உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, April 1, 2011

இந்த வார (01.04.2011) ஜூம்ஆ நிகழ்வுகள்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

இந்த மார்க்கத்தில் அல்லாஹ் ஒரு சாராரை உருவாக்கிக் கொண்டே இருப்பான். அவர்களை தனது சேவைக்காக பயன்படுத்திக் கொள்வான் என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஇனபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இப்னுமாஜா பக்கம் – 1, பக்கம் – 1 (ஹதீஸ் எண் 8, அத்தியாயம்: முகத்திமா (குறிப்பு: அஹ்மத் 17817, இப்னு ஹிப்பான் 326 ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

இந்த வார (01.04.2011) ஜூம்ஆவில், சகோதரர் (குடந்தை) சுல்தான் அவர்கள் கலந்து கொண்டு பேரழிவுகள் தரும் படிப்பினைகள் என்ற கருத்தின் கீழ் அல்லாஹ்வின் வல்லமைகளை எடுத்துக்கூறி பாரமுகமாயிருக்கும் நம்முடைய நிலைகளையும் சுட்டி, இன்னும் நாம் படிப்பினை பெறவிட்டால் நாம் ஏற்றிருக்கும் இஸ்லாத்திற்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை என்ற நிலை ஏற்படக்கூடும் என எச்சரித்து உரை நிகழ்த்தினார்கள்.

இரண்டாவது அமர்வில், ரஸூல் (ஸல்) அவர்கள் 'நான் அவரைச் சேர்ந்தவன்' என சிலாகித்து நேசித்த ஜூலைம் (ரலி) அவர்களின் சோக வாழ்வு மற்றும் தியாக வரலாற்றை நினைவுபடுத்தி, ஸஹாபாக்களை பன்படுத்திய குர்ஆனுடைய வாழ்விற்கு அழைத்தார்கள்.

அதிரையிலிருந்து
அப்துல் ரஹ்மான்

No comments:

Post a Comment