உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, July 6, 2013

கடவுளுக்கே இந்த கதியா ...

கடவுளுக்கே இந்த கதியா........?



அவ்வளவு யாத்ரீகர்களை பத்ரிநாத், கேதார்நாத் 'புனித ஸ்தலங்கள்' ஈர்த்துள்ளது. இவ்வளவு ஆண்டுகளாக வந்து போகும் பக்தர்களுக்கும் அந்த கடவுளர்களால் பாதுகாப்பு அளிக்க முடியவில்லை. அங்கேயே இருப்பவர்கள் மனிதாபிமானத்துடன் வாழவும் அந்தக் கடவுளர்கள் ஒன்றும் செய்யவில்லை. பேரழிவின் விளிம்பில் பயத்திலும், உணவும், தண்ணீரும் இல்லாமல் இருக்க்ம் 'பக்தர்களை' சுரண்டும் கொள்ளைக்கும்பலைத்தான் அந்த 'பகவான்' வளர்த்து விட்டுள்ளார்.

அவனையன்றி (வேறு தெய்வங்கள் இருப்பதாக) நீங்கள் எண்ணிக்கொண்டிருப்பவர்களை அழைத்துப்பாருங்கள்; அவர்கள் உங்களுடைய கஷ்டத்தை நிவர்த்திக்கவோ அல்லது திருப்பிவிடவோ சக்தி பெறவில்லை (என்பதை அறிவீர்கள்). (17:56)


அதுவும் 40 அடி உயர சிவபெருமான் சிலையின் வாயை அடைத்துச் சென்ற வெள்ளப்பிரவாகம் சிவபெருமான் பார்வதியுடன் குடியிருப்பதாகக் கருதப்படும் இமாலயப் பனிமலைகளின் வீழ்ச்சியையும், அசட்டுப் பெருமையுடனும், போலி பெருமை வழியும் பக்தகோடிகளின் மழுங்கிப் போன ஆச்சரிய உணர்வையும் எழுப்புவதற்காக எழுப்பப்பட்ட 40 அடி உயர சிவபெருமான் சிலை மூழ்கியது எந்த சக்தியின் காரியமோ?

புனிதத் தலங்களிலிருந்து கொண்டுவரப்படும் புனித ஜலம் எல்லோர் தலையிலும் தெளிக்கப்படும். இன்று உத்தராகண்டிலிருந்து எந்தப் புனித நீரை எடுத்து வருவர்? சிவபெருமான் தலையில் இருக்கும் கங்கோத்ரியே சிவபெருமானை மூழ்கடிக்கப்பட்ட லீலா வினோதம்தான் என்ன?


மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே. (22:73)

கடவுளுக்கே இந்த கதியா?



மூழ்கிய பிரம்மாண்ட சிவபெருமான் சிலை ஒரு எச்சசொச்சமே, பொருள் எச்சசொச்சமே, கடவுள் என்ற ஸ்பிரிட்டோ அல்லது ஏதோவொன்றின் வடிவம் கிடையாது. கல்லாலும் மண்ணாலும் கட்டப்பட்ட மானுட செயல்பாட்டின் வியர்த்தத்தின் குறியீடு! ஒன்றுமேயில்லாமல் போகும் என்பதன் Nothingness- இன் குறி.


(நபியே! அவர்களிடம்;) "வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன் யார்?" என்று நீர் கேளும். அவன் அல்லாஹ்தான் என்று நீரே கூறும்; "(அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும் தீமையும் செய்து கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர்"; மேலும், கூறும்; "குருடனும் பார்வை உடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், ஒளியும் சமமாகுமா? அல்லது அவர்கள் இணையாக்கிக் கொண்டிருக்கும் (தெய்வங்கள்) அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா? (அப்படியிருந்தால் இது யார்) படைப்பு என்று அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்!" (அவ்வாறில்லையே எனவே நபியே! நீர் உறுதியாகக்) கூறும்; "அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்; அவன் ஒருவனே (அனைத்தையும்) அடக்கி ஆள்பவன்" (13:16)


Thanks & Regard

A. Md. Umar Farook
Tuticorin

No comments:

Post a Comment