப் பார்1) ஹாஜிகளில் பலர் தங்களது கைகளில் ஒரு குறிப்பிட்டதொரு வகை, துஆக்களைக் கொண்ட புத்தகத்தைத் தங்களது கைகளில் வைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம். குழுவாக வரக் கூடிய மக்கள், இந்தப் புத்தகத்தைப் பார்த்து வாசிக்க, அவரைத் தொடர்ந்து வரக் கூடிய அவரது குழுவினர்கள் உரத்த குரலில் அவர் கூறக் கூடியதைத் திருப்பிச் சொல்லக் கூடியவர்களாக இருப்பார்கள். இது இரு வகைகளில் தவறான செயலாகும். ஏனென்றால் :
அவர் எதனைத் துஆக்கள் என்று வாசித்துக் கொண்டிருக்கின்றார்களோ, அதனை தவாஃபின் பொழுது வாசிக்க வேண்டும் என்று சொல்லி இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தரவில்லை. தவாஃபின் பொழுது கேட்பதற்கான சிறப்பான துஆக்கள் என ஏதுமில்லை.
கூட்டாகத் துஆக் கேட்பது மார்க்கத்தில் புகுத்தப்பட்டுள்ள நவீனம் அல்லது நூதனச் செயல் (பித்ஆ) ஆகும். ஒவ்வொரு ஹாஜியும் தனக்குத் தெரிந்த துஆக்களை அல்லது தான் விரும்பும் துஆக்களை மிக மெதுவான குரலில் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

2) சில ஹாஜிகள் ருக்னுல் யமானி என்ற யமனி முனைக்கு முத்தம் கொடுக்கின்றார்கள். இந்த இடத்தை கைகளினால் தொடாலமே ஒழிய, முத்தமிடக் கூடாது. முத்தமிடுவதற்கென்று உள்ளது ஹஜருல் அஸ்வத் என்ற கறுப்புக் கல் மட்டுமேயாகும். இதனையும் கூட கூட்ட நெரிசலின் காரணமாக இயலாவிட்டால், கைகளினால் தொடுவது அல்லது சைகை செய்து விட்டுக் கடந்து செல்வது தான் நல்லது. எனவே, யமானி முனையைப் பொறுத்தவரை அதனைத் தொடலாமே ஒழிய முத்தமிடக் கூடாது. கூட்டமாக இருந்தால் தொடக் கூட அவசியமில்லை.

3) இன்னும் சிலர் ஹஜருவல் அஸ்வத் கல்லை முத்தமிட வேண்டும் என்பதற்காக பிறரை இடித்துக் கொண்டும் தள்ளிக் கொண்டும் செல்கின்றார்கள், இவ்வாறு செய்வது பிறரைத் துன்புறுத்துவதாகும். இதனால் பிறர் பாதிக்கப்படலாம் அல்லது பெண்களை இடித்து அல்லது அவர்கள் மீது விழுந்து விடவும் வாய்ப்பு ஏற்பட்டு விடும். இது மிகப் பெரும் தவறான செயலாகும். ஒன்று ஹஜருல் அஸ்வத் கல்லை முடிந்தால் பிறருக்குத் தொந்தரவில்லாமல் அதனை முத்தமிடுவது அல்லது தொடுவது. மேற்கண்ட இரண்டும் இயலாவிட்டால், அதனை நோக்கிச் சைகை செய்வதே மேலானதாகும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சுன்னாவை நிறைவேற்றுவதற்கு, இஸ்லாம் தடை செய்திருக்கின்றதொரு செயலைச் செய்து விட்டுத் தான் அதனை நிறைவேற்ற வேண்டுமா? சிந்திக்க வேண்டும்.

