உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, August 16, 2015

உமி, வைக்கோல் மூலம் மின்சாரம் - வழிகாட்டும் இலங்கை


மின்சாரம், தமிழகத்தை பொருத்தவரை ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் மக்களை ஏமாற்றவும், தங்களுக்குள்ளே வசைபாடவும் பயன்படுத்தும் ஓர் சொல், இதுவே மத்திய கட்சிகளின் நண்பர்களுக்கு லாபத்தை வாரி வழங்கும் ஒரு தொழில்.

மக்களுக்கோ யார் ஆட்சிக்கு வந்தாலும் இலவசமாக தரப்படும் ஓர் வெற்று வாக்குறுதி மற்றும் நிரந்தர இம்சை.

மின்சாரம் என்பது நீர், அணு, காற்று, கடல் அலை, அனல் என அனைத்து பொருளின் மீதும் உலகெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் எடுக்க எடுக்க குறையாத ஒரு சுரபி. இதை உற்பத்தி செய்து முறைப்படுத்தி விநியோகிக்க தேவை ஒரு மக்கள் நல அரசு என்பதை பாலர் பள்ளி குழந்தையும் அறிந்த ஒன்று.

நமது நாட்டில், நமது மாநிலத்தில் நிலவும் மின் வெட்டு பிரச்சனைகளுக்கு மிக எளிய தீர்வை தருகின்றது நமது அண்டை நாடான இலங்கையில் இயங்கும் ஓர் சிறிய மின் உற்பத்தி நிலையம்.


கத்தார் நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் ஷேக் அலி அப்துல்லா அல் சுவைதி என்பாரின் முதலீட்டிலும், நமது சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் மற்றும் இரு இலங்கை நிறுவனங்களின் வடிவமைப்பிலும் இந்த மின் ஆலை கட்டமைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் என்ற ஊரில் விவசாய கழிவுப் பொருட்களான உமி, வைக்கோல் மற்றும் எந்த நிலத்திலும் செழித்து வளரும் தன்மையுடைய ஒரு வகை வாகை மரம் ஆகியவற்றை எரிபொருளாக கொண்டு மின்சாரம் தயாரிக்கின்றனர்.


(இந்த மரத்தின் சரியான பெயரை அறியத் தந்தால் திருத்திக் கொள்வோம்)

முன்னெச்சரிக்கையாக சுமார் 5 ஆண்டுகளுக்குத் தேவையான உமி மற்றும் வைக்கோல் சேமித்து வைக்கப்பட்டு, 2009 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு, 2011 ஆம் ஆண்டு 2.5 மெகாவாட் மின் உற்பத்தியுடன் செயற்பாட்டுக்கு வந்த இந்த மின் ஆலை 2015 ஆம் ஆண்டு இறுதிக்குள் 5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கவும், 2016 ஆம் ஆண்டுக்குள் நீராவி கொதிகலன்கள் உதவியுடன் 10 மெகாவாட் உற்பத்தி செய்யவும் இந்த மின் ஆலை இலக்கு நிர்ணயித்துள்ளது. 


சுமார் 1000 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாவும் வேலைவாய்ப்பை வழங்கி, விவசாய கழிவுப் பொருட்களுக்கும் சந்தை மதிப்பை ஏற்படுத்தி, மாசில்லா சுற்றுச்சூழலுக்கும் வாய்ப்பேற்படுத்தியுள்ளதுடன் வாகை மர தழைகளின் அபரிமித விளச்சலால் கால்நடைகளுக்கு உணவும் தாராளமாக கிடைக்கும் நிலையை இந்த மின் ஆலை திட்டம் ஏற்படுத்தியுள்ளது.

இது ஒருபுறம் செயல்பட, மன்னார் வளைகுடாவை ஒட்டியுள்ள புத்தளம் கடற்கரை பிரதேசங்களில் காற்றாலைகளை நிறுவியும் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றனர்.

