உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, November 7, 2012

அதிரையில் மறைந்து வரும் நீர் ஆதாரங்கள் - பாகம் - 1

கடந்த வருட விடுமுறையில் யோசித்து, இந்த வருட விடுமுறையில் மூன்று நாட்களை செலவழித்து, அலைந்து, திரிந்து, சேற்றில் வழுக்கி விழுந்து, சில இடங்களில் ஆனந்தக் குளியலிட்டும் உங்களுக்காகவே சுட்ட நம்ம ஊரு ஏரி, குளங்களை புகைப்பட ஆவணமாக தருவதில் மெய்யாலுமே சந்தோஷங்க.

சினிமா நகைச்சுவை காட்சியொன்றில் 'கிணத்த காணல' என்று காவல்துறையில் புகார் அளிப்பார் ஒருவர், அது கற்பனை
ஆனால்
அதிரையில் 'ஏகப்பட்ட குளங்களை காணல' என்பது உண்மையிலும் உண்மைங்க ஆனா புகார் தான் யாரும் பண்ணலீங்க.

நானறிந்து காணாமல் போன குளங்களும் அதன் இன்றைய நிலையும்

பங்களா குளம்    -     மேலத்தெரு (புகாரி கடை அருகில்)
 இத்தி குளம்        -    மேலத்தெரு (rh;r;irf;Fhpa KdpNfhapy; gpd;Gwk;)
நாரக்குளம்        -    மேலத்தெரு (வாவாங்கனி லைன்)
 பள்ளிவாசல் குளம்    -    நெசவுத்தெரு
பள்ளக்குளம்        -    எம்.எஸ்.எம் நகர் பின்புறம்
(Gy; cau kio jz;zPUq;f)
  பறையங்குண்டு    -    மேலத்தெரு (அப்டுடேட் பாதி குளம் சுவாகா)
 எம்.எச்.குட்டை    -    மேலத்தெரு 
(தனியாருக்கு சொந்தமானது – எம்.எச் கொல்லை)

கர்நாடக அரசியலுக்கும், காவிரி தண்ணீருக்கும், காவிரியின் கடைமடையான அதிரையின் ஏரி, குளங்களுக்கும் நேரடி தொடர்பிருக்குங்க. அந்தக்கால அரசியல்வாதி காமராஜ் அவர்களுக்கு 1955 ஆம் ஆண்டு இருந்த நீர்வள அக்கரையில் 1 சதவீதம் கூட இந்தக்கால (மறைந்த)குல்லா, தாத்தா, ஐயா, அம்மாக்களுக்கு கிஞ்சிற்றும் இல்லை என்பதை கீழே வரும் படத்தை பார்த்தாலே தெரிஞ்சுக்குவீங்க.

 நம்ம ஊரு CMP வாய்க்காலுக்கு தண்ணிர் திறந்து விட பயன்பட்ட ஷட்டர்

நமதூரை சுற்றியுள்ள ஏரிகளை ஆழப்படுத்தி நீர்வளத்தை சேமிப்பதன் மூலம் விவசாயமும் தழைத்தோங்கும், நிலத்தடி நீரும் பெருகும், முக்கியமா 'நிலத் திருடர்களின்' ஆக்கிரமிப்பிலிருந்தும் ஏரி, குளங்கள் கொஞ்ச காலமாவது தப்பிக்குமுங்க.

முடிந்தவரை ஏரி குளங்களை அதன் ஒரிஜினல் பெயரிலேயே குறிப்பிட்டுள்ளேன், சிலவற்றை அதன் தெரு மற்றும் இடங்களின் பெயரால் அடையாளப்படுத்தியுள்ளேன். விபரம் அறிந்தவர்கள் எடுத்துச் சொன்னால் திருத்திக்குவேனுங்க.

அதிரையின் குளியல் குளங்கள் எல்லாம் காலவதியாகி கீழே வரும் வெறும் 3 குளங்கள் மட்டுமே குளியலுக்காக பயன்பாட்டில் இருப்பது அதிர்ச்சிகரமான செய்திங்க.

 செடியன்குளம்

வெட்டிகுளம் - கடற்கரை தெரு

புள்ள குளம் (ரெட்டகுளம்) – சுரைக்கா கொல்லை

CMP வாய்க்கால்ல தண்ணீர் வரலைன்னு குளியல் போட்ட குளங்களை காயப்போட்ட நாம மாற்று ஏற்பாடுகளாய் நமதூரை சுற்றியுள்ள ராஜாமடம் காட்டாறு, ராஜாமடம் ஏரி, மழவேனிற்காடு கொழுக்கட்டை ஏரி, மாளியக்காடு செல்லிக்குறிச்சி ஏரி போன்ற ஏரிகளிலிருந்து மாற்றுவழிகள் எளிதாக இருந்தும் தண்ணீர் நிரப்ப முயற்சிக்காமல் அலட்சியம் செய்துள்ளோமுங்க. 

