உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, December 28, 2011

நடுநிலை செய்திகள் என்ற பெயரில் இடஒதுக்கீட்டை மறுக்க துடிக்கும் பத்திரிக்கைள்!!!!

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு என்பது சச்சார் கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகள் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். நீதியரசர் சச்சார் அவர்கள் இந்தியா முழுவதும் உள்ள இந்தய முஸ்லிம்களின் நிலையை ஆய்வு செய்து பெரும்பான்மையான மக்கள் நாடு சுதந்திரம் அடைந்தபிறகு மற்ற சமுதாயங்களுடன் கல்வி வேலைவாய்ப்பு ஆகியவற்றை ஒப்பிடும்போது மிகவும் பின் தங்கி இருப்பதை உணர்ந்து முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பது அவரது பரிந்துரை. தொடர்ந்து மத்தியில் ஆட்சியில் இருந்து வரும் காங்கிரஸ் சச்சார் கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்துவதில் தொடர்ந்து மெத்தனப்போக்கையே கடைப்பிடித்து வருகிறது. தேர்தல் வரும் நேரத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் 4.5% இடஒதுக்கீடும் ஒரு மோசடியே என்பதை தெளிவாக தெரிகிறது. காங்கிரஸ் இழுத்தடிப்பு வேலையையும் பாஜக கழுத்தறுப்பு வேலையையும் செய்து வருகிறது.

ஊடகங்கள் அரைகுறை ஒதுக்கீடும் முஸ்லிம்களுக்கு கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக இந்த இடஒதுக்கீடே தவறு என்ற ரீதியில் பிற சமூக மக்களையும் சிறுபான்மையினருக்கு எதிராக துாண்டிவிடும் வேலையை சிறப்பாக செய்து வருகின்றன. நாடு சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகளுக்கு பிறகும் அனைத்து வகையிலும் பின்தங்கியிருக்கும் முஸ்லிம் சமூகம் தொடர்ந்து எந்த வகையிலும் முன்னேறிவிடக்கூடாது என்பதில் ஒட்டுமொத்தமாக தெளிவாக இருக்கிறார்கள்.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சியில் 16% முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தது. இந்த நாடு சுதந்திரம் அடையவேண்டும் என்பதற்காக ஆங்கிலேயர்களின் மீது வெறுப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காக சுதந்திரப்போரட்டாத்தின் ஒரு பகுதியாக ஆங்கிலம் பேசுவது கூடாது ஆங்கிலேயர்கள் அணியும் பேண்ட் அணிவது கூடாது என மார்க்க தீர்ப்பு வழங்கின முஸ்லிம்களின் மதராசக்கள். காந்தியடிகள் இந்தியாவின் பிரதமராக முகமது அலி ஜின்னாவை பரிந்துரை செய்யும் அளவிற்குதான் சுதந்திரபோராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு இருந்தது.ஆனால் சுதந்திரத்திற்கு பிறகு முதலில் பறிக்கப்பட்டது மத அடிப்படையிலான முஸ்லிம்களின் இடஒதுக்கீடு. 64 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த இடஒதுக்கீடு மீண்டும் முஸ்லிம்களுக்கு கிடைக்கவில்லை. ஏற்கனவே இருக்கும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு கிரிமி லேயர் முறையை பயன்படுத்த ஏன் ஊடகங்கள் பரிந்துரை செய்வதில்லை? முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள அசிம் பிரேம்ஜி உள்ளிட்ட விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரை கணக்கில் கொண்டு இடஒதுக்கீட்டை மறுக்க முயற்சிக்கின்றனர். இந்தியாவில் உள்ள பணக்காரர்களை கணக்கில் எடுத்து அந்த சமுதாயத்தின் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியுமா? தொடர்ந்து அரசியல்கட்சிகளின் துரோகத்தால் முஸ்லிம் சமுதாயம் வஞ்சிக்கப்பட்டுவருகிறது.
Thanks and regards

Ameen




No comments:

Post a Comment