அரசு நினைத்தால் மக்களை பங்குதாரர்களாக ஏற்று ஒவ்வொரு விவசாயம் மற்றும் கடற்சார் பிரதேசங்களில் இத்தகைய எளிய ஆனால் பலன் நிறைந்த மின் ஆலைகளை அமைக்கலாம்.

தமிழகத்தில் உமி, வைக்கோலுக்கு தான் பஞ்சமா? அல்லது கடற்கரைகள் தான் இல்லையா?  இதுபோன்ற சிறு சிறு மின் உற்பத்தி ஆலைகளை நிறுவினாலேயே காலப்போக்கில் மின்மிகை மாநிலமாக மாறலாம். மாறுமா? தன்னலமற்ற மக்கள் நல தலைவர்கள் கிடைப்பார்களா?

நம்பிக்கையுடன்
அதிரை அமீன்

படங்கள்: ஜமால்

Wednesday, August 12, 2015

6 வளைகுடா அரபு நாடுகளை இணைக்கும் ரயில் 2018 ஓடும் - புதிய திட்டம் அறிவிப்பு



வளைகுடா ஒத்துழைப்பு நாடுகள் என அழைக்கப்படும் குவைத், சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய 6 எண்ணெய் வளமிக்க அரபு நாடுகளை இணைக்கும் புதிய இரயில் திட்டம் 2018 ஆம் ஆண்டில் ஓடத் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்திலிருந்து துவங்கும் இரயில் சவூதி வழியாக பஹ்ரைன், கத்தார் நாடுகளை கடந்து அமீரகத்தை தாண்டி ஓமனின் மஸ்கட் நகரை சென்றடையும் எனவும், இடையிலுள்ள பஹ்ரைன் தீவும் கத்தார் நாடும் தனியான துணை பாதை மற்றும் கடல்வழி பாலங்கள் மூலம் சவூதி இரயில் வழித்தடத்துடன் இணைக்கப்படும்.

சுமார் 15.4 பில்லியன் டாலர் செலவில் 2117 கி.மீ தூரத்திற்கு கட்டமைக்கப்படவுள்ள இந்த இரயில்வே திட்டத்தில் பயணிகள் இரயில் 220 km/hr வேகத்திலும், சரக்கு இரயில்கள் 80 முதல் 120 - 220 km/hr வேகம் வரை செல்லும். இந்த இரயில்கள் அனைத்தும் டீசலை எரிபொருளாக கொண்டு இயங்கும்.

நன்றி
குவைத் டைம்ஸ்
http://news.kuwaittimes.net/website/gulf-railway-project-to-be-completed-in-2018/

தமிழில்
அதிரை அமீன்


அதெல்லாம் சரி, இல்லாத ஊருக்கெல்லாம் இரயில் வருது ஆனா இருந்த ஊருக்கு இனி எப்போ இரயில் வரும், பேசாம அதிரையை அரபு நாட்டுக்கு எழுதி கொடுத்துருவோமா! அட்லீஸ்ட் இருந்த ரயிலாவது திரும்ப கிடைக்கலாம்!!

நம்மவூரு பக்கத்திலே ஒரு அக்குபஞ்சர் டாக்டர்

இதுவோர் பரிந்துரையே அன்றி வர்த்தக விளம்பரமல்ல!

ரம்மியமான ஒரு மாலை பொழுதில், சிலுசிலுவென தூவிய சாரலில் இன்பமாய் நனைந்த நிலையில் 'முஹமது ரஃபி' என்ற இந்த இளைஞரை அவரது அறந்தாங்கி வீட்டில் சந்தித்தோம், ஏன்?


மாற்றுவழி மருத்துவமாக உலகிற்கு அறிமுகமான ஆங்கில மருத்துவம் இயற்கை மருத்துவ முறைகளை பின்னுக்குத் தள்ளி, பக்கவிளைவுகள், பொருளாதார விரயம், வலியுடன் கூடிய ரண சிகிச்சை, அலைச்சல் என பல தீமைகளை தன்னகத்தே கொண்டிருந்தாலும் இன்றைய உலகில் மனிதர்களால் முதன்மை  மருத்துவமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது மனித முரணே.


நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம், உணவே மருந்து, ரெய்கி, மூலிகை மருத்துவம், உடற்பயிற்சி போன்று பக்க விளைவுகள் அற்ற, பணத்திற்கும் உடலுக்கும் பாதுகாப்பான மருத்துவ முறைகளில் ஒன்றே சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவம். (தொடு அக்குபஞ்சர் மருத்துவம் என்ற பெயரிலும், ஒரு சில நாள் மட்டும் அக்குபஞ்சர் மருத்துவத்தை கற்று விட்டும் பல போலிகள் உலா வருவது குறித்தும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது) இவர் அந்த தொட்டு விளையாட்டு மருத்துவரல்ல மாறாக சித்த வைத்திய பரம்பரையில் பிறந்து தனது தந்தையுடன் மும்பையில் மருத்துவ தொழில் செய்து கொண்டிருக்கையில், மும்பை மாநகரில்,


"THE BAREFOOT ACUPUNCTURISTS PROJECT" என்ற சர்வதேச திட்டத்தின் கீழ் உலகின் தலைசிறந்த வெளிநாட்டு அக்குபஞ்சர் மருத்துவர்களிடம் நேரடியாக பயின்றவர். மஹாராஷ்டிரா அப்பல்லோ மருத்துவமனையில் அக்குபஞ்சரிஸ்டாக பணியாற்றியவர்.





இலங்கையில் சில ஆண்டுகளாக பல்வேறு அக்குபஞ்சர் மருத்துவ முகாம்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளார், கற்று கொள்வதற்கு மிக எளிமையான அக்குபஞ்சர் மருத்துவத்தை கற்றுத் தருவதற்கும் அவர் தயாராகவுள்ளார். 

மேலும் இந்த மருந்தில்லா மருத்துவத்தின் மூலம் 'மூட்டு வலி', கை கால் கடுப்பு, கழுத்து பிடிப்பு, முதுகுவலி, குழந்தைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் என பல்வேறு நோய்களுக்கும் இந்த சீன குத்தூசி வைத்திய முறையின் மூலம் தீர்வு காண்கிறார், அத்தகைய தீர்வுகளும் அல்லாஹ்வின் நாட்டத்தால் மட்டுமே ஏற்படுகின்றன என்பதையும் சேர்த்து சொல்ல அவர் மறப்பதில்லை.

பல்லாயிரக்கணக்கில் செலவு செய்தும் ஊர் ஊராக சென்றும் அல்லோபதி (ஆங்கில) வைத்தியம் பார்க்கத் தயாராகவுள்ள நாம் ஏன் இந்த எளிய, பொருளாதார விரயமில்லாத, அடாவடி கட்டணமில்லாத, மருந்தில்லாத மருத்துவ முறையை ஒரு முறை முயற்சிக்கக்கூடாது?

மாதத்தில் 3 வாரம் தமிழக முழுவதும் சுற்றுப்பயணத்திலும், ஒரு வாரம் மட்டும் அறந்தாங்கியிலும் தங்கி இருந்து அக்குபஞ்சர் வைத்தியம் செய்யும் மருத்துவர் முஹமது ரஃபி அவர்களை 80 98 66 11 60 என்ற எண்ணில்  தொடர்பு கொண்டு முன்பதிவின் மூலம் நேரடியாகவோ அல்லது நமது வீட்டிற்கே வரவழைத்தும் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த எளிய மருத்துவ முறையை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சமுதாய அமைப்புக்கள் ஊர்தோறும் சிறப்பு அக்குபஞ்சர் மருத்துவ முகாம்களை நடத்த முன்வர வேண்டும்.

