உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, March 5, 2012

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தனது சில வழித்தடங்களில் இயங்கும் விமானங்களின் நேரம் மற்றும் வழித்தடங்கள் மாற்றம் செய்து உள்ளது. அதிலும் குறிப்பாக தமாம், துபாய், குவைத், ஜித்தா, ரியாத் மற்றும் பஹரைன் ஆகிய வளைகுடாவில் இருந்து செல்லும் விமானங்களின்  கால நேரம் மாற்றி அமைகப்பட்டுள்ளது. 

இதனால் குவைத்திற்கான பயண நேரம் 3 மணி அளவிற்கு குறையும் என் எதிர்பற்க்கபடுகிறது . என் என்றல் இது நாள் வரைக்கும் கொலும்புவில் இருந்து துபாய் வழியாக குவைத்திற்கு சென்றுகொண்டு இருந்த விமானம் இனி வரும் 2012 மே 1ன்னு முதல் கொழும்புவில் இருந்து நேரடியாக குவைத்திற்கு சென்று வரும்.
இங்கு பர்க்கவும்

கொலும்பு - பஹரைன் விமான சேவை மிஹின் லங்கா மூலம் இயக்கப்படும்

இனி கொழும்புவில் இருந்து திருச்சி வரும் விமானம்களை பார்க்கலாம்
இனி திருச்சியில் இருந்து கொழும்புசெல்லும் விமானம்களை பார்க்கலாம்

கொழும்பு - துபாய் ( இனி துபாயில் இருந்து குவைத் செல்லாது)
கொழும்பு- குவைத் ( இனி துபாய் செல்லது)

குவைத்தில் இருந்து திருச்சி செல்லும் பயணிகளுக்கு சில சவுகரியங்களும், சில அசவ்கரியங்களும் உள்ளன.
மேலுள்ள அட்டவனை பார்த்தல், அதில் குவைத்தில் இருந்து இனி தினமும் இரவு 10:15 புறப்படும் விமானம் துபாய் செல்லாமல் நேராக கொழும்பு செல்வதால் காலை 06:05 வந்து சேரும், கொழும்புவில் இருந்து 07:30 மணிக்கு புறப்பட்டு 08:30 திருச்சி வந்தடையும் , இதை விட்டல் மதியம் 13:40 க்கும் 14:30க்கும் ஆக மொத்தம் தினம் 3 சேவைகள் உள்ளன.
அதேபோல் திருச்சியில் இருந்து குவைத் வரும்போதும் காலை 09:20 புறப்படும் விமானத்தில் செல்லாமல் மதியம் 15:30 கும் 16:30கும் புறப்படும் விமானத்தில் சென்றால் கொழும்புவில் இருந்து மாலை 18:15 க்கு புறப்பட்டு இரவு குவைத் நேரப்படி 21:20 வந்து சேரும். இதனால் பாக்கத்து மாவட்டத்தில் இருந்து வரும் பயணிகள் இனி அதிகாலையில் புறப்படாமல், மதியம் வந்து சேர்வதுபோல் புறப்படலாம். 
குவைத்தில் இருந்து புதன் கிழமை இரவு புறப்படும் பயணிகளுக்கு மறுநாள் வியாழக்கிழமை காலை கொழும்புவில் இருந்து 07:30 மணிக்கு புறப்பட்டும் சேவை கிடையாது. இதனால் மதியம் 13:40 கும் 14:30கும் புறப்படும் விமானத்தில் தான் வரவேண்டும்.


இது எல்லாம் இருந்தாலும் நமக்கு என்று குவைத்தில் இருந்து நேரடி திருச்சி சேவை இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். எலி வலை ஆனாலும் தனி வலை ..............

Thanks to : http://edumalai.blogspot.com/2012/03/blog-post_05.html

Sunday, March 4, 2012

கோவை தடா ரபீக் அவர்களுடன் நேர்காணல் (AUDIO)

தடா, அரச பயங்கரவாதத்தின் ஒர் முகம். அந்த அகோர முகம் ஏன் நம் சகோதரனுடன் ஒட்டி உறவாட வேண்டும்? இது அவர் பயின்று வாங்கியதோர் பட்டமா? இல்லையில்லை, இந்த சகோதரனும் கோவையில் ஓர் முஸ்லீமாய் பிறந்ததற்காக அதிகார வர்க்கம் அவர் விரும்பாமலேயே திணித்த பெயர். கடந்து சென்ற கண்ணீர் காலத்தின் ஓர் அடையாளமாய் அவருடன் இன்றும் தேங்கி நிற்கின்றது.


அதெல்லாம் சரி, பேட்டி காணும் அளவுக்கு தடா ரபீக் என்ன சமுதாயத் தலைவரா என சிலர் நினைக்கலாம் ஆனால் ஒரு சில (இயக்க) சமுதாயத் தலைவர்களால், சமுதாயத்தின் பாராமுகத்தால் பாதிக்கப்பட்டவர் என்பது உள்ளம் சுடும் நிஜம்.


அவருடைய சிறைவாழ்வையோ, அதன் காரண காரியங்களோ இங்கே அலசவில்லை மாறாக அவர் உள்ளே செல்லுமுன் அவருடைய குடும்ப நிலை வெளியே வரும் போது அவர் கண்ட குடும்ப நிலை என்ற கோணத்தில் மட்டுமே அவர்களுடன் ஓர் சிறிய நேர்காணல்.




"கோவை சிறைவாசிகள்" ஆனதால் வாழ்ந்து கெட்ட (பொருளாதாரத்தால் சீரழிந்த) நூற்றுக்கணக்கான குடும்பங்களை உணர்ந்து கொள்ள, சகோதரர் தடா ரபீக் ஒரு சோற்றுப்பதம். 


பேட்டியின் போது உடனிருந்த சகோதரர்கள்

தனிப்பட்டதோர் குறுகிய பயணமாய் துபை வருகை தந்துள்ள சகோதரர் தடா ரபீக் அவர்களுடன் AIM வலைதளத்திற்காக உரையாடியது

அதிரை அமீன்

புகைப்படங்கள் : பொறையார் ஜக்கரியா

Friday, March 2, 2012

ஆமா, இவரு பெரிய விஞ்ஞானி!

தன்னை பார்த்து ஏளனமாக சொல்லப்பட்ட மேற்படி தலைப்பையும் தாண்டி 'ஆமாம், இவர் நல்ல மனிதர்' என்ற நிலையில் நம்மை விட்டும் கடந்த வருடம் மறைந்துவிட்ட KSM முஹம்மது இஸ்மாயில் அவர்களை குறித்த ஒரு சிறிய நினைவலை.