இ) முடிகளைக் களைவது

சிலர் ஹஜ் மற்றும் உம்ராவை நிறைவேற்றி விட்டவுடன், தலைமுடிகளில் சிலவற்றைக் கத்தரித்துக் கொள்வது போதுமென்று நினைக்கின்றார்கள். இது தவறானதாகும். ஒன்று தலைமுடியை முற்றிலும் சிரைத்து மொட்டையடித்துக் கொள்வது அல்லது தலைமுழுவதும் ஒரே அளவில் வெட்டிக் கொள்வது (மிஷின் உபயோகிப்பது). அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான், ''உங்களது தலைமுடியை மழித்துக் கொள்ளுங்கள் அல்லது வெட்டிக் கொள்ளுங்கள்"".., இங்கே சில முடிகளை மட்டும் வெட்டிக் கொள்வது என்பது அனைத்து முடிகளையும் வெட்டிக் கொள்வதற்கு ஈடாகாது.
ஈ) அரஃபாத் நிகழக் கூடிய தவறுகள்
முழு அளவு படத்தைப் பார்
1) அரஃபாத் நுழையக் கூடிய ஒருவர், அரஃபாத்தின் எல்லைகளைக் காண்பிக்கக் கூடிய அறிவிப்புப் பலகைகளைப் பார்க்காமல், எல்லை எதுவென்றே தெரியாமல் நின்று கொண்டிருக்கின்றார்கள். அதாவது, அவர்கள் அராஃபாவுக்கும் வெளியே சில போது நின்று கொண்டிருக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். இந்த நிலையில் இருக்கக் கூடிய ஒருவரது ஹஜ் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக மாட்டாது. எனவே, ஹாஜிகள் இதில் அதிகக் கவனம் செலுத்தி, தாங்கள் நின்று கொண்டிருப்பது அரஃபாவின் எல்லைகள் தானா என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டும்.

2) சிலர் தாங்கள் நின்று கொண்டிருக்கக் கூடிய இடத்திலிருந்து அரஃபா குன்றைத் தங்களது கண்களால் பார்க்க வேண்டும் என்று விரும்புவதோடு, இன்னும் சிலர் தங்களை வருத்திக் கொண்டு அரஃபா மலைமீது ஏறக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இது தேவையான செயலல்ல. அவர் நின்று கொண்டிருக்கின்ற அரஃபா எல்லையே அவரது ஹஜ்ஜைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமானதாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''முழு அரஃபாவுமே நிற்பதற்கான எல்லைகள் தாம்"". இன்னும் சிலர் கஃபாவை முன்னோக்கித் தொழுவது போல, அரஃபா மலையை முன்னோக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இதுவும் தவறானதாகும். கஃபாவை மட்டுமே தொழுகைக்கு முன்னோக்க வேண்டும்.

3) இன்னும் சிலர் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாகவே அரஃபாவை விட்டும் கிளம்பி விடுகின்றார்கள். அரஃபாவை விட்டுக் கிளம்புவது என்பது, சூரிய அஸ்மனத்திற்குப் பின்பு தான் நடைபெற வேண்டும். அவ்வாறு அஸ்தமனத்திற்கு முன்பாகக் கிளம்பக் கூடியவர்கள், ஹஜ்ஜின் முக்கியமானதொரு கிரியை விட்டு விட்ட குற்றத்திற்கு ஆளாவதோடு, அதற்காக அவர் ஒரு ஆட்டைப் பலியிட வேண்டும், இன்னும் பாவ மன்னிப்பும் கோர வேண்டும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், சூரிய அஸ்தமனம் வரைக்கும் அரஃபாவில் தங்கி இருக்கின்றார்கள். ஹஜ்ஜின் கிரியைகளிம் போது, இவ்வாறே நடந்து கொள்ளும்படி தனது தோழர்களுக்கும் அவர்கள் ஏவியும் உள்ளார்கள்.
உ) முஸ்தலிஃபாவில் நிகழக் கூடிய தவறுகள்
முஸ்தலிஃபாவை அடைந்தவுடன், அங்கு மஃக்ரிப் மற்றும் இஷாத் தொழுகைகளை சேர்த்துத் தொழுது விட்டு, மறுநாள் சூரிய உதயம் வரைக்கும் அங்கு தங்கியிருக்க வேண்டும். சூரிய உதயத்திற்கு முன்பாக தங்களுக்குத் தேவையான துஆக்களைச் செய்து கொள்ள வேண்டும். அதனையடுத்து மினாவை நோக்கிச் செல்ல வேண்டும். ஹாஜிகளில் பெண்கள், குழந்தைகள் மற்றும் இயலாத வயோதிகர்கள் இன்னும் இத்தகையவர்களைக் கவனிக்கும் நிலையில் உள்ளவர்கள், நடுஇரவுக்குப் பின் மினாவுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. முஸ்தலிஃபாவில் தங்கியிருக்கக் கூடிய ஒருவர் தான் முஸ்தலிஃபாவுக்கான எல்லைக்குள் தான் தங்கியிருக்கின்றோமா என்பதைப் பற்றி அறிந்து கொள்ளாமலேயே தங்கி இருக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இன்னும் சிலர் நடு இரவுக்கு முன்பதாகவே முஸ்தலிஃபாவை விட்டும் கிளம்பி, மினாவுக்குச் செல்;லக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இது தவறான நடைமுறையாகும்.

