உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, August 11, 2012

பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்


ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.(புகாரி-முஸ்லீம்)
மனித இனத்தின் மீது அதிக கருணை கொண்டவன் இறைவன்,ஒரு மகன் செய்யும் குற்றங்களை மன்னித்து விடும் அவனைப் பெற்றெடுத்த தந்தையை விட, தாயை விட அவனைப் படைத்த இறைவன் மன்னிப்பதில் பலமடங்கு கருணைக் கொண்டவன் என்பதற்கு முதல் மனிதராகிய ஆதம்(அலை)அவர்களின் குற்றத்தை மன்னித்த கருணையாளன் அல்லாஹ்வின் கருணைக்கு நிகரில்லை.
மனித இனத்தை படைக்கப்போகிறேன் என்று இறைவன் வானவர்களிடம் கூறியதும், உன்னைப் போற்றி துதிக்க நாங்கள் இருக்கும் போது இரத்ததை ஓட்டி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய மனித இனத்தையா படைக்கப் போகிறாய் ? என்ற வார்த்தைகளை வேதனையுடன் வெளிப்படுத்தினார்கள் வானவர்கள். திருக்குர்ஆன் 2:30
நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று அவர்களிடம் இறைவன் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களை படைத்து அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். அதில் சிலவற்றின் பெயர்களை மட்டும் வானவர்களை அழைத்து இறைவன் கேட்டான். வானவர்களால் அதன் பெயர்களை கூற முடியவில்லை.

Thursday, July 5, 2012

மது விலக்கா….? மது விளக்கா?

 Bars 5 Star Hotels Tamil Nadu Keep Open Round The Clock

அரசுகளுக்கோ அது அட்சய பாத்திரம். பயன்படுத்துவோருக்கோ அது பிச்சா பாத்திரம். தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டு வருமானம் 15 ஆயிரம் கோடி. கடைகள் 6696. மேற்பார்வையாளர்கள் எண்ணிக்கை 8,200. விற்பனையாளர்கள் 16 ஆயிரம். உதவியாளர்கள் 6 ஆயிரம். இதை நம்பி வாழும் குடும்பங்கள் 1 லட்சம். நம்பிக் கெட்ட குடும்பங்களோ பல கோடி.
என்ன அந்தக் காலத்து குடும்பக் கட்டுப்பாடு ரேடியோ விளம்பரம் போல் இருக்கிறதா?

இதை நம்பி சிலர் அல்ல அரசே …. இல்லை இல்லை அரசின் இலவச திட்டங்களின் உயிரே உள்ளது. ரொம்ப பேரின் உயிரையும் வாங்குகிறது. அது மது. அதுவும் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் வெளிநாட்டு மது. அதாவது தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் சீமைச் சாராயம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கப்பல்களில் வந்த யவனர்களின் மதுக் குப்பிக்கு மயங்கி கிடந்த மன்னர்களின் கதையை சோழமண்டல கடற்கரை வரலாறு சொல்கிறது. பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர் என மதுவைக் காட்டி மயக்காத படையயடுப்பாளர்கள் எவரும் இல்லை.

பண்டைய ஆரிய இலக்கியங்களே சோமபானம் – சுராபானம் என சுவையோடு மதுவை தரம் பிரித்தன. ஆனால் அகநானூறு தொடங்கி திருக்குறள் வரை போதை தரும் கள்ளை தொடாதே என்று சொன்ன தமிழ் இலக்கியங்கள் அதிகம்.

ஆங்கிலேயன் இந்தியாவை அரசாண்ட காலங்களில் மேல்தட்டு மக்களின் உற்சாக பானமாக இருந்த சீமைச் சாராயத்தை 1937ல் அன்றைய சென்னை மாகாணத்தின் பிரிமியர் அதாவது முதலமைச்சர் ராஜாஜி காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கேற்ப தடை செய்தார். அதாவது மதுவிலக்கை கொண்டுவந்தார். அதற்கு காரணமும் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் மதுக்கடை மறியலை காங்கிரஸ் நடத்தியது. சென்னை மாகாணத்தில் கள்ளுக்கடை மறியல். தந்தை பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும், தங்கை கண்ணம்மாவும் கள்ளுக்கடை மறியலில் முன் நின்றனர். தந்தை பெரியாரோ தனது தோப்பில் இருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்களைகள் இறக்க பயன்படுத்துகிறார்கள் எனச் சொல்லி வெட்டிச் சாய்த்தார். இதன் எதிரொலியாகவே இரட்டை ஆட்சி முறையில் ஆட்சிக்கு வந்த ராஜாஜி மது விலக்கை கொண்டுவந்தார். அதற்கும் முன்னர் இந்திய வரலாற்றில் தனது ஆட்சி பகுதி முழுவதும் மதுவை தடைசெய்த ஒரே மன்னன் மாவீரன் திப்புசுல்தான் மட்டுமே.

