உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, June 13, 2012

ஹைதர் அலீ ஆலிம்சாவைத் தூக்கு!

“மனிதர்களே!உங்கள் இறைவனை அஞ்சி வாழுங்கள்...”4:1

அஸ்ஸலாமு அலைக்கும்.

அதிராம்பட்டினத்தின் புதுமனைத் தெருவில் தற்போது சித்தீக் பள்ளி என்ற பெயரில் வழங்கப்படும் சின்னப்பள்ளிக்குச் சொந்தமான 1 ஏக்கர் 59 செண்ட் (சர்வே 255-2) புகல் இனாம் (வக்ஃபு - TD731-இணைப்பு-1)  நிலத்தின் பகுதிகள் சட்ட விரோதமாக விற்கப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்பதும் அது தொடர்பான அரசு ஆவணங்களின் நகல்கள் ஏற்கனவே வலைத்தளங்களில் வலம் வந்ததும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

அதிரை போஸ்ட் வலைத்தளத்துக்கான நேர்காணலில், மேற்காணும் வக்ஃபு சொத்து குறித்து சகோ.ஜான் முஹம்மது எழுப்பியுள்ள கேள்விகளுக்கு (http://www.youtube.com/watch?feature=player_embedded&v=2BwigpNfPIMமற்றும்  http://www.youtube.com/watch?feature=player_embedded&v=8jRwyGFXUaw#!)இதுவரை யாரும் பதில் தரவில்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

Tuesday, June 12, 2012

Saturday, June 9, 2012

கல்வி விழிப்புணர்வு மாநாடு 2012

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அதிரை இஸ்லாமிக் மிஷன் மற்றும் அதிரை எஜுகேஷனல் மிஷன் அமைப்புகள் இணைந்து நடத்திய "நல்லொழுக்கப் பயிற்சி முகாம் நிறைவு விழாவும், கல்வி விழிப்புணர்வு இரண்டாவது மாநாடும் மிகச் சிறப்பாக அதிரை CMP லேன் ALM பள்ளி வளாகத்தில் அதிரை அறிஞர் "தமிழ் மாமணி", புலவர் அஹ்மது பஷீர் அரங்கத்தில் 19-05-2012 அன்று மாலை நடைபெற்றது.

கல்வி வி்ழிப்புணர்வு மாநாட்டின் காணொளிகள் இதோ..

மாணவிகளின் அறிவுத்திறன் வெளிபடுத்தும் நிகழ்ச்சி:



அப்துல் பாஸித் புகாரி அவர்களின் சொற்பொழிவு:



CMN சலீம் அவர்களின் சொற்பொழிவு:


நன்றி- அதிரைநிருபர் குழு

Friday, June 8, 2012

முகத்திரை முன்மாதிரி!


முகத்திரை முன்மாதிரி!

(அண்மையில் எனக்கு வந்த மின்னஞ்சல் தகவலின்படி)

அது பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற சூப்பர் மார்க்கெட்.  தனக்கு வேண்டிய பொருள்களைத் தள்ளு வண்டியில் நிறைத்துக்கொண்டு, காசாளரிடம் கணக்குப் பார்த்துப் பணத்தைச் செலுத்துவதற்காக நின்ற வாடிக்கையாளர்களுள் முழுமையாக ‘ஹிஜாப்’ அணிந்த முஸ்லிம் பெண்மணியொருவர்!

பிரான்சில் ‘ஹிஜாபு’க்கு இருக்கும் எதிர்ப்பு பற்றித் தெரியுமல்லவா?

சில நிமிடங்களில், இந்த முஸ்லிம் பெண்ணின் முறை வந்தது.  தான் வாங்கிய சாமான்களை ஒவ்வொன்றாகக் காசாளர் (கேஷியர்) முன்னால் எடுத்துவைக்கத் தொடங்கினார் இந்தப் பெண்மணி.

அந்தக் கவுண்டரின் காசாளரும் முஸ்லிம் பெண்தான்!  ஓர் அரபு நாட்டிலிருந்து பிரான்சில் குடியுரிமை பெற்று வாழுபவர்!  தன் முன்னாள் நிற்கும் வாடிக்கையாளர் முழுமையாக ‘ஹிஜாப்’ அணிந்து (‘நிகாப்’ எனும் முகத்திரையுடன்) இருப்பதைப் பொறுக்க முடியாத காசாளப் பெண், அவரை முறைத்துப் பார்த்தாள்!

“இந்த நாட்டில் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளுகின்றோம்!  எல்லாம், உங்களைப் போன்றவர்களால்தான்!  ‘ஹிஜாப்’, ‘நிகாப்’ எனும் தீவிரவாத அடையாளங்கள்!  வெளிநாட்டிலிருந்து வந்து இங்கு வேலை செய்யும் நாம், சம்பாதிக்கும் நோக்கத்தில்தான் வந்துள்ளோம்;  மாறாக, நமது மார்க்கத்தை அடையாளம் போட்டுக் காட்டவல்ல!  நமது வரலாற்றை இங்கு வெளிச்சம் போட்டுக் காட்ட அல்ல!  நீ உன் மார்க்கத்தை நடைமுறைப் படுத்த நாடினால், உனது அரபு நாட்டுக்குப் போகவேண்டியதுதானே!?  அங்கே போய், நீ விரும்பியபடி நடந்துகொள்!”  பொரிந்து தள்ளினார், பொறுமையிழந்த அந்தக் காசாளப் பெண்.

