வானிலை மையங்களிலும், தொலைக்காட்சி சேனல்களிலும், பத்திரிக்கைகளிலும் 'நீலம்' புயல் பக்கம் பக்கமாய் வார்த்தைகளில் அடித்துக் கொண்டிருக்க, தமிழகத்தின் ஏனைய பகுதிகளை போல் நம்ம ஊரிலும், வட்டத்திலும், மாவட்டத்திலும் ரெண்டு நாளும் இடைவெளியில்லா ஒரே மழைதாங்க.
மழை எப்ப விடும் என சாமானியன் ஏங்க,
நடவுக்கு ஏற்ற மழைன்னு ஒரு விவசாயி புகழ, கதிர் அறுக்கக் காத்திருந்த
இன்னொரு விவசாயி அழுகிப் போச்சேன்னு அழ, ஒரு வாரமா தொழிலுக்கு போகலன்னு
மீனவன் புழம்ப, அரசாங்கம் தயார் நிலைன்னு பீலா விட, இப்படியான அவரவர்
பிஸ்னஸ், லாஸ் மனநிலையில் ஒரு வழியா மகாபலிபுரத்துல இன்று மாலை 'நீலம்'
காத்து கரையில கால் வெச்ச நேரம் வானம் ஒரு வழிய ரெண்டு நாள் மழைக்கு தேசிய
கீதம் பாடிருச்சிங்க.
தண்ணீரில் தத்தளித்த அதிரை, பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சை பேருந்து நிலையங்கள் சாம்பிளுக்கு...
Adiraiameen with Ashiq Ahmed
No comments:
Post a Comment