உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, February 16, 2016

துபையில் "நபி ( ஸல் ) அவர்களை அழ வைத்த சம்பவங்கள்' என்ற தலைப்பில் சிறப்புரை

அன்பார்ந்த யுஏஇ வாழ் சகோதரர்களுக்கு
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.....
 
மதுக்கூர் தவ்ஹீத் தர்மஅறக்கட்டளையின் ( MTCT) துபை மண்டலம் சார்பாக மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி ஒவ்வோர் மாதமும் சிறப்பாக நடைபெற்று வருவது தாங்கள் அறிந்ததே.
 
அதே போல் இன்ஷாஅல்லாஹ் இந்த மாதத்தில் வரும் வியாழன் 19th Feb' 2016 அன்று  மெளலவி ஹுசைன் சலஃபி   அவர்கள் "நபி ( ஸல் ) அவர்களை அழ வைத்த சம்பவங்கள்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள்.

 
விபரங்கள் நோட்டீஸ் அட்டேச்மென்டாக JPEG ஃபார்மேட் இணைப்பில் உள்ளது.

சத்திய இஸ்லாத்தை சரியாக அறிந்து கொள்வோம்.மனித சமூகத்திற்கு படைத்த இறைவனால் வகுக்கப்பட்ட வாழ்க்கை நெறியான இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து அதன்படி செயற்பட அன்புடன் அழைக்கும்


For Madukkur Thowheed Charitable Trust

Tuesday, February 9, 2016

காதலர் தின ஸ்பெஷல்: இதுதான் காதல்!


