உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, May 9, 2015

ADT வழங்கும் கோடைகால இஸ்லாமிய நல்லொழுக்கப் பயிற்சி முகாம்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அதிரை தாருத் தவ்ஹீத் வழங்கும்


கோடைகால இஸ்லாமிய நல்லொழுக்கப் பயிற்சி முகாம்

இன்னும்; உங்களைப்படைத்தவன் அல்லாஹ் தான்> பின்னர் அவனே உங்களை மரிக்கச் செய்கிறான்; கல்வியறிவு பெற்றிருந்தும் (பின்) எதுவுமே அறியாதவர்களைப்போல் ஆகிவிடக் கூடிய மிகத் தளர்ந்த வயோதிகப் பருவம் வரையில் வாழ்ந்திருப்பவர்களும் உங்களில் உண்டு - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும்> பேராற்றல் உடையவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன் 16:70.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எவன் மறுமையை பயந்து> தன் இறைவனின் அருளை எதிர்பார்த்து> இரவு காலங்களில் நின்றவனாகவும்> சிரம் பணிந்தவனாகவும் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கின்றானோ> (அவன் நம்பிக்கை கொள்ளாது நிராகரிப்பவனைப் போலாவானா? நபியே!) நீங்கள் கேளுங்கள்: கல்வி அறிவுடையவனும்> கல்வி அறிவில்லாதவனும் சமமாவார்களா? (இந்தக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுபவர்கள் எல்லாம் (கல்வி) அறிவுடையவர்தாம். அல்குர்ஆன் 39:9.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு மனிதனின் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவைகளாகி விடுகின்றன.

மரணத்த பின்பு மனிதன் கூடவே செல்லும் அம்மூன்று செயல்கள்-
 1.சதக்கத்துல் ஜாரியா (எனும் நிலையான தான தர்மங்கள்)
2.பலன் தரும் கல்வி (இம்மை மறுமை இரண்டிற்க்கும் நன்மை பயக்கும் கல்வி).
3.பெற்றோருக்காக துஆ செய்யும் (பிரார்த்திக்கும்) நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்ஷா அல்லாஹ்> இவ்வருட கோடைக்கால பயிற்சி முகாம் வழமைபோல்>

எதிர்வரும் 10.05.2015 முதல் 25.05.2015 வரை தினமும் காலை 9 மணிமுதல்

அதிரை> CMP லேன் பகுதியில் அமைந்துள்ள AL மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தகுதிவாய்ந்த ஆலிமாக்களை கொண்டு நடைபெறவுள்ளது.

விண்ணப்பப் படிவங்கள் இன்று பிலால் நகர் தர்பியா சென்டரிலும்> நாளை காலையில் முகாம் நடைபெறும் AL மெட்ரிக் பள்ளி வளாகத்திலும் கிடைக்கும்.

மாணவிகள் அனைவரும் இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றது.

அதிரை தாருத் தவ்ஹீத்
அதிராம்பட்டிணம்.

No comments:

Post a Comment