சந்திப்பில் உதவி
அப்துல் ஹக்கீம் - அறந்தாங்கி

புகைப்படம்
ஜமால் முஹமது - அதிரை

தோள்பட்டை வலிக்கு ஒரு நாள் அக்குபஞ்சர் வைத்தியம் மூலம் குணமடைந்தவன் என்ற வகையில் நன்றியுடன் பரிந்துரைப்பது

அதிரை அமீன்

Tuesday, August 11, 2015

14.08.2015 அன்று துபையில் மவ்லவி அப்துல் பாசித் அவர்களின் மார்க்க விளக்க நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ்... 
மௌலவி. அப்துல் பாஸித் புஹாரி அவர்களின் 
மார்க்க விளக்க நிகழ்ச்சி
 
 
அன்புடன்,
தவ்ஹீத் இல்லம் தஃவா குழு,
டெய்ரா, துபை
Tel: 00971 4 2981931

Thursday, July 16, 2015

புதிய இடத்தில் பெருநாள் திடல் தொழுகை - அதிரை ஈத் கமிட்டி அறிவிப்பு


அன்பார்ந்த அதிரைவாழ் முஸ்லீம்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வழமையாக பெருநாள் திடல் தொழுகைகள் மேலத்தெரு சானாவயல் பகுதியில் நடைபெற்று வந்தது இனி இன்ஷா அல்லாஹ் வரும் ஈதுல் ஃபித்ரு முதல் புதிய திடலில் நடைபெறும் என அதிரை ஈத் கமிட்டியினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ் வரும் பெருநாள் தினத்தன்று காலை சுமார் 7 மணியளவில் கீழத்தெரு பகுதியில், காட்டுப்பள்ளி தர்காவுக்கு இடதுபுறம் அமைந்துள்ள மைதானத்தில் தொழுகை நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு: 
பெருநாள் தினத்தன்று ஈத் தொழுகை நேரத்தில் மழை பெய்தால் ALM பள்ளிக்கூட வளாகத்தில் தொழுகை நடைபெறும்.

இவண்
ஈத் கமிட்டி - அதிரை

புதர் மண்டியுள்ள பகுதிகளை சீரமைக்கும் பணிகள் மிகத்துரித வேகத்தில் நடைபெற்று வருவதை காட்டும் படங்கள் கீழே...




தகவல்
அதிரை அமீன்

Wednesday, July 1, 2015

அதிரையில் தொடர் தொந்தரவு தரும் தமிழ்நாடு புடவைகள் சமாத்!!!

பெண்களின் புடவைக்குள் ஒழிந்து கொண்டு போக்கு காட்டுவதில் வல்லவர்களான நவீன முஃதஸ்ஸிலாக்கள் என முஸ்லீம்களாலும், இல்லையில்லை நாங்கள் அதற்கும் மேலே என வஹியை மறுத்து தங்களை தாங்களே காஃபீர்கள் என அடையாளப்படுத்திக் கொள்ளும் தனி மனித வழிபாட்டு கும்பல் ஒன்று அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக அதிரையில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நடைபெற்று வரும் புனிதமிகு ரமலான் மாத மார்க்க விளக்க தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியினை தடுத்திட உள்ளூர் காவல்துறை, உளவுத்துறை என மாவட்ட தாயி என தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் அதிரையை சேர்ந்த ஒருவர் மூலம் புகார் செய்தும் சட்டப்படி ஒன்றும் செய்ய இயலாத காரணத்தால் தங்களின் தலைவன் வழி குலத்தொழிலான,

மஹரமில்லாத பெண்களை ஊருக்கு ஊர் அழைத்துச் சென்று ஆட்டம் பாட்டம் (ஆர்ப்பாட்டம்) காட்டுதல்,

பெண்களை வலிய 'பழக' வைத்து இஸ்லாமிய அழைப்பாளர்களின் மானத்தோடு விளையாடுதல்,

பெண்களை பொய் சாட்சிகளாய் தயார் செய்து உடனிருந்த சகோதரர்களின் மானத்தோடு விளையாடுதல் 

என்ற வரிசையில் இப்போது,

தினமும் பெண்களை ஏவி மேல்மட்ட காவல்துறையிடம் போன் மூலம் புகார் தெரிவித்து மார்க்க விளக்க நிகழ்ச்சிகளை நிறுத்த தொடர் தொந்தரவு தந்து வருகின்றனர் ஆனால் காவல்துறை நேருக்குநேர் பேச அழைக்கும் போது (நேற்று 30.06.2015 மாலை தஞ்சை எஸ்பியின் உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை டிஎஸ்பி முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு கூட காவல்துறையினர் அழைத்தும் வராமல்) ஒடி ஒழிகின்றனர்.