இத்தகையவர்கள், ஹஜ்ஜின் கிரியைகளில் குறைகளில் ஒன்றை விட்டு விட்ட குற்றத்திற்காக ஒரு ஆட்டைப் பரிகாரமாகப் பலியிட வேண்டும். அதற்காக பாவ மன்னிப்புக் கோரவும் வேண்டும்.
ஊ) ஜமராத்தில் நிகழக் கூடிய தவறுகள்

Engr.Sulthan
நன்றி:nidur.inf
ஹஜ்ஜின் பொழுது ஜம்ராக்களின் மீது (ஷைத்தானிற்கு) கல் எறிவது முக்கியமான நடைமுறையாகும். இந்த கிரியையானது முஸ்தலிபாவிலிருந்து இயலாதவர்களும் பெண்களும் கிளம்பி வந்து துல்ஹஜ் 11ன் அதிகாலை, இன்னும் மற்றவர்களுக்கான மதிய வேளையான 11ம் நாள் மற்றும் 12, 13ம் நாள்களில் கல் எறிய வேண்டியது அவசியமாகும். இருப்பினும் இதில் சிலர் தவறிழைத்து விடுகின்றார்கள். அதாவது,

1) முஸ்தலிபாவில் இருந்து கிளம்பக் கூடியவர்கள் நடு இரவு தாண்டுவதற்கு முன்பாக வந்து மினாவில் உள்ள மூன்று ஜம்ரத்களிலும் கல்லெறிவது அல்லது அதனை அடுத்து வரக் கூடிய 11 ம் நாளின் மதிய வேளை தாண்டுவதற்கு முன்பாக கல்லெறிந்து விடுவது, ஆகிய தவறுகளைச் செய்து விடுகின்றார்கள். ஒன்று இதனை அந்தக் குறிப்பிட்ட நிர்ணயிக்கப்பட்ட நேரத்திலே தான் செய்ய வேண்டுமே ஒழிய, எந்த நேரத்திலும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றிருக்கக் கூடாது. தொழுகையை அதனதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தான் தொழ வேண்டுமே ஒழிய, நாமே தீர்மானித்திருக்கின்ற ஒரு நேரத்தில் தொழ முடியாதே..! இதைப் போலவே நிர்ணயிக்கப்பட்டிருக்கின்ற நேரத்தில் தான் அதனதன் கிரியைகளைச் செய்ய வேண்டும்.