நாங்கள் அறிந்து மேலத்தெருவிலிருந்து முதன்முதலில் SFO(Social Forest Officer), Acting Deputy BDO-வாக அரசாங்க உத்தியோகம் பார்த்தவர். முறைகேடாக தானும் சம்பாதிக்காமல் மற்றவர்களையும் சம்பாதிக்கவிடாதவர் (பிழைக்கத் தெரியாதவர்) என்று சக அலுவலர்கள் மத்தியில் சிறப்புப் பெயர் பெற்றவர்.

விருப்ப ஓய்வுக்குப்பின்னும் வீட்டோடு முடங்கிவிடாமல் அதிரை பைத்துல்மால், தேசிய லீக், மேலத்தெரு சங்கம், அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளிவாசல் நிர்வாகம் என பறந்த தேனீ.

அதிலும் தன் இறப்புக்கு முன், அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளிவாசலுக்காக நிலம் வாங்குதல், கட்டுமானம், நிர்வாகம் என அனைத்து வகையிலும் தான் முறையாக பாரமரித்து வந்த பள்ளியின் கணக்கு வழக்குகளை முறைப்படி ஒப்படைத்த நம் சம காலத்திய அதிரையின் ஒரே நேர்மையாளர். இறுதி மூச்சு வரை உண்மையை மட்டுமே எங்கும் பேசியதால் இயற்கையான எதிர்ப்புகளின் சொந்தக்காரர். தன்னை எதிரியாக பாவித்த தெருத்தலைவர்களை கூட முகத்துக்கு முகம் மட்டுமே சந்தித்தவர், அதே தலைவர்களை சகோதர வாஞ்சையுடன் தெருவின் நன்மைக்காக மீண்டும் மீண்டும் வலியச்சென்று சந்திக்கத் தயங்காதவர்.

எங்கள் நட்பு வட்டாரத்தால் இஸ்மாயில் மாமா என அன்புடன் அழைக்கப்பட்டவர், தன் இரத்த சொந்த பந்தங்கள் மட்டுமின்றி மேலத்தெரு குடும்பங்களின் தலைமுறை கடந்த உறவுகளையும் புள்ளி பிசகாமல் எடுத்து சொல்லும் நினைவாற்றல் மிக்கவர்.


(செடியன்குளம் இந்த வருட மழைநீரால் நிரம்பிய போது எடுத்த படம்) நன்றி : சேக்கனா M. நிஜாம்

அதெல்லாம் சரி, தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது சகோதரர்களே! நமக்காக, நமது வாரிசுகளுக்காக ஒருமுறை தனி மனிதராக போராடியபோது கிடைத்த அவமரியாதை சொல் ஆனால் பொருந்தியதோ தெருகூடிச் செய்த பாவத்தில் பங்கில்லா நம் சந்ததிகளுக்கு.

குளிரிலும் இதமான, சுற்றிலும் பனை, தென்னை, மூங்கில், தாழை, கருவை, மருதம், அழிஞ்சி, வேப்பை என மரங்கள் நிறைந்த பசுஞ்சோலைக்கு நடுவே ஏரியின் பொழிவில் ஓர் குளம், ஒன்றாம் கரை, இரண்டாம் கரை, மூன்றாம் கரை, பெரிய கரை (ஐந்தாம் கரை), (பாதுகாப்பான) பெண்கள் கரை எனவும், காலை முதல் மாலை வரை பல்லாயிரக்கணக்கானோர் விரும்பி குளித்த நிலையிலும் தெளிவான தண்ணீராக வருட முழுவதும் நிறைந்திருந்த செடியன்குளம் காட்சிகளை உங்கள் மனத்திரையில் சற்றே ரீவைண்ட் செய்து பாருங்கள், நம் சந்ததிகள் நிரந்தரமாய் இழந்துவிட்ட அருமை புரிகிறதா?

சில வருடங்களுக்கு முன், ஜூம்ஆ பள்ளியில் செடியன்குளத்தை புல்டோசர் இயந்திரம் மூலம் ஆழப்படுத்த, சுத்தம் செய்ய ஒரு ஆலோசணை நடைபெறுகிறது. விஷயத்தை கேள்விப்பட்ட KSM இஸ்மாயில் மாமா அவர்கள் அழைப்பின்றி விரைந்தோடுகின்றார். புல்டோசர் வேண்டாம் என மன்றாடுகிறார், வேண்டுமானால் குளத்தின் மத்தியில் உரையும் சேற்றை அப்புறப்படுத்த மட்டும் புல்டோசரை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கெஞ்சுகிறார்.

காரணம், அழுக்கை உண்டு நீரை சுத்தம் செய்யும் வேலம் பாசிகளை ஒருமுறை அடியோடு அப்புறப்படுத்தினால் மீண்டும் அதே இடத்தில் வளரச் செய்ய இயலாது. புல்டோசர் மூலம் ஆழப்படுத்தினால் தண்ணீரை சுத்தப்படுத்தும் பாசிகளும் குளத்து மண்ணுள் கலந்திருக்கும் பாசியின் விதைகளும் அப்புறப்படுத்தப்பட்டுவிடும், கரைகள் மறைந்துவிடும், மரங்கள் அழிந்துவிடும் இதனால் தண்ணீர் கெட்டுவிடும் என சுற்றுச்சூழலை அனுபவத்தில் படித்த மேதை பதறுகிறார் அப்போது குழுமியிருந்தோரில் ஒரு சில கருத்துக் குருடர்கள் வழங்கிய பட்டம் தான் 'ஆமா! இவரு பெரிய விஞ்ஞானி'

மீன் வளர்ப்பு மற்றும் மண் வளத்தை சுரண்டுவதன் மூலம் வரும் லாபத்தை மட்டுமே பார்த்தவர்களால் புல்டோசர் கொண்டு அனைத்தும் முற்றாக அழிக்கப்பட்டன. இன்று செடியன்குளம் என்பது பாசியில்லா, கரைகளில்லா, மரங்களில்லா, தண்ணீர் வரத்திற்கு வழியற்ற, குளிக்க லாயக்கற்ற, நாதியற்ற, அசுத்த நீர் தேங்கியுள்ளதோர் பிரமாண்ட பள்ளம்.

இது மழை நீரால் வருடந்தொறும் ஒருமுறை நிரம்பும் மீண்டும் இருமாதங்களுக்குள் நாற ஆரம்பித்துவிடும், தானாக நாற தாமதித்தாலும் மீன்களின் இரட்சகர்கள் நாறவைத்துவிடுவார்கள்.

நமதூர் CMP வாய்க்கால் நீர் வரத்தின்றி தூர்ந்தது போலவே CMP லைனிலிருந்து தென்னந்தோப்புகள் வழியாக செடியன்குளத்திற்கு தண்ணீர் வந்த பாதைகளின் மேல் மார்க்கத்தற்கு மாற்றமாய் மகளுக்கு சீதனம் கொடுக்க காங்க்ரீட் புதர்காடுகள் வேறு மண்டிவிட்டன.