அதேவேளை உண்மையில் பெண்கள்  தொடர்புடைய பலரை தங்களுடனேயே வைத்துக் கொண்டும் அவ்வப்போது அதிசய பாவமன்னிப்பு வழங்கிக் கொண்டும், 'தனக்கு தானே காஃபிர்' பட்டம் வழங்கிக் கொண்ட, ஸஹீஹான ஹதீஸ்கள் எனும் வஹியை மறுக்கும் ஒரு ஜென்மத்தை பின்பற்றக்கூடிய கும்பல், ஏற்கனவே விவாதத்தில் சூடுபட்டதால் நேரில் அதிரை தாருத் தவ்ஹீதை எதிர்த்து நிற்க தைரியமின்றியும்,
 
இவர்களை பற்றி நன்கு அறிந்த உள்ளூர் காவல்துறையிடம் வேலைக்கு ஆகாது என்பதால் தங்களின் தலைவன் வழி குலத்தொழிலான பெண்களை பயன்படுத்தி புனிதமிகு ரமலான் நிகழ்ச்சிகளுக்கு தடையேற்படுத்த தினமும் காவல்துறையின் உயர்மட்டம் வரை புகார் அளித்து கேவலத்தை விலைக்கு வாங்கி வருகின்றனர்.

வெற்று கோஷம் மட்டுமே போடத்தெரிந்த குஞ்சுகளே! உங்கள் தலைவனிடம், உண்மையான தவ்ஹீத் நெறி தடுக்கத் தடுக்க தான் வளரும் என்ற வரலாற்றை கேட்டு தெரிந்து கொள்.

புனிதமிகு ரமலான் என்பதால் மிகவும் பொறுமையுடன் நடந்து கொள்ளும் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர் தகுந்த பதிலடியை ரமலானுக்குப் பின் வழங்குகிறார்களோ இல்லையோ நிச்சயம் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருக்கும் எல்லாம் வல்ல ரஹ்மான் உங்களின் அட்டூழியங்களுக்கு முடிவுகட்ட ஒவ்வொரு ஊரிலும் ஒரு 'மாதவன் நாயரை' உருவாக்கி உங்களை கேவலப்படுத்தலாம். 

மார்க்கத்தை அதன் தூய வடிவில் எதையும் மறைக்காமல் மறுக்காமல் எடுத்துச் சொல்ல, இப்புனிதமிகு மாதத்தில் நன்மைகளை கொள்ளையடிக்க உங்களுக்கு துப்பில்லாவிட்டாலும் இறை தண்டனைகளிலிருந்து தப்பிக் கொள்ள சில்லரைத்தனங்களை கைவிட்டு விட்டு புனிதமிகு ரமலானில் இறைவனிடம் பாவமன்னிப்பு தேடி மீண்டும் இஸ்லாத்திற்குள் இணைந்து வெற்றியடைய முயற்சியுங்கள். ஏனெனில் மறுமையில் உங்களால் ஆர்ப்பாட்டம் செய்தெல்லாம் தப்ப முடியாது என எச்சரிக்கின்றோம். 

"ஆர்ப்பாட்டம் இங்கேயும் உங்களுக்கு பலனளிக்கவில்லை என்பது வேறு கதை"

அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் புனிதமிகு ரமலான் தொடர் மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி சூழ்ச்சிகளை தாண்டி சிறப்புடன் நடந்து வருகிறது. ஒருவேளை நிகழ்ச்சி தடைபட்டால் கூட எண்ணத்திறகேற்ற கூலியை வழங்க அல்லாஹ் போதுமானவன்.