Maheen Mohamed
காதலர் தின ஸ்பெஷல்
இதுதான் காதல்!
---------------
உம்மு சுலைம் என்ற பெண் மீது காதல் கொண்டு அவரை பெண் கேட்டு போனார் அபு தல்ஹா என்பவர்.
இந்த மணமகன் சாதாரணமானவரல்ல. அந்த ஊரிலுள்ள பணக்காரர்களில் ஒருவர். நன்னடத்தை உள்ளவர், அவர் வாழ்ந்த சமுதாயத்தின் நன்மதிப்பையும் பெற்றவர்.
அது போன்று உம்மு சுலைம் என்ற அந்த பெண்மணியும் அழகுடன் நன்னடத்தையும் நல்ல பண்பாடு மிக்க குடும்பத்தையும் சார்ந்தவர்.
அபு தல்ஹா நேரடியாகவே உம்மு சுலைமை சந்தித்து தனது காதலை அவரிடம் தெரிவித்தார். மணமுடிக்க விரும்புவதை கூறினார்.
நல்லவரும் செல்வந்தருமான அவரை மணமுடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் சிலர் இருக்கும் போது இவருக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் தம்மை தேடி வந்திருக்கிறது. அதை அவர் விட்டு விடுவாரா என்ன?
ஆனால்,
‘நான் இஸ்லாத்தை ஏற்ற ஒரு முஸ்லிம் பெண், நான் எப்படி சிலைகளை வணங்கிக் கொண்டிருக்கும் உங்களை திருமணம் செய்ய முடியும். அது முடியாது’ என்று அவரை திருப்பி அனுப்பி விட்டார்.
தனது காதல் நிறைவேறாமல் போனதால் கனத்த இதயத்துடன் திரும்பி சென்றார் அபு தல்ஹா.
இன்று மனம் மாறியிருக்கும். இல்லையெனில் மாற்ற வேண்டும் என எண்ணி அடுத்தநாள் மீண்டும் அவரிடம் வந்தார்.
‘நான் உங்களை திருமணம் செய்வதற்காக மணக்கொடையாக(மஹராக) நீங்கள் எதைக் கேட்டாலும் நான் தருவேன், அது எனது சொத்துக்களில் பாதியாக இருந்தாலும் சரியே’ என்றார்.
அருiயான இந்த வாய்ப்பை எவரேனும் தவற விடுவாரா?
கோடீஸ்வரியாகும் அந்த வாய்ப்பையும் ஏற்காத உம்மு சுலைம், 
‘நீங்கள் கல்லையும் மரத்தையும் வணங்குகிறீர்கள், தரையில் கிடந்து மிதிபட்ட ஒரு மரத்தை தச்சன் தான் உருவமாக வடிக்கின்றான். அதை நீங்கள் வணங்குகின்றீர்களே!
நன்மையையும் தீமையையும் அது தான் தருகின்றது என நம்பும் உங்களை என்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும், இது மடமையல்லவா!,
படைத்த இறைவனை மட்டுமே வணங்கும் நானும் நீங்களும் இணைய முடியாது’ என்று கூறி மறுத்து விட்டார்.
அவரது கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திரும்பிய அபு தல்ஹா சிந்திக்க துவங்கினார்.
மீண்டும் உம்மு சுலைமை தேடி வந்தார். மீண்டும் இவர் வருவதைக் கண்ட உம்மு சுலைம், வியப்புடன் அவரிடம்
‘என்ன?’ எனக் கேட்டார்.
‘தங்களது கேள்வி என்னை சிந்திக்க வைத்து விட்டது. நாமே உருவாக்கும் ஒரு பொருள் நம்மை எப்படி பாதுகாக்கும், இந்த சிலைகள் எனும் மரக்கட்டைகள் கீழே விழுந்தால் சுக்கு நூறாக உடைந்து போகுமே! தன்னையே பாதுகாக்க முடியாத ஒன்று நம்மை எப்படி பாதுகாக்கும். என்றென்றும் அழியாதவனும், நிலையானவனுமாகிய நம்மை படைத்த அந்த இறைவனால் மட்டுமே நம்மை பாதுகாக்க முடியும் என்பதை நான் உணர்ந்து விட்டேன். நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்’ என்றார்.
மகிழ்ச்சியால் பரவசமடைந்த உம்மு சுலைம், இதுவரை எவருக்குமே கிடைக்காத பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. உங்களது செல்வம் எனக்கு தேவையில்லை. நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதையே நான் மஹராக கொள்கிறேன்’ என்று கூறி திருமணத்திற்கு சம்மதித்தார்.
அவர்களது திருமணமும் நடந்தேறியது.
இதிலிருந்து நாம் கற்கும் படிப்பினை என்ன?
சிலை வணக்கத்தில் இருப்பனும் இறைவனை மறுப்பவனும் தன்னை மணமுடிக்க விரும்பும் போது அவனது கொள்கை எதுவாக இருந்தால் என்ன, அவன் எப்படி போனால் என்ன என்று ஒரு முஸ்லிம் பெண் இருந்துவிடக் கூடாது. எரியும் நரக நெருப்புக்கு அவனை பலியிடலாமா?
அவனிடம் இஸ்லாத்தை அறிமுகப்படுத்த வேண்டும். சத்தியத்தை உணர வைக்க வேண்டும். அது தான் உண்மையான காதலாக இருக்க முடியும்!
இறைவனை மறந்தவர்களுக்கும் மறுத்தவர்களுக்கும் மறுமையில் தண்டனை உண்டு, நாம் இவ்வுலகில் செய்த நற்காரியங்களுக்கு அங்கே பலன் கிடைக்கும், நாம் பிறருக்கு செய்த தீமைகளுக்கு அங்கே தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்த ஒரு முஸ்லிம் பெண், இஸ்லாத்தை விட்டு தான் வெளியேறிவிடாமல் அதில் உறுதியாக இருந்து பிறருக்கும் உண்மையை உணர வைக்க வேண்டும். நரகத்தின் விளிம்பிலிருந்து அவர்களை பாதுகாக்க வேண்டும்!
அது தான் உண்மைக்காதல்.
Thanks to source:
https://www.facebook.com/permalink.php?story_fbid=228977610769947&id=100009731281836

Wednesday, January 27, 2016

துபையில் - உன் எதிரியை அறிந்து கொள்! இன்ஷா அல்லாஹ் 29.01.2016 வெள்ளியன்று!


குடும்பத்தோடு பங்கு கொண்டு இஸ்லாமிய கல்வியை பெற்று செல்ல அழைக்கின்றோம்
அமீரக வரலாற்றில் முதல் முறையாக துபாய் இஸ்லாமிய அமைச்சகம் நடத்தும் ஜைத் பின் முஹம்மது குடும்ப ஒன்றிணைவு நிகழ்வில் தமிழ் இஸ்லாமிய உரைக்கான ஓர் வாய்ப்பு அல்ஹம்துலில்லாஹ்,

தலைப்பு : 
உன் எதிரியை அறிந்து கொள் !
உரையாற்றுபவர் : 
மௌலவி அப்துல் பாஸித் புஹாரி
நிகழ்ச்சி நாள் : 
29/01/2016 வரும் வெள்ளிக்கிழமை
நேரம் : 
சரியாக இரவு 8.00 மணிக்கு
இடம் : 

ஜைத் பின் முஹம்மது குடும்ப ஒன்றிணைவு இடம் ,அல் கவானிஜ் , துபாய்.


