உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, October 24, 2014

முஸஃபா வாராந்திர பயான் - தொழுகையினூடாக இஃலாஸ்

முஸஃபாவில் இந்த வாரம் நடைபெற்ற (24.10.2014) நிகழ்ச்சியில் ஏகத்துவ அழைப்பாளர், பொறியாளர் ஜெய்லானி அவர்கள் கலந்து கொண்டு இனி தொடர்ந்து நடத்தப்பெற இருக்கின்ற திருக்குர்ஆன் விளக்க வகுப்புக்களின் அறிமுகவுரையாக 'தொழுகையினூடாக இஃலாஸ்' என்ற கருத்தின் கீழ் விளக்கமளித்தார்கள்.

இன்றைய வகுப்பில், நம்முடைய தொழுகைகள் எவ்வாறு உயிர்ப்புள்ளவையாக அமைய வேண்டும், இறை வசனங்களின் அர்த்தம் தெரிந்து நாம் நம் இறைவனுடன் தொழுகையினூடாக உரையாடுவதால் ஏற்படக்கூடிய இம்மை மறுமை நன்மைகள் எவ்வாறானவை என்பது குறித்தும் விளக்கினார்கள்

வரும் வாரம் முதல் தேவையான விஷயங்களை குறிப்பெடுத்துக் கொள்வதற்கு வசதியாக கலந்து கொள்வோர் குறிப்பேடுகளுடன் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இறுதியாக, தொழுகையினுடைய வக்த்துகள் முற்பட்டு வருவதை கணக்கில் கொண்டு இனி இஷா தொழுகைக்குப்பின் வாராந்திர மார்க்க விளக்க வகுப்புக்கள் நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டு கஃபாரா துஆவுடன் கலைந்து சென்றனர்.

லால்குடி முஸ்தபா

No comments:

Post a Comment