 எல்லா பாதைகளும் ரோமாபுரியை நோக்கி என்ற அடைமொழிக்கேற்ப நம்ம ஊரு ஏரி தண்ணிகள் எல்லாம் கடலை நோக்கி வீணாய் சென்று கலப்பதை குறித்து கவலைப்பட ஆளில்லைங்க.


ஆட்டை போடப்பட்ட குளங்கள் போக மீதமுள்ள அதிரை நீர்நிலைகளின் காட்சியும் சாட்சியும்

செடியன்குளம் - இது அதிரையின் அடையாளங்களில் ஒன்று

காட்டுக்குளம் - சி.எம்.பி லைன் பின்புறம் மிலாரிகாடு போகும் வழி, இதன் மரத்தடியில் சுண்ணாம்பு கலவாய் ஒன்றும் இயங்கி வந்தது.


கரிச்சமணி குளம் - ஏரியாக இருந்து குளமாக சுருங்கி இன்று சாக்கடை குட்டையாக ஷிஃபா மருத்துவமனை முன் தேங்கி நிற்கிறது.


வெள்ளக்குளம் - பட்டுக்கோட்டை ரோட்டில், இமாம் ஷாஃபி பள்ளி அருகில் உள்ளது.



ஆலடிக்குளம் - வண்டிப்பேட்டை முக்கம், பெண்களுக்கென சிறப்பான, மறைவான படித்துறையை கொண்டிருந்த சரித்திர மிச்சம்.

மண்ணப்பங்குளம் - அதிரையின் ஒரே (முன்னாள்) குடிநீர் குளம், பெட்ரோல் பங்க் பின்புறம், வண்டிப்பேட்டை.



புள்ளகுளம் - இது இரண்டு குளங்களின் இணைப்பு, ரெட்டை குளம் எனவும் அழைக்கப்படுகிறது, ஒரு குளத்தில் ஆண்களும் மற்றொரு குளத்தில் பெண்களும் குளித்து வருகின்றனர், சுரைக்கா கொல்லை.


ஆணைவிழுந்தான் குளம் - சேர்மன்வாடி அருகில், அரசு மருத்துவமனை முன்புறம், மூச்சுப்பயிற்சி எடுக்க சிறந்த இடம் (தாங்கமுடியாத நாத்தம்).


ஆஸ்பத்திரிதெரு குளம் - புதுப்பள்ளி பின்புறமுள்ளது, ஒரு காலத்துல இங்கயும் தான் குளிச்சாங்க.

பஸ் ஸ்டாண்ட் குளம் - போலீஸ் ஸ்டேசன் எதிரில், பேரூராட்சி அலுவலகம் அருகில், தலைவர், துணை தலைவர், அனைத்து கவுன்சிலர்களும் தினமும் போற பாதையில ஊர் மாணத்த ஏலம் போடுற இடம்.


மாரியம்மன் கோயில் குளம் - கரையூர் தெரு கோயில் அருகில்.

கினியாங்குளம் - தரகர் தெரு, முறையான கரையோ, துறையோ, வழியோ இல்லாத வித்தியாசமான, சுத்தமான குளம், குளத்தை சுற்றியுள்ள வீடுகளின் கொல்லைபுறங்களே இக்குளத்துக்கு செல்லும் வழி என்பதால் வீடுகள் நடுவே அமைந்துள்ள ஓர் தண்ணீர் தீவு எனவும் சொல்லலாம்.



சேனாங்குளம் - கினியாங்குளத்தோடு ஒட்டி உறவாடும் அசுத்தநீர் தேக்கம், கடற்கரை தெரு தர்கா பின்புறமுள்ளது.



வெட்டிக்குளம் - இன்னும் பயன்பாட்டில் உள்ள கடற்கரை தெரு குளம்.


சமரங்குளம் - புதுத்தெரு, மிஸ்கீன் பள்ளி முன்புறமுள்ளது, கொஞ்சம் கொஞ்சமா மூடிக்கிட்டே வர்றாங்க (வலிக்காம அடிக்கிறாங்களாம்).

