அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
அதிரையில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை அல்லாஹ்வின் பேரருளால் வழமைபோல் சானா வயல் திடலில் சிறப்புடன் நடைபெற்றது. மழை தூரலின் மிரட்டலையும் மீறி பெருந்திரளாக குழுமிய மக்களிடையே சகோதரர் ஜமீல் எம். ஸாலிஹ் அவர்கள் குத்பா பேருரை நிகழ்த்தினார்கள்.
நபி இப்ராஹிம் (அலை) அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் வழங்கிய கண்ணியங்களை எடுத்துச் சொன்ன சகோதரர் அவர்கள் இவ்வரிய பேற்றை அடைவதற்காக நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் குடும்பம் செய்த தியாகங்களை நினைவு கூர்ந்தார்கள்.
உரையின் முத்திரையாய், நாகரீகத்தின் பெயரால், முன்னேற்றத்தின் பெயரால் ஓர் பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் நம்முடைய இளைய சமுதாயம் காப்பாற்றப்பட மொபைல், டிவி, லேப்டாப், இன்டெர்நெட் (குறிப்பாக ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள்) போன்ற நவீன சாதனங்களை நாமும் தியாகம் செய்ய கடமைபட்டுள்ளோம், குறைந்தபட்சம் பெற்றோர்கள் தங்கள் கண்காணிப்பையும் கட்டுக்கோப்பையும் அதிகப்படுத்தி தங்களின் நேரங்களை தியாகம் செய்திட முன்வர வேண்டுமென சில சமீபகால நாட்டுநடப்புகளை மேற்கோள்காட்டி உரையை நிறைவு செய்தார்கள்.
பெருநாள் குத்பா உரை காணொளி இதோ உங்கள் பார்வைக்கு.
களத்திலிருந்து
அதிரைஅமீன்
படங்கள்
ஆசிக் அஹமது
காணொளி
அதிரைநிருபர்
No comments:
Post a Comment