நமக்காக நல்லுள்ளம் கொண்டு மறைந்த KSM இஸ்மாயில் மாமாவிற்காக நாமும் வல்ல ரஹ்மானிடம் பிரார்த்திக்கலாமே.

இங்கு நீச்சல் பழகி தான் சென்னையில் நான் பயின்ற பள்ளியில் நடந்த ஒரு நீச்சல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வெல்ல முடிந்தது என்ற நன்றியுடனும், நெஞ்சம் நிறைந்த வலியுடனும், சகோதரர் யாக்கூப் அவர்களின் தகவல் உதவியுடன்

அதிரை அமீன்

Tuesday, February 28, 2012

மார்க்கப்பணியை அல்லாஹ்விற்காகவே செய்ய முன்வாருங்கள்!

1. காலத்தின் மீது சத்தியமாக. 2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். 3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (103:1-3)

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்க ளும் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்களாக இருக்கின்றனர். அவர்கள் நல்லவற்றை ஏவுகிறார்கள், தீயவற்றை விலக்குகிறார்கள், தொழுகையைக் கடைபிடிக்கிறார்கள். ஜகாத்தை கொடுத்து வருகிறார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் அடிபணிகிறார்கள். அவர் களுக்கே அல்லாஹ் கருணை புரிகிறான்…” (9:71)
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமு தாயங்களில்) நீங்கள் சிறந்த சமுதாயமாக இருக் கிறீர்கள். நீங்கள் நல்லவற்றை ஏவுகிறீர்கள்; தீயவற்றை விலக்குகிறீர்கள்; அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறீர்கள்…” (3:110)
நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், தீயதிலிருந்து விலக்குபவர்களாகவும் உங்களில் ஒரு கூட்டம் இருக்கட்டும். அவர்களே வெற்றி பெற்றோர் ஆவர். (3:104)
இந்த இறைவாக்குகள் அனைத்தும் இறுதி நபிக்கு முன்னர் நபிமார்கள் செய்து வந்த மார்க்கப்பணி இறுதித் தூதரின் உம்மத்தாகிய நம்மீது சுமத்தப்பட்டிருக்கிறது; கடமையாக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்துகின்றன.

மேலும், நபிமார்கள் அனைவரும் இம்மார்க்கப் பணியை முழுக்க முழுக்க அல்லாஹ்வின் பொருத்தம் நாடி, நாளை மறுமையில் அந்த இறைவனிடம் மட்டுமே கூலி-சம்பளத்தை எதிர்பார்த்துச் செய்ய வேண்டும்; ஒருபோதும் மக்களிடம் கூலி-சம்பளத்தைக் கேட்கவும் கூடாது; எதிர்பார்க்கவும் கூடாது என்பதை அனைத்து நபிமார்களும் பகிரங்கமாகப் பிர கடனப்படுத்தியதை 6:90, 10:72, 11:29,51, 25:57, 26:109,127,145,164,180, 34:47, 38:86, 42:23 ஆகிய 13 குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன.

36:21 குர்ஆன் வசனம் கூலி வாங்காமல் மார்க்கப் பணி செய்கிறவர்களை மட்டுமே மக்கள் பின்பற்ற வேண்டும்; அவர்கள் மட்டுமே நேர்வழி நடப்பவர்கள் என உறுதிப்படுத்துகிறது. கடமையான மார்க்கப் பணிக்குச் சம்பளம் வாங்கினால் அதனால் மக்கள் சுமையேற்றப்பட்டு வழிதவற அது காரணமாகிவிடும் என்பதை 52:40, 68:46 குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன.

அதனால்தான்  இம்மதகுருமார்கள் சிறிதும் இறையச்சம் இல்லாமல், துணிந்து குர்ஆன் வசனங்களை 2:159,161,162 கூறுவது போல் திரித்து, வளைத்து தவறான விளக்கங்கள் கொடுப்பது, பொய்ச் சத்தியம் செய்வது, அல்லாஹ்மீதே ஆணையிட்டுப் பொய் உரைப்பது, துணிந்து மற்றவர்கள் மீது அவதூறு பரப்புவது, நேரடி குர்ஆன், ஹதீஸ் கருத்மதுக்களைக் கேட்கவிடாமல் மக்களைத் தடுப்பது இப்படிப்பட்ட நரகத்திற்கு இட்டுச் செல்லும் துர்ச் செயல்களைத் துணிந்து செய்ய முடிகிறது.

இந்த உண்மைகளை மேலே எழுதப்பட்டுள்ள குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் சுய சிந்தனையுடன், தன்னம்பிக்கையுடன் படித்து விளங்குகிறவர்கள் ஒப்புக் கொள்வார்கள். இந்த வசனங்கள் எல்லாம் முன்சென்ற காஃபிர்கள், யூதர்கள், கிறித்தவர்கள் பற்றி இறங்கியவை; முஸ்லிம்களான நம்மை இவை கட்டுப்படுத்தா எனக் கூறுவார்கள்.
அல்லாஹ் கண்டித்துக் கூறும் ஒரு தவறை ஆதத்தின் மக்களில் யார் செய்தாலும் தவறு தான்; தண்டனைக்குரிய குற்றம்தான். உதாரண மாக லூத்(அலை) அவர்களின் சமூகம் ஓரினப் புணர்வில் ஈடுபட்டதாக குர்ஆன் 7:80,81 வச னங்களில் அல்லாஹ் கண்டித்துக் கூறுகிறான். இந்தக் கடும் கண்டனம் அந்தச் சமூகத்திற்குரி யது. எங்களுக்கில்லை என்று கூறுகிறார்களா?

ஓர் அரசு அதிகாரி அரசிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு பணிபுரிகிறார், இந்த நிலையில் தனது பணிக்காக மக்களிடம் கூலி வாங்குவது பகிரங்கமான லஞ்சம்-கையூட்டு என்பதில் மாற்றுக் கருத்து உண்டா? இல்லையே! அதேபோல் மார்க்கப் பணிக்கு இவர்களுக்கு அல்லாஹ்விடமே கூலி இருக்கிறது என்று அல்குர்ஆனும், ஹதீஸ்களும் தெளிவாகக் கூறிக் கொண்டிருக்க இந்த மவ்லவிகள் மார்க்கப் பணிக்காக மக்களிடம் கூலி-சம்பளம் வாங்குவது கையூட்டு -லஞ்சமே.

“”மக்களே! நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன். அவன் தூய்மையை அன்றி வேறு எதனையும் ஏற்றுக் கொள்ள மாட்டான். அன் றியும் நிச்சயமாக, அல்லாஹ் எதனைத் தூதர்களுக்குப் பணித்தானோ அதனையே நம்பிக்கையாளர்களுக்கும் பணித்துள்ளான்”. “”தூதர்களே! நீங்கள் தூயவற்றையே உண்ணுங்கள், நற்செயல்களையே செய்யுங்கள்….” (23:51) என்று இறை வன் கட்டளையிடுகிறான். (அதேபோல்)

“”நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்…” (2:172) என்றும் அவன் கட்டளையிட்டுள்ளான் என்று நபி(ஸல்) கூறியபின் ஒருவனைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்.

