உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, May 20, 2012

கல்வி விழிப்புணர்வு மாநாடு - இனிதே நிறைவுற்றது !

அதிரை இஸ்லாமிக் மிஷன் மற்றும் அதிரை எஜுகேஷனல் மிஷன் அமைப்புகள் இணைந்து நடத்திய "நல்லொழுக்கப் பயிற்சி முகாம் நிறைவு விழாவும், கல்வி விழிப்புணர்வு இரண்டாவது மாநாடும் மிகச் சிறப்பாக அதிரை CMP லேன் ALM பள்ளி வளாகத்தில் அதிரை அறிஞர் "தமிழ் மாமணி", புலவர் அஹ்மது பஷீர் அரங்கத்தில் 19-05-2012 அன்று மாலை நடைபெற்றது.


அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் அமீர் அறிஞர் அதிரை அஹ்மது அவர்களின் தலைமையில், அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் மூத்த ஊழியர் சகோதரர் ஜமீல் M.சாலிஹ் அவர்கள் மாநாட்டு நிகழ்வுகளை சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள்.

மாநாட்டின் துவக்கத்தில் நல்லொழுக்கப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு மிகச்சிறப்பாக தங்களது திறமைகளை வெளிக்காட்டிய மாணவிகளின் சிறப்பு நிகழ்சியும் நடைபெற்றது, அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பிரிவில் தங்களின் திறமைகளை திரளாக கூடியிருந்தவர்கள் முன்னிலையில் செய்து காட்டினார்கள்.

அதன் பின்னர் இளம் மவ்லவி அப்துல் பாசித் அல் புகாரி MBA., அவர்களின் அற்புதமான குரல் வளத்துடன் இனிமையாக ஆரம்பித்த சிறப்பு சொற்பொழிவு பின்னர் "மார்க்கக் கல்வியின் சமகால நிலையும் அதன் கட்டாயத் தேவையும்" என்ற தலைப்பில் எழுச்சியூட்டும் விதமாக அனைவரையும் உலுப்பி எடுத்தார்கள், குறிப்பாக பெண்கள் ஆர்வமாக கேட்டனர்.

மஃரிப் தொழுகைக்கான இடைவெளி அறிவிக்கப்பட்டது இந்நிலையில் இந்த சிறப்பான மாநாட்டை நேரலை செய்து கொண்டிருந்த சகோதரர்கள் மாநாடு ஆரம்பிக்கும்போது மாணவிகளின் திறன் வெளிகாட்டும் சிறப்பு நிகழ்வுகளில் பதியப்பட்ட காணொளியை மீண்டும் வெளிநாடுவாழ் சகோதரர்களின் வேண்டுகோளுக்கினங்க ஒளிபரப்பப்பட்டது.

அதன் பின்னர் தொடர்ந்து கல்வி மாநாட்டின் சிறப்பு பேச்சாளார் சகோதரர் CMN சலீம், M.A. அவர்கள் "கல்வியில் விழிப்புணர்வு அடைந்துவிட்டோமா?" என்ற தலைப்பில் பேச ஆரம்பித்தார்கள், வழமையான சிலிர்ப்பூட்டும் உணர்ச்சிபூர்வமாக பேசினார்கள் இதன் காணொளி விரைவில் அதிரை வலைத்தளங்களில் பதியப்படும் இன்ஷா அல்லாஹ்...

மாநாட்டின் நிறைவாக நல்லொழுக்கப் பயிற்சி முகாமில் தவறாமல் கலந்து கொண்ட மாணவிகள், நிறைவுநாள் அன்று நடந்த போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகள், ஒவ்வொரு பிரிவிலும் தனித்து மிளிர்ந்த மாணவிகள், மிகச் சிறப்பாக பயிற்சி முகாமை நடத்திய ஆசிரியைகள் மற்றும் பணியாளார்கள் என்று ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக சான்றிதழுடன் பரிசுகள் வழங்கப்பட்டது.

நிறைவில் விழாவும் நபிவழி காட்டிய முறைப்படி இனிதே நிறைபெற்றது.

மாணவிகள் சிறப்பு நிகழ்வுகள், மாநாட்டு சிறப்பு பேச்சாளர்களின் சிறப்புரை காணொளிகள் விரைவில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்...

மாநாட்டினை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த ADT – அதிரை தாருத் தவ்ஹீத் ஊழியர்கள் அனைவரின் கடின உழைப்பினை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.

No comments:

Post a Comment