செய்னாங்குளம் - கீழத்தெரு, காலேஜ் பின்புறமுள்ளது, செடியனின் வடிகால் குளம்.

புதுக்குளம் - மேலத்தெரு, பேர்ல மட்டும் தாங்க புதுசு, மாடு கழுவ கூட லாயக்கில்லீங்க.

சங்கத்து குளம் - நெசவு தெரு, இதுவும் ஒர் (முன்னாள்) ரெட்டை குளங்க, பள்ளியாகுளம் என்ற பேரும் உள்ளது. இதில் இன்னொரு பகுதி குளத்தில ஆளுக்கு கொஞ்சமா வீடு கட்டிக்கிட்டாங்க. இது குளமாயிருந்த காலத்துல கரையோர பூவரச மரத்துல ஒரு வேடந்தாங்களே வந்து குடியிருக்குமுங்க, மாலை நேரத்துல அடையும் பறவைகளின் ரீங்காரம் இன்னும் காதுலயும், மனசுலயும் அப்படியே நிக்குதுங்க.

செக்கடிகுளம் - நடுத்தெரு, ஊர் மத்தியின் கம்பீரம்.


மரைக்காகுளம் - பெண்களுக்கு மட்டுமே இருந்த பிரத்தியேக குளம். மேலத்தெருவுக்கு இது மொடக்குண்டு, புதுமனைதெருவுக்கு இது மரைக்காகுளம், வருங்காலத்துல எல்லோருக்கும் இது வீட்டுமனை.


பெத்தாங்குளம் - மேலத்தெருவிலிருந்து மகிழங்கோட்டை செல்லும் வழியில், ஆளில்லா ரயில்வே கிராஸிங் கீழே.


அதிரையை பற்றி யாராவது ஆன்லைன் மியூசியம் திறப்பதாக இருந்ததால் தாராளமாக இந்த புகைப்படங்களை பயன்படுத்தி கொள்ளலாமுங்க.
 

தொகுப்பு    :     அதிரைஅமீன்
படங்கள்    :    ஆசிக் அகமது
இவர்களுடன் நாளைய செய்தியாளர் அஸ்அத்

அதிரையில் மறைந்து வரும் நீர் ஆதாரங்கள் - பாகம் - 1
  தொடர்ச்சி பாகம் - 2ல்

Saturday, November 3, 2012

பிலால் நகர் தர்பியா மையம்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமத்தால்

பிலால் நகர் தர்பியா மையம், எதிர்பார்ப்பில் மக்கள்


பொதுவாக பிலால் நகர் மக்கள் குறித்தும், அவர்களின் மார்க்க நிலை குறித்தும், வட்டியால் சுரண்டப்படும் அவர்களின் வாழ்க்கை தரம் குறித்தும் அறியாதோர் யாரும் இருக்க முடியாது.

கல்வி, மார்க்கம், பொருளாதாரம், சுகாதாரம் என அனைத்து துறைகளிலும் மிகவும் பின்தங்கியுள்ள இவர்களின் அறியாமையை பயன்படுத்தி மேலும் பல தவறான வழிகளில் ஈடுபடுத்துவோர் சிலரும் அவர்களில் ஊடுருவியுள்ளனர் என்பது கசப்பான உண்மை.



பிலால் நகர் மக்களின் அறியாமை இருளை அகற்றிட, அவர்களின் குழந்தைகளுக்கு சிறந்த மார்க்கக் கல்வியை புகட்டிட, பெண்களுக்கு இஸ்லாத்தினை அதன் தூய வடிவில் எத்தி வைத்திட, ஒரு மிகப்பெரும் முயற்சியில் அதிரை தாருத் தவ்ஹீத் என்றதோர் அமைப்பு அவர்கள் பகுதியிலேயே தர்பியா மையம் ஒன்றை நிறுவிடும் பணியில் ஈடுபட்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்.



பல்வேறு பொருளாதார சிக்கல்களையும் எதிர்கொண்டு கட்டப்பட்டு வரும் தர்பியா மைய பணிகள் முழுமைபெற உட்தளம், சுற்றுவேலி, தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பு என சில பணிகளே எஞ்சியுள்ளன. மேலும் இதற்கென ஒரு ஆலிமா ஒருவரும் முறையான பயிற்சிகளுடன் தயார் நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.