அவன் மண் புழுதிகளில் சிக்கி, நெடும் தொலைப் பயணத்துக்கு ஆளாகி, (ஹஜ்ஜுக் குச் சென்று) தலைவிரி கோலமான நிலையில் தன் இரு கைகளையும் விண்ணை நோக்கி உயர்த்தியவனாக, “”இறைவனே! இறைவனே!! என் துஆவை ஏற்றுக் கொள்வாயாக!” என்று கூறுவானானால் -அவன் உண்பதும், குடிப்பதும், உடுத்தியிருப்பதும் ஹராமாகவும் ஆக, அவன் ஹராமான பொருள்களைக் கொண்டு வளர்ந்து வரும் நிலையில் இறைஞ்சுவனானால், அவனுடைய இறைஞ்சலுக்கு எவ்வாறு விடை அளிக்கப்படும்?” (அதாவது அவனு டைய துஆ எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?) என்று கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி) முஸ்லிம் திர்மிதீ, அல்ஹதீஸ் 4321)

கடமையான மார்க்கப் பணிக்குக் கூலி-சம்பளம் அறவே கூடாது என்று இத்தனை குர் ஆன் வசனங்கள் கூறிக் கொண்டிருக்க ஹதீஸ்கள் இதுபற்றி என்ன கூறுகின்றன என்று பாருங்கள்.
“”குர்ஆனை ஓதுங்கள்! அதன் மூலம் சாப்பிடவோ, பொருள் திரட்டவோ முற்படாதீர்கள்” என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள். (அஹ்மத், தஹாவி, தப்ரானி, இப்னு அஸாகிர்)

“”எவர் குர்ஆனை ஓதுகிறாரோ அவர் அல்லாஹ்விடமே கேட்கட்டும், வருங்காலத்தில் குர்ஆனை ஓதிவிட்டு மக்களிடமே (கூலி-சம்பளம்) கேட்பவர்கள் தோன்றுவார்கள்” என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள். (திர்மிதி, அஹ்மத்)

குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் தெளிவாக நேரடியாக இப்படிக் கூறிக் கொண்டிருக்க இந்த மவ்லவிகள் குர்ஆன் வசனத்தைத் திரித்து வளைத்து அதன் நேரடிக் கருத்தை எப்படி மறைக்கிறார்கள் தெரியுமா?
கடமையான மார்க்கப் பணிபுரிகிறவர்கள், சொந்தமாக உழைத்துப் பொருளீட்ட வாய்ப்பு இல்லாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு ஜகாத், சதக்கா நிதியிலிருந்து கூலி-சம்பளமாகக் கொடுக்கலாம் எனச் சுய விளக்கம் கொடுக்கிறார்கள்.

அல்குர்ஆனை வஹி மூலம் பெற்ற நபி(ஸல்) அவர்கள் மட்டுமே  குர்ஆன் வசனங்களுக்கு 2:213, 16:44,64 வசனங்களின் படி விளக்கம் கொடுக்கக் கடமையும் உரிமையும் பெற்றவர்கள் என்பதையும், நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு யாருக்கும் சுய விளக்கம் கொடுக்கும் உரிமை இல்லை என்பதை 7:3, 33:36,66-68, 18:102-106, 59:7, 9:31 குர்ஆன் வசனங்கள் மிகக் கடுமையாக எச்சரிப்பதை ஒருபோதும் விளங்க மாட்டார்கள். அந்தளவு உள்ளங்கள் இருளடைந்து விட்டன.

2:273 வசனத்திற்கு இவர்கள் கூறுவதுதான் உண்மையான பொருள் என்றால், அதைக் கண்டிப்பாக நபி(ஸல்) நடைமுறைப்படுத்திக் காட்டி இருப்பார்கள். மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளும் ஒரே நோக்கத்துடன், வேறு நோக்கமே இல்லாமல் மஸ்ஜிதுன் நபவிக்குப் பக்கத்திலிருந்த திண்ணையில் கிடந்த அஸ்ஹாபுஸ்ஸுஃப்பாக்களுக்கு அரசு கஜானாவிலிருந்து மாதாமாதம் கூலி-சம்பளம் கொடுக்கக் கட்டளையிட்டிருப்பார்கள். குறைந்தபட்சம் முஹாஜிர்களை அன்சார்களிடம் சாட்டி விட்டது போல், இந்த அஸ் ஹாஃபுஸ்ஸுஃப்பாக்களையும், இதர வசதியுள்ள நபி தோழர்களிடம் சாட்டிவிட்டு, அவர்களின் உணவுத் தேவையை நிறைவேற்றிக் கொடுக்கக் கட்டளையிட்டிருப்பார்கள். ஏன் செய்யவில்லை? என்று இந்த மவ்லவிகள் என்றாவது சிந்தித்திருப்பார்களா?
அதுபோல் அன்று முழுநேர மார்க்கப் பணி புரிந்த நபிதோழர்களுக்கும் அப்படி ஏற்பாடு செய்து சமுதாயத்திற்கு வழிகாட்டி இருப்பார்கள்.

பல நாட்கள் பட்டினி கிடந்து மயங்கி விழும் நிலையிலும் அவர்களில் சிலர் இருந்துள்ளனர். ஆயினும் அவர்கள் யாரிடமும் 2:273 கூறுவது போல் தங்கள் நிலையை வெளிப்படுத்தியதில்லை. அவர்களது பரிதாப நிலையைப் பார்த்து நபிதோழர்கள் அவர்களாக முன்வந்து உபகாரம் செய்ததாகவே ஹதீஸ்கள் கூறுகின்றன. இதையே 2:273 இறைக் கட்டளை வலியுறுத்துகிறது.

கடமையான மார்க்கப் பணிக்கு கூலி-சம்பளம் வாங்க குர்ஆனில் வேறு ஆதாரமே இல்லை. 2:273 இறைவாக்கும் சம்பளம் பேசி மாதா மாதம் குறிப்பிட்டத் தொகை வாங்க அனுமதிக்கவில்லை என்பது தெளிவான பின்னர் இந்த மவ்லவிகள் எடுத்து வைக்கும் சுய விளக்கம் என்ன தெரியுமா?