2) இன்னும் சிலர், ஜம்ரத்க்களினைக் கல்லெறியும் பொழுது வரிசைக் கிரமமாகச் சென்று எறிய வேண்டுமே என்றில்லாமல், தாங்கள் நினைத்தபடி கல்லெறிந்து விட்டு வந்து விடுகின்றார்கள். அதாவது முதலில் சின்ன ஜம்ரத்தையும், பின் நடு ஜம்ரத் இறுதியாக கடைசியில் உள்ள பெரிய ஜம்ரத்திற்கும் கல்லெறிய வேண்டும். இந்த வரிசைக்கிரமம் தவறி, கல்லெறியக் கூடாது.

3) இன்னும் சிலர் தூரத்தில் நின்று கொண்டு கல்லெறிகின்றார்கள். இதனால் கல் விழக்கூடிய தொட்டியினுள் விழாமல் கல் தொட்டியை விட்டும் வெளியே விழுந்து விடுகின்றது. இவ்வாறு எறிவதானது கல்லெறிவதற்குண்டான நிபந்தனையைப் பூர்த்தி செய்யாது. இது அறியாமையும், பொடுபோக்குத் தனம் அல்லது கவனமின்மையின் காரணமாக நிகழக் கூடியதாகும்.

4) இன்னும் சிலர் முதல் நாள் கல்லெறிவதுடன், இரண்டாம் மற்றும் மூன்றாம் நாளுக்கான கல்லையும் எறிந்து விட்டு, பொருளாதார வசதி மற்றும் இயலாமை காரணமாக, தங்களது இருப்பிடங்களுக்கு அல்லது நாடுகளுக்குத் திரும்பக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இன்னும் சிலர் தங்களுக்காக யாரையாவது கல்லெறிய நியமித்து விட்டுச் சென்று விடுகின்றார்கள். இது ஒரு விளையாட்டுத் தனமான செயலாகும். இவ்வாறு செய்வதன் காரணமாக ஷைத்தான் இத்தகையவர்களை வழிகெடுத்து விட்டான். மிகுந்த பொருட்செலவு, கஷ்டம், உடல் உழைப்பு ஆகியவற்றை மேற்கொண்டு பல மைல்களுக்கும் அப்பால் இருந்து ஹஜ் செய்ய வரக் கூடியவர்கள், ஆக அதிகபட்சமான அனைத்து கிரியைகளையும் முடித்து விட்டு, இன்னும் சில ஒன்றிரண்டு நாட்கள் இருந்து ஹஜ்ஜின் மீதிக் கிரியைகளையும் நிறைவாகச் செய்து விட்டுச் செல்வதனை விட்டு விட்டும், பயண தவாஃபை அதற்குரிய நேரம் வருவதற்கு முன்பாகவே நிறைவேற்றி விட்டும் செல்வது, இவ்வாறு செய்யக் கூடியவர்கள் தங்களது பயணத்திற்குத் தேவையான அளவு பண வசதியைப் பெற்றிருக்கவும் இல்லை, இன்னும் அதிகமான கஷ்டம் மற்றும் சிரமத்திற்குத் தங்களை ஆளாக்கிக் கொண்டதோடு, இவர்கள் ஹஜ்ஜையும் முழுமையாக நிறைவேற்றவும் இல்லை என்பது எவ்வளவு வருத்தத்திற்குரியது.

5) இன்னும் சில ஹாஜிகள் மினாவில் தரித்திருப்பதை தவறாகக் கணக்கிட்டு விடுகின்றார்கள். 10 ஆம் நாளும், 11ம் நாளும் என்று எண்ணிக் கொண்டு, 11 ஆம் நாள் அன்று கிளம்பி விடுகின்றார்கள். இது தவறானது. ஏனென்றால், மினாவில் தரித்திரிப்பது என்பது 10 நாளைத் தொடர்ந்து வரக் கூடிய 11 மற்றும் 12 ம் நாளாகும். எனவே, 11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்கள் அல்லது 11, 12, 13 ஆகிய மூன்று நாட்கள் தங்கி, ஜம்ரத்களுக்கு கல்லெறிந்து விட்டுச் செல்வது சிறப்பானதாகும்

No comments:

Post a Comment