உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, May 9, 2013

அதிரை காட்டுப்பள்ளி கந்தூரிக் கமிட்டியினருக்கு ADT கடிதம் !

அஸ்ஸலாமு அலைக்கும்.

கடந்த 25.4.2013 தேதியிட்டு, காட்டுப்பள்ளி கந்தூரிக் கமிட்டியினருக்கு அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக ஒரு மடல் எழுதி, அதைக் கமிட்டியினர் அனைவரையும் நேரில் சந்தித்துக் கொடுப்பதற்குக், கமிட்டியின் பொருளாளர் (துரியான்) ஷேக் தாவூது அவர்களைத் தொலைத் தொடர்பு கொண்டு நேரம் கேட்டிருந்தோம்.

பல நாட்களில் பல நேரங்கள் தந்தும், தந்த நேரத்தை உறுதி செய்து கொள்வதற்குப் பலமுறை முயன்றபோது அடுத்த நாள்/நேரம் கொடுக்கப்பட்டு, தொலைபேசியில் அழைத்து உறுதி செய்வதாக வாக்களிக்கப்பட்டும் ஒருமுறையேனும் நம்மை அழைக்கவில்லை.

இறுதியாகக் கடந்த 1.5.2013 புதன்கிழமை மாலை கீழத்தெரு சங்கத்தில் கந்தூரிக் கமிட்டிப் பொருளாளரை நேரில் சந்தித்துக் கேட்டபோது 3.5.2013 வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப் பின்னர் நமக்கு நேரம் ஒதுக்கியதாகத் தெரிவித்தார்.

அதுவும் நழுவிப் போனது. தொடர் மறுதலிப்புகள் நம்மைச் சந்திக்க, கந்தூரிக் கமிட்டியினருக்கு விருப்பம் இல்லை என்பதை உணர்த்தியது.

எனவே, அடுத்தநாள் 4.5.2013 அன்று காலை கந்தூரிக் கமிட்டி உறுப்பினர் (மான்) நெய்னா முஹம்மது அவர்களிடம் அதிரை தாருத் தவ்ஹீதின் மடலைக் கொடுத்து, கந்தூரிக் கமிட்டியினரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. 

---------------
அடுத்த கட்ட நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியருக்கு அதே 4.5.2013 நாளிட்டு கந்தூரியை நிறுத்துவதற்கு ஆவன செய்யுமாறு வேண்டுகோள் மடலொன்று அதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் எழுதப்பட்டது. அது தனிப்பதிவாக வரும், இன்ஷா அல்லாஹ்.

ஜமீல் M.ஸாலிஹ்
செயலாளர்
அதிரை தாருத் தவ்ஹீத்

Thanks to adirainirubar

No comments:

Post a Comment