சில நபி தோழர்கள் ஒரு ஊர் வழியாக வரும்போது அவ்வூர் மக்களின் தலைவரைப் பாம்பு கடித்து வேதனையால் அவர் துடித்துக் கொண்டிருந்தார். அப்போது நபிதோழர்களில் ஒருவர் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி விஷத்தை இறக்கினார். அதற்காக அத்தலைவர் 30 ஆடுகளைக் கொடுத்தார். ஆயினும் குர்ஆன் ஓதி காசு வாங்கக் கூடாது என்ற தடை இருப்பதின் காரணமாக ஐயப்பட்டு ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்து நபி(ஸல்) அவர்களிடம் நடந்ததைக் கூறி, வாங்கிக் கொண்டு வந்த ஆடுகள் ஹலாலா? ஹராமா எனக் கேட்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் பங்கு வைத்துக் கொள்ளும்படியும், தனக்கொரு பங்கு தரும்படியும் கூறியதாக அபூ ஸஈது(ரழி) அறிவித்து புகாரீ, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதீ ஆகிய நூல் களில் இருப்பதாக அல்ஹதீஸ் 4694ம் ஹதீஸில் பதிவாகி இருக்கிறது.

இச்சம்பவத்தைப் பெரிய ஆதாரமாகக் காட்டி மார்க்கப் பணிக்குக் கூலி வாங்குவதை நியாயப்படுத்துகிறார்கள். கடமையான மார்க்கப் பணிக்கு கூலி கூடாது என்று அல்குர்ஆனில் நேரடித் தடை இல்லாதிருந்தால் அவர்களின் இவ்வாதம் சரிதான். ஆனால் தெளிவான தடை இருக்கிறதே! அதனால் தானே நபி தோழர்கள் நபியிடம் வந்து ஆடுகள் ஹலாலா, ஹராமா எனக் கேட்கிறார்கள்! அந்த நபிதோழர் ஃபாத்திஹா சூராவை ஓதினார். ஆனால் விஷம் இறங்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். குர்ஆன் ஓதியதற்காக ஆடுகள் கிடைத்திருக்குமா? கிடைத்திருக்காதே!

அப்படியானால் வைத்திய அடிப்படையில் அவ்வாடுகள் கூலியாகக் கொடுக்கப்பட்டனவே அல்லாமல், குர்ஆன் ஓதியதற்காகக் கொடுக்கப்படவில்லை என்பது விளங்குகிறதே! இந்த ஹதீஸை கொண்டு குர்ஆன் ஓதி நோயைச் சுகப்படுத்தினால் அதற்காகக் கூலி வாங்க அனுமதி உண்டு என்பதற்கே ஆதாரம் கிடைக்கிறது. பள்ளிகளில் தொழுதுவிட்டு வெளியே வரும்போது அங்கு காத்து நிற்கும் நோயாளிகளுக்கு குர்ஆனிலிருந்து சில வசனங்களைக் கொண்டு ஓதிப் பார்க்கலாம். இங்கும் நோய் சுகமான பின்னர் அதற்குரிய கூலியை பெறலாமே அல்லாமல் குர்ஆன் ஓதியதற்காக கூலி வாங்குவது அனுமதிக்கப்பட்டதல்ல என்பதே குர்ஆன், ஹதீஸ் நேரடியாகக் கூறும் உண்மையாகும்

தொழ வைப்பதற்காக நாங்கள் நேரம் ஒதுக்கி வரவேண்டிய நிலையில் இருக்கிறோம். அதற்காகச் சம்பளம் வாங்குகிறோம் என்ற வாதத்தை வைக்கின்றனர். இதுவும் மிகத் தவறான வாதமே! எப்படி என்று பாருங்கள். பெரும்பாலான இமாம்கள் தொழுகை ஆரம்பிக்கும் இறுதிக் கட்டத்தில்தான் பள்ளிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு முன்னதாகவே பல தொழுகையாளிகள் பள்ளிக்கு வந்து காத்துக் கிடக்கிறார்கள். அது மட்டுமா? தொழுகைக்காக அழைப்பு விடுக்கும் (பாங்கு) முஅத்தின் தொழுகைக்கு அரை மணி நேரமோ, 20 நிமிடங்களோ முன் கூட்டியே வந்து பாங்கு சொல்லும் கட்டாயத்தில் இருக்கிறார். நேரம் ஒதுக்கி முன்னரே வந்து பாங்கு சொல்லும் முஅத்தினுக்கே அதற்காகச் சம்பளம் கொடுக்க மார்க்கத்தில் அனுமதி இல்லை என்றே ஹதீஸ் கூறுகிறது. அது வருமாறு: “”முஅத்தினை நியமனம் செய்தால் எந்த விதமான பிரதிபலனும் (கூலியோ, சம்பளமோ) பெற்றுக் கொள்ளாத ஒருவரை நியமிக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் இறுதியான உறுதி மொழி வாங்கினார் கள்” என்று உஸ்மான் இப்னு அபில் ஆஸ்(ரழி) கூறினர். (அபூதாவூது, திர்மிதீ)

கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுத்துப் பாருங்கள்! தொழுகைக்கு 30 நிமிடமோ, 20 நிமிடமோ முன்கூட்டியே நேரம் ஒதுக்கி வந்து பாங்கு சொல்லும் முஅத்தினுக்கே சம்பளம் கொடுக்க மார்க்கத்தில் அனுமதி இல்லை என்று ஹதீஸ் தெளிவாக நேரடியாகக் கூறும் நிலையில், தொழுகைக்குக் கடைசி நேரத்தில் அவசர அவசரமாக வந்து, தொழுகை விரிப்பைக் கூட முஅத்தினே ஒழுங்குபடுத்தி வைத்த நிலையில், வரிசைகளை நேர்படுத்தி ஒழுங்குபடுத்தாமலும், முன் வரிசைப் பூர்த்தியாகி இரண்டாம் வரிசையில் நிற்கிறார்களா? என்று பார்க்காமலும் ருகூவுக்குப் பின்னுள்ள சிறு நிலையிலும், இரண்டு சுஜூதுக்கு இடைப்பட்ட நிலையிலும் போதிய அவகாசம் கொடுக்காமலும் அவசர அவசரமாகத் தொழுது, தொழுகை முடிந்ததோ இல்லையோ தலைப் பாகையை அவிழ்த்து எறிந்துவிட்டு வெளியே பறந்து செல்லும் இமாமுக்கு, தொழுகைக்காக நேரம் ஒதுக்கி வருகிறார் என்பதற்காகச் சம்பளம் கொடுப்பதை மார்க்கம் அனுமதிக்குமா? இப்படி எல்லாம் சுய புராணங்களை அவிழ்த்து விட்டு அறிவு குறைந்த சுய சிந்தனையற்ற ஆட்டு மந்தைபோல் மவ்லவிகள் பின்னால் கண்மூடிச் செல்லும்  மக்களை ஏமாற்ற முடியுமே அல்லாமல் அல்லாஹ் வை ஏமாற்ற முடியுமா? ஒருபோதும் முடியாது.
மக்கள் இமாமுக்கு முன்னாலேயே வந்து சுன்னத்து தொழுது, காத்துக் கிடந்து கடமையான தொழுகையைத் தொழுத பின்னர் உபரியான தொழுகைகளையும் ஆர அமர தொழுது விட்டு, அதாவது இமாமுக்கு முன்னர் வந்து, இமாமுக்குப் பின்னர் செல்லும் அந்த மக்கள் மண்ணையா சாப்பிடுகிறார்கள்? அவர்கள் உழைத்துப் பொருளீட்டி அவர்களும், அவர்கள் குடும்பத்தார், உறவினர் முதல் சாப்பிட்டு, இந்த உழைப்பதில் சோம்பேறித்தனம் காட்டும் இமாம்களுக்கும் கொடுக்கவில்லையா?