இந்த தர்பியா மையம் குறித்து இப்பகுதியை சேர்ந்த சிலரிடம் பேசியபோது, இதன் திறப்பை மிகவும் எதிர்பார்ப்பதாகவும், இந்த பகுதிக்கு இப்படிப்பட்ட தர்பியா மையம் மிகவும் அவசியம் எனவும், தர்பியா மையம் திறக்கப்படும் போது தங்களுடைய ஆதரவை கண்டிப்பாக வழங்குவோம் எனவும், விரைவில் திறக்கப்பட ஏற்பாடு செய்யுங்கள் என ஆர்வத்துடன் தெரிவித்தனர்.

அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திடும் வகையில் நம்மாலான உதவிகளை செய்து தர்பியா மையம் விரைவில் திறக்கப்பட உதவலாமே.



எந்த இயக்கத்தையும் சாராத, குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில், அதிரை தாருத் தவ்ஹீத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படவுள்ள இத்தர்பியா மையம் விரைந்து துவங்கிட உங்கள் பங்கையும், ஆதரவையும் வழங்கி, சதக்கத்துல் ஜாரியா எனும் நிரந்தர நன்மையை பெற்றிட அழைக்கின்றோம்;.

தொடர்புக்கு:
அதிரை அஹமது 0091 9894989230
துபையில்:    அப்துல் காதர்    00971 55 2829759


Friday, November 2, 2012

ச்சும்மா.....செடியன் குளம் ஒர் விஷூவல் ரவுண்ட்-அப்


இன்னும் 3 மாசத்துக்கு மட்டும் இதுதான் செடியன்குளம்

டேய்... அங்க பாரேன்;;... மீனு ஓடுதுடா...

எத்தன வாட்டர் தீம் பார்க் வந்தாலும் நம்ம ஊரு செடியன்குளம் போல வருமா!

தோப்பு தனி மரம் ஆன சோகக்கதையை சொல்லும் ஒத்த மருத மரம்

செடியன் குளத்த நான் பார்த்துட்டேன்... எம் புள்ள பார்ப்பான? கவலையில் இன்றைய ஒர் இளைய தலைமுறை

குற்றாலமாம் குற்றாலம்... செடியன்ல ஒரு குளியல் போட்டுட்டு உங்க தீர்ப்ப சொல்லுங்க நாட்டாம...

Thursday, November 1, 2012

அலட்சியம், ஆக்கிரமிப்பு, மழை, வெள்ளம் = பிலால் நகர்

விடிந்தும் இருட்டு என்பது நமதூர் சொல் வழக்கு. ஆம், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வருடந்தோறும் கண்ணீரிலும் தண்ணீரிலும் தத்தளிக்கும் பிலால் நகருக்கு இன்னும் நிரந்தர விடிவே வரவில்லை.

உச்சி முதல் உள்ளுர் வரை ஆளுங்கட்சி ஆட்கள் அதிகார பீடத்தில் இருந்து கொண்டு 'இந்த பூனைக்கு மணிகட்டுவது யார்' என மக்களின் கண்ணீர்மேல் தண்ணீர் விட்டு விளையாடிக் கொண்டுள்ளனர்.

செடியனிலிருந்து வழிந்தோடும் உபரி நீரை அதன் பாரம்பரிய வழித்தடத்தின் மீது அமைந்துள்ள ஒரு சில ஆக்கிரமிப்புகளை அகற்றி செய்னாங்குளத்தில் கலந்தோட செய்தாலே பாதி நீர் வடிந்துவிடும், மீத நீரும் ஏரியின் வடிகால் வாய்க்காலை சுத்தம் செய்தாலே தெருவுக்குள் தேங்காமல் சென்றுவிடும்.

சில குடும்பத்தின் சுயநலத்திற்காக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வெள்ளத்தில் மிதக்க வேண்டுமா?

மயிலே, மயிலே என்றால் இறகு போடாது அதை பிடுங்கித்தான் எடுக்கனும் என மக்கள் கொந்தளிக்குமுன் சம்பந்தபட்டவர்கள் தானே வழிவிட வேண்டும் இல்லையேல் அரசே முன்னிற்று உடன் முடித்துத் தர வேண்டும்.

செடியன் குளத்திலிருந்து வழியும் உபரி மழை, வெள்ள நீர்

செடியன் குளத்தின் வடிகால் வாய்க்கால்


பாதி வழியில் செடியன் குள வடிகால் மேல் ஆக்கிரமிப்புகளால் U turn அடித்து பிலால் நகருக்குள் வரும் தண்ணீர்

திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாய் பிலால் நகர்





ஏரி நீர் நகருக்குள் புகுவதால் ஏற்படும் பாதிப்புக்கள்




தொகுப்பு:     அதிரைஅமீன்
படங்கள்:    ஆசிக் அகமது