அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
06.12.2013 வெள்ளியன்று இஷா தொழுகைக்குப் பின் முஸஃபா, பனியாஸ், சைனா கேம்ப் பகுதியில் அமைந்துள்ள MBM கேம்ப் பள்ளியில் தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் 'மறுமை வாழ்க்கை' எனும் தலைப்பில் உருக்கமானதோர் உரை நிகழ்த்தினார்கள்.
07.12.2013 சனிக்கிழமை இஷா தொழுகைக்குப் பின் முஸஃபா, சாபியா 12ல் அமைந்துள்ள சகோதரர் அதிரை மாலிக் அவர்களுடைய இல்லத்தில், 'நன்மைகளை பெற்றுத்தரும் நல்லமல்கள்' என்ற தலைப்பில் சிறப்பு வகுப்பு நடைபெற்றது. அரிய பல நற்செய்திகளை எடுத்துக் கூறி அமல்களை அதிகமதிகம் செய்திட ஆர்வமூட்டினார்.
08.12.2013 ஞாயிறன்று இஷா தொழுகைக்குப்பின் முஸஃபா, ஐகாட் சிட்டி 2ல் நடைபெற்ற இஸ்லாமிய மார்க்க அமர்வில், 'இஸ்லாம் வளர்ந்த வரலாறு' என்ற தலைப்பில், ஸஹாபாக்களின் தியாக வரலாற்றை நினைவு கூறி பொடுபோக்கில் வாழும் நம் நெஞ்சங்களை தட்டியெழுப்பினார்.
மேற்காணும் நிகழ்வுகளில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
அதிரைஅமீன்
No comments:
Post a Comment