இந்த நிலையில் இகாமத் சொல்லும் நேரம் நெருங்கும்போது அவசர அவசரமாக வந்து தலைப்பாகைக் கட்டிக்கொண்டு தொழவைத்து விட்டு அவசர அவசரமாக வெளியேறும் இந்த இமாம்களுக்குத் தங்கள் கைகளால் ஹலாலான முறையில் உழைத்துச் சாப்பிடுவதற்கு என்ன கேடு?
இமாம்களின் நிலை இதுவென்றால், அடுத்து கடமையான பிரசார பணி செய்கிறவர்களும் கூலிக்கே மாரடிக்கிறார்கள். இமாம்களைப் போல் ஒரு நாளில் அதிகபட்சம் சுமார் 5 மணிநேரம் செலவிடும் அவர்கள் முழு நேரப் பணியாளர்களாம். அதனால் அவர்களுக்கு ஹலாலான முறையில் பொருளீட்ட நேரம் இல்லையாம்! அதனால் பிரசார பணிக்குச் சம்பளம் வாங்குகிறார்களாம்.

மார்க்கப் பணிக்குக் கூலி வாங்கி நாங்கள் குபேரர்கள் ஆகிவிட்டோமா? அன்றாடம் நாட்களை ஓட்டுவதே பெரும் சிரமமாக இருக்கிறது. வறுமையில் வாடுகிறோம் என்று மவ்லவிகள் கூறுகிறார்கள். “”மக்களிடம் கையேந்துபவர்களுக்கு கொடுக்கும் வாசலை அல்லாஹ் மூடிவிடுகிறான். அல்லாஹ்வை மட்டும் முழுமையாக நம்பி அவனிடம் மட்டுமே கையேந்துகிறவர்களுக்கு கொடுக்கும் வாசலை முழுமையாகத் திறந்து விடுகிறான் அல்லாஹ் என்ற” என்ற ஹதீஃத் இம்மவ்லவிகளுக்குத் தெரியாதா?

இங்கு இன்னொரு விஷயத்தையும் முக்கிய மாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். நம் மீது 3:110, 9:71, 103:1-3 மூலம் விதிக்கப்பட்ட கடமையான மார்க்கப் பணிகளுக்கு, அவற்றைச் செய்யாவிட்டால் நாளை மறுமையில் கேள்வி கேட்கப்பட்டு தண்டிக்கப்படுவோம் என்ற வகையிலுள்ள மார்க்கப் பணிகளுக்கு கூலி-சம்பளம் வாங்குவது மட்டுமே தடுக்கப் பட்டுள்ளது. நம்மீது விதிக்கப்படாததை அதாவது செய்யா விட்டால் ஏன் செய்யவில்லை என்று கேட்டுத் தண்டிக்கப்படாத பணிகளான குர் ஆனை, ஹதீஸ்களை எழுதிக் கொடுப்பது, மொழி பெயர்ப்பது, நூல்கள் வெளியிடுவது, வெளியூர்களுக்கு அழைப்பின் பேரில் சென்று பிரசாரம் செய்யும்போது பயணப்படி இவை அனைத்திற்கும் பணம் பெறுவது மார்க்கத்தில் தடை செய்யப்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால் நபிமார்கள் செய்த மார்க்கப் பணிகள் மட்டுமே முஸ்லிம்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. அவை அல்லாத வைக்கு கூலி-சம்பளம் பெறுவதை மார்க்கம் தடை செய்யவில்லை என்பதே சரியாகும்.

இதை ஆதாரமாக வைத்து இமாமத் செய்வது எங்கள் மீது கடமை இல்லையே என்று மவ்லவிகள் எதிர்க் கேள்வி கேட்கலாம். நபி(ஸல்) இமாமத் செய்தார்கள். ஆனால் அதற்காக ஊதியம் பெறவில்லை. மேலும் யாராக இருந்தாலும் ஐங்கால தொழுகை கடமை. உள்ளூரில் இருக்கும் போது ஜமாஅத்தும் வலியுறுத்தப்பட்ட சுன்னத். அந்த அடிப்படையில் ஒரு மவ்லவி பள்ளிக்குச் செல்லும்போது, அந்த மஹல்லாவாசிகளில், நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளபடி இமாமத் செய்யும் தகுதி அவருக்கே இருக்கிறது. எனவே நபி(ஸல்) அவர்களின் கட்டளைப்படி அம்மக்களுக்கு இமாமத் செய்யும் பொறுப்பு அவருக்கு ஏற்படுகிறது. எனவே இதைக் காரணம் காட்டி தொழ வைக்க கூலி-சம்பளம் பெற முடியாது.

இமாமத், பிரசார பணிகளை ஈமானின் உறுதியோடு அல்லாஹ்வையும், மறுமையையும் மிகமிக உறுதியாக நம்பி, அல்லாஹ்விடமே அவற்றிற்குரிய கூலியை எதிர்பார்த்து தூய எண்ணத்தோடு செய்ய முன் வந்தால் நிச்சயமாக அல்லாஹ் அதற்குரிய வழியை எளிதாக்கித் தருவான். இது 29:69ல் அல்லாஹ் உறுதியாக அளிக்கும் உத்திரவாதமாகும்.

Thanks to readislam.com

Thursday, February 23, 2012

'அல்குர்ஆன்' பாக்கியம் நிறைந்த வேத நூல்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

கண்ணியமிக்க சகோதரர்களே!    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வார்த்தைகள். மனிதன் எப்படி வாழவேண்டும் என்ற முழுமையான வழிகாட்டுதலைத் தருகிறது.

இக்குர்ஆன் தனிமனித, குடும்ப, சமூக வாழ்வின் அத்தனை அம்சங்களை இலகுநடையில் விளக்கப்படுத்துகிறது. மனிதனைப் படைத்த அல்லாஹ் அந்த மனிதன் எப்படி அல்லாஹ்வை நம்ப வேண்டும், பின்பற்ற வேண்டும். கட்டளைகளை ஏற்று நடக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறான்.

