கடந்த வாரம் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வருகை தந்திருந்த மார்க்க அறிஞரும் உளவியல் ஆலோசகருமான அப்துல் ஹமீது ஷரயி அவர்கள் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நாடு திரும்பினார்கள்.
முதலாவதாக, 03.08.2014 நெல்லை ஏர்வாடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று 'இஸ்லாத்தின் பார்வையில் பெண்களின் பிரச்சனைகள்' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்கள்.
தொடர்ந்து, 04.08.2014 அன்று தஞ்சை மாவட்டம் அதிரையில் உள்ள AL மெட்ரிக் பள்ளி ஆசிரியைகள் மற்றும் அலுவலர்களுக்கு 'மாணவர்களை கையாள்வது' குறித்து உளவியல் வகுப்பை நடத்தினார்.
முதலாவதாக, 03.08.2014 நெல்லை ஏர்வாடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று 'இஸ்லாத்தின் பார்வையில் பெண்களின் பிரச்சனைகள்' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்கள்.
தொடர்ந்து, 04.08.2014 அன்று தஞ்சை மாவட்டம் அதிரையில் உள்ள AL மெட்ரிக் பள்ளி ஆசிரியைகள் மற்றும் அலுவலர்களுக்கு 'மாணவர்களை கையாள்வது' குறித்து உளவியல் வகுப்பை நடத்தினார்.
05.08.2014 அன்று அதிரை தாருத் தவ்ஹீத் ஏற்பாட்டில், பிலால் நகரில் 'நவீன சாதனங்களால் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்கள்' எனும் தலைப்பில் விழிப்புணர்வு உரையாற்றினார்.
06.08.2014 அன்று காலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அமைந்துள்ள 'அல்மஹா பெண்கள் அரபிக் கலலூரியில்' 'இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்' என்ற தலைப்பில் உரையாற்றினார் தொடர்ந்து மாணவிகளின் சூனியம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
06.08.2014 அன்று மாலை மதுக்கூரில் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்களுக்கான நிகழ்ச்சியில் 'இஸ்லாமிய குடும்பம்' என்ற தலைப்பில் உரையாற்றினார். நிகழ்ச்சி பெண்களின் ஆர்வத்தால் இஷா வரை நீடித்தது குறிப்பிடத்தக்கது.
07.08.2014 அன்று மாலை கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள திருவிதாங்கோடு முஸ்லீம் கலை கல்லூரி மாணவிகள் மத்தியில் 'மூளையின் சிறப்பும் - ஞபாக சக்தியை அதிகரிக்கும் வழிகளும்' என்ற தலைப்பில் அறிவியல் புல மாணவிகள் மத்தியில் உளவியல் வகுப்பெடுத்தார்.
08.08.2014 அன்று மீண்டும் அதே முஸ்லீம் கலை கல்லூரியின் கலைப்பிரிவு மாணவிகள் மத்தியில் 'மன அழுத்தத்தை (டென்ஷனை) குறைப்பது எவ்வாறு?' என்ற தலைப்பில் உளவியல் பாடம் நடத்தினார்.
குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் இணைத்து நடத்தப்பட்ட இவ்விரு நிகழ்வுகளிலும் பிற மதத்தை சேர்ந்த சகோதரிகளே அதிகளவில் மிக ஆர்வமுடன் பங்கேற்று பயனடைந்தனர்.
மீண்டும் 08.08.2014 இரவு அன்று நெல்லை மேலப்பாளயம் நகரில் நடத்தப்பட்ட இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் 'பெண்களின் பிரச்சணைகளும் இஸ்லாமிய தீர்வும்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
09.09.2014 அன்று காலை தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில், புதிதாக இஸ்லாத்தை தழுவிய ஆண்களுக்கு மத்தியில் 'ஈமானை அதிகரிப்பது எவ்வாறு?' என்றும் தொடர்ந்து இஸ்லாத்தை தழுவிய பெண்களுக்கு 'ஈமானின் சுவை' என்ற தலைப்பிலும் சிறப்பு தனித்தனி வகுப்புக்களை நடத்தினார்.
அனைத்து நிகழ்ச்சிகளின் இறுதியிலும் பிரத்தியேகமான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இன்ஷா அல்லாஹ், அதிரை மற்றும் மதுக்கூர் நிகழ்ச்சிகளின் வீடியோ பதிவுகள் விரைவில் பதிவேற்றப்படும்.
தொகுப்பு: அதிரைஅமீன்
No comments:
Post a Comment