இத்தகைய ஏச்சு ஏவுகனையைக் கேட்ட அந்த முஸ்லிம் பெண்மணி, தான் எடுத்து வைத்துக்கொண்டிருந்த சாமான்களை நிறுத்தினார்.  காசாளரைக் கண்களால் சந்தித்தார்!  ஒன்றும் மறுமொழி பேசவில்லை!  அமைதியாகத் தனது ‘நிகாபை’த் தூக்கிக் காட்டினார்!

அரபு நாட்டுக் காசாளப் பெண் அதிர்ச்சியில் உறைந்து போனாள்!

தனக்கு முன்னால் நின்ற பெண்ணோ, பிரெஞ்சுக்காரி!  இதை, அப்பெண்ணின் செம்பட்டை முடியும் நீலக் கண்களும் வெளிச்சம் போட்டுக் காட்டின!

அடுத்து அமைதியாகச் சொன்னாள் அந்த முஸ்லிம் பெண்மணி:  “நான் பிரெஞ்சுக்காரி.  உன்னைப் போன்ற அரபு நாட்டவள் இல்லை!  இது எனது நாடு!  இஸ்லாம் எனது மார்க்கம்!  இஸ்லாத்தில் பிறந்த நீங்களெல்லாம் தீனை விற்றுவிட்டீர்கள், உலகைத் தேடுவதற்காக!  நாங்கள் அந்த உண்மை மார்க்கத்தைத் தேடி, விலை கொடுத்து வாங்கிக்கொண்டோம்!”

அசடு வழியத் தன்னைப் பார்த்துக்கொண்டிருந்த காசாளப் பெண்ணைப் பார்த்து, அமைதியாகக் கூறினார் அந்தப் பேறு பெற்ற பெண்மணி:

“சரி, போகட்டும். இப்போது என் கணக்கைப் பார்!”


-       அதிரை அஹ்மத்

Sunday, May 20, 2012

கல்வி விழிப்புணர்வு மாநாடு - இனிதே நிறைவுற்றது !

அதிரை இஸ்லாமிக் மிஷன் மற்றும் அதிரை எஜுகேஷனல் மிஷன் அமைப்புகள் இணைந்து நடத்திய "நல்லொழுக்கப் பயிற்சி முகாம் நிறைவு விழாவும், கல்வி விழிப்புணர்வு இரண்டாவது மாநாடும் மிகச் சிறப்பாக அதிரை CMP லேன் ALM பள்ளி வளாகத்தில் அதிரை அறிஞர் "தமிழ் மாமணி", புலவர் அஹ்மது பஷீர் அரங்கத்தில் 19-05-2012 அன்று மாலை நடைபெற்றது.


அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் அமீர் அறிஞர் அதிரை அஹ்மது அவர்களின் தலைமையில், அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் மூத்த ஊழியர் சகோதரர் ஜமீல் M.சாலிஹ் அவர்கள் மாநாட்டு நிகழ்வுகளை சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள்.

மாநாட்டின் துவக்கத்தில் நல்லொழுக்கப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு மிகச்சிறப்பாக தங்களது திறமைகளை வெளிக்காட்டிய மாணவிகளின் சிறப்பு நிகழ்சியும் நடைபெற்றது, அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பிரிவில் தங்களின் திறமைகளை திரளாக கூடியிருந்தவர்கள் முன்னிலையில் செய்து காட்டினார்கள்.

அதன் பின்னர் இளம் மவ்லவி அப்துல் பாசித் அல் புகாரி MBA., அவர்களின் அற்புதமான குரல் வளத்துடன் இனிமையாக ஆரம்பித்த சிறப்பு சொற்பொழிவு பின்னர் "மார்க்கக் கல்வியின் சமகால நிலையும் அதன் கட்டாயத் தேவையும்" என்ற தலைப்பில் எழுச்சியூட்டும் விதமாக அனைவரையும் உலுப்பி எடுத்தார்கள், குறிப்பாக பெண்கள் ஆர்வமாக கேட்டனர்.

மஃரிப் தொழுகைக்கான இடைவெளி அறிவிக்கப்பட்டது இந்நிலையில் இந்த சிறப்பான மாநாட்டை நேரலை செய்து கொண்டிருந்த சகோதரர்கள் மாநாடு ஆரம்பிக்கும்போது மாணவிகளின் திறன் வெளிகாட்டும் சிறப்பு நிகழ்வுகளில் பதியப்பட்ட காணொளியை மீண்டும் வெளிநாடுவாழ் சகோதரர்களின் வேண்டுகோளுக்கினங்க ஒளிபரப்பப்பட்டது.