ஆன்மீகத்தை (இபாதத்களை) மட்டும் சொல்லித் தராமல் கொடுக்கல்-வாங்கல் (கடன்) அடைமானம், வட்டி, வியாபரம், குழந்தைக்கு பாலூட்டல், குழந்தை வளர்ப்பு, திருமண வாழ்வு, குடும்பப் பிரச்சினைக ளைத் தீர்த்து வைத்தல், தலாக், ஜீவனாம் சம் (மஹர்) பெண்ணுரிமை, பெற்றோரை பேணுதல், குடும்ப உறவை அண்டுதல், அடுத்த வீட்டாரை மதித்தல், பிற மக்களுடன் பரஸ்பரம் அன்பை பரிமாறுதல், நல்லிணக்கத்துடன் நடத்தல், வீட்டுக்குள் செல்லும் ஒழுங்குகள், நம்பிக்கை நாணயம் பேணல், வாரிசுரிமை, சொத்துப் பங்கீட்டு , ஒழுக்க மேம்பாட்டும் அதனை சீர் குலைக்கும் காரணிகளும்இ சமூக சீர்கேடுகள், சமுதாய கொடுமைகள், குற்றவியல் சட்டங்கள், பொருளாதாரம், அரசியல், அனாதைகள் பராமரிப்பு, கல்வி, லௌகீக விடயங்கள் என்று அன்றாட வாழ்வுக்கான அனைத்து விடயங்களையும் அல்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.
அல்லாஹ்வை நம்பிய மனிதன் (முஸ்லிம்) அந்தக் குர்ஆனையும் நம்ப வேண்டும். குர்ஆனை இறைவேதமாக நம்பியவன் அந்தக் குர்ஆனை தினம்தோறும் ஓதுவதுடன் அதன் விளக்கங்களையும் படித்துப் பின்பற்ற வேண்டும். இதற்காகவே அல்குர்ஆன் அருளப்பட்டது. அல்லாஹ் அருளிய இந்த வேதம் படிப்பதற்கும் விளங்குவதற்கும் இலகுவானது. கருத்து முரண்பாடற்றது. நடைமுறைக்கு ஏற்றமானது. அதனாலேயே மிகத் தெளிவான வேதமாக உள்ளதுஇ இதனாலேயே இக்குர்ஆனை படித்து சிந்தித்துணர மாட்டீர்களா? என்று அல்லாஹ் கேட்கிறான்.

'உங்களிடம் ஒரு வேதத்தை அருளி னோம். அதில் உங்களுக்கு 'அறிவுரை இருக்கிறது. நீங்கள் விளங்க வேண்டாமா? (21:10)
இது பாக்கியம் நிறைந்த வேதம். இதன் வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும் அறிவுடையோர் படிப்பினை பெறுவதற்காகவும் (நபியே) உமக்கு அருளினோம். (38:29)  
அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? (47:24)      
'அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாத வரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்' (4:84)
வாழ்கின்ற வாழ்வு அமைதியானதாக நிம்மதியானதாக இருக்க வேண்டுமானால் அந்த வாழ்வுக்கு பரகத் பொருந்திய அல்லாஹ்வுடைய வேதமான அல்குர்ஆன் வழிகாட்டுகிறது. பாக்கியம் (பரகத்) நிறைந்த வேத நூலை இறக்கி வைத்த அல்லாஹ், அதில் அறிவுரைகள் வழிகாட்டல்கள் உண்டு என உறுதியாகக் கூறுகிறான். அதனைப் பார்த்து பின்பற்ற வேண்டும் என்றும் கட்டளையிடுகிறான்.
எவர் குர்ஆனை படிக்காமல் விளங்காமல் சிந்திக்காமல் அதனை விட்டு விலகி நடக்கிறாரோ அவருடைய உள்ளத்தில் அல்லாஹ்வின் அருள் இருக்காது. பூட்டுக்களால் மூடப்பட்ட இருண்ட அறையாகவே அது இருக்கும். இன்று குர்ஆன் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளது. பல தப்ஸீர் நூல்ளை வைத்துத்தான் இலகுவான நடையில் மார்க்க அறிஞர்கள் குர்ஆனை மொழி பெயர்த்துள்ளார்கள். படித்துப் பார்க்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம்களைச் சார்ந்தது. நாளாந்தம் பத்திரிகைகள் படித்து விளங்க முடியுமாக இருந்தால் அதைவிட இலகுவாக குர்ஆனை விளங்க முடியும். (விளங்க முடியாது என்றால் உலமாக்களை அணுகி படிக்க வேண்டும்). பத்திரிகை படிப்பதற்குஇ செய்திகள் பார்ப்பதற்குஇ நேரம் ஒதுக்குபவர்கள் குர்ஆனை படிப்பதற்கு குறைந்தது 15 நிமிடங்களாவது ஒதுக்கக் கூடாதா?
குர்ஆனின் போதனைகளை விட்டு ஓரமாகக் கூடியவர்களின் இம்மை வாழ்வும் மறுமை வாழ்வும் படுமோசமானதாக பயங்கரமானதாக அமையும் என்ற அல்குர்ஆனின் எச்சரிக்கையை எப்போதும் மனதில் வைத்திட வேண்டும். எவர் எனது போதனையைப் புறக்கணிக்கிறாரோ அவனுக்கு (இம்மையில்) நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.
என் இறைவா! நான் பார்வையுடையவனாக (உலகில்) இருந்தேனே ஏன் என்னை குருடனாக எழுப்பினாய் என்று அவன் (மறுமையில்) கேட்பான்.
அப்படித்தான்இ நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ (உலகில்) மறந்தவாறே, (வாழ்ந்தாய்) இன்று (நீயும்) மறக்கப்படுவாய் என்று (அல்லாஹ்) கூறுவான். (20: 124-126).
குர்ஆனைப் பார்த்து படிப்பினை பெற்று வாழாமல் புறக்கணித்தவன் மறுமையில் குருடனாக எழுப்பப்படுவான்; என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.
நிச்சயமாக இந்தக் குர்ஆன் மிக நேரான வழியை அறிவிக்கின்றது. விசுவாசம் கொண்டு நற்கருமங்களைச் செய்வோருக்கு நிச்சயமாக மிகப் பெரிய கூலி உண்டு என்றும் நன்மாராயம் கூறுகிறது. (17:9).
மக்களை இக்குர்ஆன் மிக நேரான வழிக்கு இட்டுச் செல்லும் என்று அல்லாஹ் உத்தரவாதமளிக்கிறான். அதனைப் பற்றிப் பிடிக்கும் மக்களாக முஸ்லிம்கள் இருக்க வேண்டும்.
அல்குர்ஆன் ஓதும் இடங்களுக்கு (வீடுகளுக்கு) அருள் நிறைந்த மலக்குகள் இறங்குகிறார்கள் மற்றும் ஸகீனத் இறங்குகிறது. ஷைத்தான் அந்த வீட்டிலிருந்து ஓடுகிறான். குர்ஆனுடன் தொடர்பாகின்றபோது மனிதனின் செயற்பாடுகள் நன்மையின் பாலும் இறை திருப்தியின் பாலும் சென்றுவிடுகிறது. இம்மை மறுமை வாழ்வு பயனுள்ளதாக அமைந்துவிடுகிறது.
எனவே 'பாக்கியம் (பரகம்) நிறைந்த வேத நூல்' என்று அல்லாஹ் கூறுவது அந்தக் குர்ஆனை அழகான அச்சில் வடித்து உயர்ந்த துணியில் வைத்து வீடுகளில் கடைகளில் தொங்கவிடுவதற்கோ மேனியில் கட்டிக் கொள்வதற்கோ மரணித்தவர்களுக்காக ஒதி பார்சல் பண்ணுவதற்கோ தாயத்துகளாக தடுகளாக எழுதி வியாபாரம் பண்ணுவதற்கோ அல்ல. உயிருடன் நடமாடும் மானுட சமூகம் நல்லுணர்ச்சி பெறுவதற்கே!
வாழ்க்கையின் ஒவ்வொரு எட்டிலும் குர்ஆன் பேசப்படக்கூடியதாக அமையும் போதே வாழ்வு பரகத் பொருந்தியதாக ஆகிவிடுகிறது. ஆகவே நம் ஒவ்வொருவர் வாழ்வையும் குர்ஆனின் அடிப்படையில் அமைத்து வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்வானாக! ஆமீன்.      