Monday, July 2, 2012

ரமழானை வரவேற்கும் ஷஃபான்

Post image for ரமழானை வரவேற்கும் ஷஃபான்
நபி ஸல் அவர்களால் கண்ணியப்படுத்தப்பட்ட மாதாம் ஷஃபான் மாதமாகும். இந்த மாதத்தில் உபரியான நோன்புகளை நோற்றார்கள். அதன் சிறப்பினையும் எடுத்துரைத்தார்கள்.  ஆயிரம் மாதங்களைவிட சிறப்புமிக்க “லைலத்துல்கத்ர்” இரவைக்கொண்ட தொடரும் ரமழான் மாதத்தை வரவேற்கும் வழிமுறைகளை வகுத்தளித்தார்கள்.  ஷஃபான் மாதத்தின் சிறப்புகளை கூறினார்களேயன்றி அம்மாதத்தின் ஒரு குறிப்பிட்ட நாளுக்கோ இரவுக்கோ மகிமையிருப்பதாக கூறவில்லை. அதற்கான உண்மையான ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் இல்லை. ஷஃபே பராஅத் அரபி சொல்லல்ல இது உருது சொல்லாகும்.
அடுத்து ஷஃபான் பிறை 15ன் இரவைப்பற்றி “நிஸ்ஃப் ஷஃபான்” என இப்னு மாஜ்ஜாவில் வரும் நான்கு ஹதீஸ்களும் திர்மிதியில் இடம்பெற்றுள்ள ஹதீஸும் இவ்விரு நூல்களிலிருந்து அறிவிப்பாளர் வரிசையின்றி மிஷ்காத் ஹதீஸும் ஆதாரப்பூர்வமானவையல்ல. எனவே உண்மையான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் வெளிச்சத்தில் காண்போம்.

Wednesday, June 13, 2012

ஹைதர் அலீ ஆலிம்சாவைத் தூக்கு!

“மனிதர்களே!உங்கள் இறைவனை அஞ்சி வாழுங்கள்...”4:1

அஸ்ஸலாமு அலைக்கும்.

அதிராம்பட்டினத்தின் புதுமனைத் தெருவில் தற்போது சித்தீக் பள்ளி என்ற பெயரில் வழங்கப்படும் சின்னப்பள்ளிக்குச் சொந்தமான 1 ஏக்கர் 59 செண்ட் (சர்வே 255-2) புகல் இனாம் (வக்ஃபு - TD731-இணைப்பு-1)  நிலத்தின் பகுதிகள் சட்ட விரோதமாக விற்கப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்பதும் அது தொடர்பான அரசு ஆவணங்களின் நகல்கள் ஏற்கனவே வலைத்தளங்களில் வலம் வந்ததும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

அதிரை போஸ்ட் வலைத்தளத்துக்கான நேர்காணலில், மேற்காணும் வக்ஃபு சொத்து குறித்து சகோ.ஜான் முஹம்மது எழுப்பியுள்ள கேள்விகளுக்கு (http://www.youtube.com/watch?feature=player_embedded&v=2BwigpNfPIMமற்றும்  http://www.youtube.com/watch?feature=player_embedded&v=8jRwyGFXUaw#!)இதுவரை யாரும் பதில் தரவில்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

Tuesday, June 12, 2012

Saturday, June 9, 2012

கல்வி விழிப்புணர்வு மாநாடு 2012

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அதிரை இஸ்லாமிக் மிஷன் மற்றும் அதிரை எஜுகேஷனல் மிஷன் அமைப்புகள் இணைந்து நடத்திய "நல்லொழுக்கப் பயிற்சி முகாம் நிறைவு விழாவும், கல்வி விழிப்புணர்வு இரண்டாவது மாநாடும் மிகச் சிறப்பாக அதிரை CMP லேன் ALM பள்ளி வளாகத்தில் அதிரை அறிஞர் "தமிழ் மாமணி", புலவர் அஹ்மது பஷீர் அரங்கத்தில் 19-05-2012 அன்று மாலை நடைபெற்றது.

கல்வி வி்ழிப்புணர்வு மாநாட்டின் காணொளிகள் இதோ..

மாணவிகளின் அறிவுத்திறன் வெளிபடுத்தும் நிகழ்ச்சி:



அப்துல் பாஸித் புகாரி அவர்களின் சொற்பொழிவு:



CMN சலீம் அவர்களின் சொற்பொழிவு:


நன்றி- அதிரைநிருபர் குழு

Friday, June 8, 2012

முகத்திரை முன்மாதிரி!