அதன் பின்னர் தொடர்ந்து கல்வி மாநாட்டின் சிறப்பு பேச்சாளார் சகோதரர் CMN சலீம், M.A. அவர்கள் "கல்வியில் விழிப்புணர்வு அடைந்துவிட்டோமா?" என்ற தலைப்பில் பேச ஆரம்பித்தார்கள், வழமையான சிலிர்ப்பூட்டும் உணர்ச்சிபூர்வமாக பேசினார்கள் இதன் காணொளி விரைவில் அதிரை வலைத்தளங்களில் பதியப்படும் இன்ஷா அல்லாஹ்...

மாநாட்டின் நிறைவாக நல்லொழுக்கப் பயிற்சி முகாமில் தவறாமல் கலந்து கொண்ட மாணவிகள், நிறைவுநாள் அன்று நடந்த போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகள், ஒவ்வொரு பிரிவிலும் தனித்து மிளிர்ந்த மாணவிகள், மிகச் சிறப்பாக பயிற்சி முகாமை நடத்திய ஆசிரியைகள் மற்றும் பணியாளார்கள் என்று ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக சான்றிதழுடன் பரிசுகள் வழங்கப்பட்டது.

நிறைவில் விழாவும் நபிவழி காட்டிய முறைப்படி இனிதே நிறைபெற்றது.

மாணவிகள் சிறப்பு நிகழ்வுகள், மாநாட்டு சிறப்பு பேச்சாளர்களின் சிறப்புரை காணொளிகள் விரைவில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்...

மாநாட்டினை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த ADT – அதிரை தாருத் தவ்ஹீத் ஊழியர்கள் அனைவரின் கடின உழைப்பினை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.

Thursday, May 17, 2012

AIM & AEM அமைப்புகள் இணைந்து நடத்தும் கல்வி விழிப்புணர்வு மாநாடு

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!
அஸ்ஸலாமு அலைக்கும்.
 
அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM) & அதிரை எஜுகேஷனல் மிஷன் (AEM)
ஆகிய அமைப்புகள் இணைந்து வழங்கும்
நல்லொழுக்கப் பயிற்சி முகாம் நிறைவு விழாவும்
கல்வி விழிப்புணர்வு இரண்டாவது மாநாடும்

காலம் : 19.5.2012 சனிக்கிழமை மாலை 3 மணி
இடம் : அதிரை அறிஞர், ‘தமிழ் மாமணி’, புலவர் அஹ்மது பஷீர் அரங்கம்
(A.L.M பள்ளி), CMP லைன், அதிராம்பட்டினம்

சிறப்புரைகள்:
·       மார்க்கக் கல்வியின் சமகால நிலையும் அதன் கட்டாயத் தேவையும்
வழங்குபவர் : மவ்லவீ அப்துல் பாஸித் அல் புகாரீ, M.B.A
·       கல்வியில் விழிப்புணர்வு அடைந்துவிட்டோமா?
வழங்குபவர் : சகோதரர் C.M.N. சலீம், M.A.
(தலைவர்:  தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் ;  நிர்வாகி: அன்னை கதீஜா மகளிர் கல்லூரி, அம்மாப்பட்டினம்)

தொடக்கமாக, பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவியர் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நிகழ்ச்சியின் இறுதியில் பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
அனைவரும் வருக!          அறிவமுதம் பருக!
நிகழ்ச்சி ஏற்பாடு: அதிரை தாருத் தவ்ஹீத் ட்ரஸ்ட்

Friday, May 11, 2012

கப்ருகளில் ஸியாரத் (ADT வெளியீடு : 002/2012)

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களிலும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் எழுதிய நூல்கள் அனைத்திலும் “زيارة القبور கப்ருகளை ஸியாரத் செய்வது” எனும் பாடத் தலைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்தத் தலைப்பிலுள்ள “கப்ருகள்” எனும் பன்மைச் சொல்லானது நம் கவனத்திற்குரியது மட்டுமின்றி இவ்வெளியீட்டின் கருப்பொருளுமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “… கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள். அது, மறுமையை உங்களுக்கு நினைவூட்டும்”  - அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி);  நூல் : முஸ்னது அஹ்மது.

மேற்காணும் ஹதீஸில் இடம்பெற்றுள்ள “கப்ருகள்” என்பன, கப்ருஸ்தான் எனும் பொது மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள கப்ருகளைக் குறிப்பதாகும்.

கப்ருகளை ஸியாரத் செய்வதற்காகப் பொது மையவாடிகளுக்குச் செல்பவர்கள், அங்கு அடக்கமாகி உள்ளவர்களுக்காக ஸலாம் கூற வேண்டும். அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்ய வேண்டும். ஆனால் அவர்களிடம் துஆக் கேட்கக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள், பொது மையவாடிகளுக்கு வருகை தரும்போதும் அவற்றைக் கடந்து செல்லும்போதும், “அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன் வ இன்னா இன்ஷா அல்லாஹு பிகும் லாஹிகூன்” (முஃமினான மண்ணறைவாசிகளே! உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும்! திண்ணமாக நாங்களும் அல்லாஹ் நாடும்போது உங்களைப் பின்தொடர்ந்து வரக்கூடியவர்களே!) என்று கூறுவார்கள். - அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி); நூல்கள் : முஸ்லிம், அஹ்மது, நஸயீ.