(நன்றி: islamkalvi.com)

வெளியீடு: தவ்ஹீத் இல்லம் தஃவா குழு

Tuesday, February 21, 2012

கோவை அய்யூப் துபை நிகழ்வுகள் முடிவல்ல, இனி(ய) ஆரம்பமே!

அல்லாஹ்வினுடைய மாபெரும் அருளால் துபை மாநகரின் பல்வேறு பகுதிகளில், அதிலும் 2 நிகழ்வுகள் துபை அவ்காஃபின் ஆதரவுடன் நடைபெற்றதை அறிவீர்கள்.

இந்த நிகழ்வுகளின் தூய வெற்றி தஃவாவுக்கான பல்வேறு வாயில்களை திறந்து விட்டுள்ளன, அல்ஹம்துலில்லாஹ்.

முதலாவதாக, இனி தவ்ஹீத் சகோதரர்கள் இயக்கங்களுக்குள் ஏகத்துவத்தை அடகு வைக்கப்போவதில்லை மாறாக சத்திய மார்க்கம் யாரிடமிருந்து வந்தாலும் வரவேற்போம் என வேற்றுமை களைந்து அலைஅலையாய் சங்கமித்து, இனியும் வருவோம் என செயலில் நிரூபித்தனர்.

இரண்டாவதாக, சகோதரர் கோவை அய்யூப் அவர்களுக்கு அவ்காஃப் தஃவாவிற்கான சான்றிதழ் வழங்கியது, இன்ஷா அல்லாஹ் இனி தடையின்றி அமீரகத்தில் மார்க்கத்தை அதன் தூய வடிவில் எத்தி வைக்க முடியும்.

மூன்றாவதாக, துபையில் 2 மஸ்ஜிதுகளில் அவ்காஃப் அனுமதியுடன் தமிழ் இஸ்லாமிய தஃவாவிற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

நான்காவதாக, துபை அவ்காஃப் அனுமதியுடன் மர்கஸ் ஒன்று அல் முத்தீனா பகுதியில் விரைவில் இயங்கவுள்ளது.

ஐந்தாவதாக, இஹ்லாஸூடன் இம்மையில் கூடி மறுமைக்காக உழைத்தால், குறுகிய காலத்தில் இத்தனை வாய்ப்புகளை வழங்கியுள்ள எல்லாம் வல்ல ரஹ்மான் இன்னும் நாம் எதிர்பாராத நன்மைகளை இன்ஷா அல்லாஹ் அருளுவான்!


கடைசியாக 17.02.2012 வெள்ளியன்று துபை அவ்காஃப் வளாக அரங்கில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள்!










Friday, February 17, 2012

இறைவனின் மன்னிப்பு வேண்டுமா?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

கண்ணியத்திற்குரிய சகோதரர்களே!     அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

இன்று நம்மிடையே எங்கு பார்த்தாலும் பகைமை உணர்வு, மோதல் போக்கு, பழிவாங்கும் சிந்தனை, பிறர் குறையை கண்டறிந்து விளம்பரப் படுத்தும் இழிசெயல், நீயா! நானா! என்ற ஆணவப் போக்கு, என்னைப் பேசினாயா! என்னைத் திட்டினாயா! என்னை அடித்தாயா! உன்னை விடமாட்டேன் பார் என்கிற அதிகாரப் பேச்சு இவை அனைத்தும் நமது உள்ளத்தில் அதிகரித்ததால், மனிதனின் மானம், மரியாதை, கண்ணியம் அனைத்தும் சந்தையில் விலைபேசப்படுகின்றன. இந்த இழிசெயல் தொடர்ந்தால் மனித சமூகத்தில் சகோதரத்துவமும், ஒற்றுமையும் கேள்விக் குறியாகிவிடும். பாதிக்கப்பட்டவன் திரும்ப எதிர்ப்பை பதிவு செய்வது மனித உரிமை என்றாலும், இஸ்லாம் அதைவிட உயர்ந்த பண்புகளை நமக்கு போதிக்கின்றது என்பதை நினைவுபடுத்துவதுதான் இந்த வார பிரசுரத்தின் செய்தியாகும்.

நாமும் மனிதர்கள், நம்மிடையேயும் நிறைய குறைகள் உண்டு. தவறுகளுக்கு அப்பாற்பட்டவன் அல்லாஹ் மட்டுமே என்கிற உணர்வு நமக்கு எப்பொழுதும் மேலோங்கி இருந்தால் மேற்கண்ட இந்த தீயகுணங்கள் நமக்கு வருமா? சிந்திப்பீர்!
நம்மை சுற்றி உள்ளவர்களின் தவறுகளை அலட்சியம் செய்து, மன்னித்து பழகுவது அல்லாஹ் விரும்பும் நல்ல பண்புகள் என்று நமக்கு தெரியாதா? நமக்கு பிறர் தீங்கிழைத்தால் நாமும் பதிலுக்கு தீங்கிழைத்துத்தான் ஆகவேண்டுமா? இல்லையே! ஏன் நாம் சிந்திக்க மறுக்கின்றோம். ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்குவது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதனை நாம் ஏன் மறந்துவிட்டோம். அல்லாஹ்வும், அவனது தூதரும் மற்றும் நபித்தோழர்களின் வாழ்வும் நமக்கு போதிக்கும் வழிகள் தான் என்ன?