முகத்திரை முன்மாதிரி!

(அண்மையில் எனக்கு வந்த மின்னஞ்சல் தகவலின்படி)

அது பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற சூப்பர் மார்க்கெட்.  தனக்கு வேண்டிய பொருள்களைத் தள்ளு வண்டியில் நிறைத்துக்கொண்டு, காசாளரிடம் கணக்குப் பார்த்துப் பணத்தைச் செலுத்துவதற்காக நின்ற வாடிக்கையாளர்களுள் முழுமையாக ‘ஹிஜாப்’ அணிந்த முஸ்லிம் பெண்மணியொருவர்!

பிரான்சில் ‘ஹிஜாபு’க்கு இருக்கும் எதிர்ப்பு பற்றித் தெரியுமல்லவா?

சில நிமிடங்களில், இந்த முஸ்லிம் பெண்ணின் முறை வந்தது.  தான் வாங்கிய சாமான்களை ஒவ்வொன்றாகக் காசாளர் (கேஷியர்) முன்னால் எடுத்துவைக்கத் தொடங்கினார் இந்தப் பெண்மணி.

அந்தக் கவுண்டரின் காசாளரும் முஸ்லிம் பெண்தான்!  ஓர் அரபு நாட்டிலிருந்து பிரான்சில் குடியுரிமை பெற்று வாழுபவர்!  தன் முன்னாள் நிற்கும் வாடிக்கையாளர் முழுமையாக ‘ஹிஜாப்’ அணிந்து (‘நிகாப்’ எனும் முகத்திரையுடன்) இருப்பதைப் பொறுக்க முடியாத காசாளப் பெண், அவரை முறைத்துப் பார்த்தாள்!

“இந்த நாட்டில் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளுகின்றோம்!  எல்லாம், உங்களைப் போன்றவர்களால்தான்!  ‘ஹிஜாப்’, ‘நிகாப்’ எனும் தீவிரவாத அடையாளங்கள்!  வெளிநாட்டிலிருந்து வந்து இங்கு வேலை செய்யும் நாம், சம்பாதிக்கும் நோக்கத்தில்தான் வந்துள்ளோம்;  மாறாக, நமது மார்க்கத்தை அடையாளம் போட்டுக் காட்டவல்ல!  நமது வரலாற்றை இங்கு வெளிச்சம் போட்டுக் காட்ட அல்ல!  நீ உன் மார்க்கத்தை நடைமுறைப் படுத்த நாடினால், உனது அரபு நாட்டுக்குப் போகவேண்டியதுதானே!?  அங்கே போய், நீ விரும்பியபடி நடந்துகொள்!”  பொரிந்து தள்ளினார், பொறுமையிழந்த அந்தக் காசாளப் பெண்.

இத்தகைய ஏச்சு ஏவுகனையைக் கேட்ட அந்த முஸ்லிம் பெண்மணி, தான் எடுத்து வைத்துக்கொண்டிருந்த சாமான்களை நிறுத்தினார்.  காசாளரைக் கண்களால் சந்தித்தார்!  ஒன்றும் மறுமொழி பேசவில்லை!  அமைதியாகத் தனது ‘நிகாபை’த் தூக்கிக் காட்டினார்!

அரபு நாட்டுக் காசாளப் பெண் அதிர்ச்சியில் உறைந்து போனாள்!

தனக்கு முன்னால் நின்ற பெண்ணோ, பிரெஞ்சுக்காரி!  இதை, அப்பெண்ணின் செம்பட்டை முடியும் நீலக் கண்களும் வெளிச்சம் போட்டுக் காட்டின!

அடுத்து அமைதியாகச் சொன்னாள் அந்த முஸ்லிம் பெண்மணி:  “நான் பிரெஞ்சுக்காரி.  உன்னைப் போன்ற அரபு நாட்டவள் இல்லை!  இது எனது நாடு!  இஸ்லாம் எனது மார்க்கம்!  இஸ்லாத்தில் பிறந்த நீங்களெல்லாம் தீனை விற்றுவிட்டீர்கள், உலகைத் தேடுவதற்காக!  நாங்கள் அந்த உண்மை மார்க்கத்தைத் தேடி, விலை கொடுத்து வாங்கிக்கொண்டோம்!”

அசடு வழியத் தன்னைப் பார்த்துக்கொண்டிருந்த காசாளப் பெண்ணைப் பார்த்து, அமைதியாகக் கூறினார் அந்தப் பேறு பெற்ற பெண்மணி:

“சரி, போகட்டும். இப்போது என் கணக்கைப் பார்!”


-       அதிரை அஹ்மத்