உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, April 29, 2011

இன்றும் இனியும்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

இன்று

இன்றைய (29.04.2011) அதிரை ஜூம்ஆவில் கீழக்கரையிலிருந்து வருகை தந்திருந்த சகோதரர் ஜமீல் முஹமது அவர்கள் கலந்து கொண்டு ஜூம்ஆ உரை நிகழ்த்தினார்கள்.

மறுமைச் சிந்தனை என்ற தலைப்பின் கீழ் இன்று முஸ்லீம்களால் மிகச்சாதாரண பாவங்களாக கருதப்படும் வட்டி, வரதட்சணை, விபச்சாராம் போன்ற பல்வேறு பாவங்களை பட்டியலிட்டு மறுமை தன்டனைகளுக்கு அஞ்ச வேண்டிய அவசியம் குறித்தும் குர்ஆன் ஹதீஸ் வழி நின்று எச்சரித்தார்கள்.

இரண்டாம் அமர்வில் இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு என்ற பொருளின் கீழ் உரையாற்றினார்கள். குறைந்த நேரத்தில் அரிய பல செய்திகளை சுவராசியமாக சொன்னவிதம் சிந்திக்கும் மக்களுக்கு பயனுள்ளதாய் அமைந்தது.

இனி

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 01.05.2011 ஞாயிறு முதல் ALM பள்ளியில் ஒருமாத கால கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் துவங்கவுள்ளதை மீண்டும் நினைவுறுத்துகிறோம், 7 வயதுக்கு மேற்பட்ட உங்களின் குழந்தைகள் கலந்து கொள்வதை உறுதி செய்வீர்.

அன்றைய (01.05.2011 ஞாயிறு) மாலைவேளையில், இன்ஷா அல்லாஹ் அஸர் முதல் மஃரிப் வரை, ALM பள்ளி வளாகத்தில் டாக்டர் KVS ஹபீப் முஹமது அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றும் 'இஸ்லாமிய விழிப்புணர்வு கருத்தரங்கம்' நடைபெறவுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் அறிவமுதம் பருக அலைகடலென திரண்டு வாரீர் என அன்புடன் அழைக்கிறோம்.

கருத்தரங்க ஏற்பாடு
ALM பள்ளி மற்றும் குழுவினர்

No comments:

Post a Comment