வசதிகள் :-

*அனைத்து இடங்களில் இருந்தும் வாகன வசதி (FREE TRANSPORTATION)

வாகன வசதிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 0567371449, 0567371442

*Rashidiya Metro Station அருகில் இங்கிருந்து Bus வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 6.00 மணி முதல் 8.00 மணி வரை,

* ஆண் பெண்களுக்கு தனித்தனி இட வசதி, 

*குழந்தைகளுக்கு விளையாடுமிடம் (CHILDRENS PLAY AREA),

*இஸ்லாமிய கடை வீதிகள் (SOUQ),

*விலங்கினங்கள் உள்ளடங்கிய பூங்கா(ANIMAL PARK),

* அருங்காட்சியகம் (Museum)

Tuesday, January 5, 2016

அதிரையில் இன்று (06.01.2016 – புதன்) மார்க்க விளக்கப் பயிலரங்கம்



இன்ஷா அல்லாஹ் இன்று  (06.01.2016 – புதன்) மாலை மஃரிப் தொழுகையை தொடர்ந்து, அதிரை CMP லேன் பகுதியில் அமைந்துள்ள ALM பள்ளிக்கூட வளாகத்தின் உள்ளே, மாணவ மணிகளுக்கும், இளைய சமுதாயத்திற்கும், தாவா களத்தில் உள்ளவர்களுக்கும் என ஓட்டுமொத்த சமுதாயத்திற்கும் பயனுள்ளதோர் மார்க்க விளக்க பயிலரங்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

விளக்கவுரை:
மவ்லவி. அர்ஹம் இஹ்ஸானி

தலைப்பு:
இஸ்லாம் உணர்த்தும் வாலிப வாழ்க்கை

குறிப்பு
1. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

2. நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் மஃரிப் தொழுகை முடிந்தவுடன் தாமதமின்றி ஆரம்பமாகும் என்பதால் அனைவரும் மஃரிப் தொழுகைக்கு ALM பள்ளிக்கூட மஸ்ஜிதிற்கு வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிகழ்ச்சி ஏற்பாடு
அதிரை தாருத் தவ்ஹீத் - ADT

மேலும் விபரங்களுக்கு: 
நிஜாம் 9597841980 
கமால் 9543577794

அதிரையில் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் பிளக்ஸ் போர்டுகள்


அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக மக்கள் அதிகம் நடமாடும் அதிரையின் முக்கிய வீதிகளில் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் முகமாக ஃபிளக்ஸ் போர்டு பிரச்சாரம் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது இன்ஷா அல்லாஹ்.

காலத்திற்கேற்ற குர்ஆன் வசனங்கள் மற்றும் நபி மொழிகளை கொண்டு மக்களுக்கு நன்மை ஏவியும், தீமை குறித்து எச்சரித்தும் பிளக்ஸ் போர்டுகள், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மாற்றும் வகையில் காலேஜ் முன்புறம், பழைய போஸ்ட் ஆபிஸ் முக்கம் மற்றும் தக்வா பள்ளி அருகிலும் ஆரம்பமாக வைக்கப்பட உள்ளன.

இந்த நன்மையான காரியத்தில் பங்கு கொள்ள விரும்பும் தனி நபர்களும், ஸ்பான்ஷர் செய்ய விரும்பும் வர்த்தக பிரமுகர்களும் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.

ஒரு ஃபிளக்ஸ் 400 ரூபாய் வீதம் 3 ஃபிளக்ஸ்களுக்கு 1200 ரூபாய் மட்டுமே.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்க: கமாலுதீன் 0091 9543577794

Monday, January 4, 2016

ஷிர்க்கை ஒழிக்கப் போகும் லட்சணமும் பேருராட்சி மன்ற தலைவர் வீட்டு கல்யாணமும்

கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போக ஆசைப்பட்டானாம் என தமிழ் சகோதரர்கள் கூறுவர் அதுபோல கூட இருப்பவர்களை திருத்த முடியாதவர்கள் ஊரை கூட்டி 'ஷிர்க்'கை ஒழிக்கப் போகிறார்களாம்.

பீஜேயானிகள் என்று மக்களால் அழைக்கப்படும் அதிரை முஃதஸ்ஸிலா குழுவினருக்கும் பேரூராட்சி மன்ற தலைவருக்கும் உள்ள ஊரறிந்த உறவை தெரியாதவர்களுக்கு மட்டும் ஒருசில விஷயங்களை ஞாபகமூட்டுகிறோம்.

பீஜேயானிகளுக்கும் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினருக்கும் கடந்த வருடம் நடந்த விவாதத்தின் போது, முஃதஸ்ஸிலாக்களுக்கு ஆதரவாக மேடையேறியவர் நம்முடைய அதிரை பேரூராட்சி மன்ற தலைவர்.

அதுபோல் பேரூராட்சி மன்ற தலைவருக்கும் பேரூராட்சி செயல் அலுவலருக்கும் நடந்த பிரச்சனையின் போது பேரூராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவாக ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியவர்கள் அதிரை முஃதஸ்ஸிலாக்கள்.

மேலும் பேரூராட்சி மன்ற தலைவர் தன்னுடைய வீட்டின் ஒரு பகுதியான 'ஆயிஷா மகளிர் அரங்கம்;' என்ற இடத்தையே பீஜேயானிகளுக்கு பிரச்சார மேடையாக ஒதுக்கிக் கொடுத்துள்ளார்.

இதுபோல் முஃதஸ்ஸிலாக்களின் 'சர்ச்சைக்குரிய மதபோதகர்' அஷ்ரப்தீன் என்பவர் பேரூராட்சி தலைவருக்கு தவ்ஹீதை எடுத்து சொல்கிறோம், விரைவில் தவ்ஹீது கொள்கையை எற்று பின்பற்றுவார் என்கிற ரீதியில் ஒரு வருடத்திற்கு முன்பே நற்சான்று வழங்கினார்.

இப்படியாக பேரூராட்சி தலைவரும் ததஜ முஃதஸ்ஸிலாக்களும் நகமும் சதையுமாக பின்னிப் பிணைந்திருந்த நிலையில், கடந்த வாரம் பேரூராட்சி மன்ற தலைவருடைய குடும்ப திருமணங்கள், குறிப்பாக அவருடைய மகனுக்கும் திருமணம் நடைபெற்றது. 

இந்தத் திருமணங்கள் எப்படி நடைபெற்றன என்பதை ஊரல்ல, உலகே அறியும் வண்ணம் ஆடம்பரம் ஒரு பக்கம் என்றால் ஒரு அரசியல் கட்சியின் மாநாடோ என வியக்கும் வண்ணமும் கல்யாணத்திற்கு கட்சி சாயம் பூசப்பட்டது. இது யாருடைய வழிமுறை என தெரியவில்லை!

இஸ்லாமிய திருமணங்கள் எப்படி நடைபெற வேண்டும் என்பதை எம்பெருமானார் (ஸல்) அவர்கள் வழிகாட்டி சென்றுள்ளார்கள் என்பதை முஸ்லீம்கள் அறிவர் அதை பீஜேயானிகளிடம் சொன்னால் இது ஹதீஸே இல்லை என மறுத்துவிடலாம். அதனால் மக்களே நீங்களே கேளுங்கள், உங்கள் ததஜ பிரிவு சொல்லும் 'நபிவழி' திருமணம் இப்படித்தான் செய்ய வேண்டும் என ஒரு 'கொளுகை' வைத்திருப்பீர்கள் அல்லவா. அதிலிருந்து சுமார் 10 சதமாவது இந்த திருமணத்தில் இருந்திருக்குமா? 

தங்கள் கூடவே கூடிக்குழாவும் பேரூராட்சி மன்ற தலைவருக்கே உங்களால் மார்க்கத்தை சொல்ல முடியவில்லை என்றால் மஹரமில்லாத பெண்களை அழைத்துச் சென்று 'ஷிர்க்'கை ஒழிக்கும் லட்சணம் எப்படி இருக்கும் என மக்களே கேளுங்கள்.