உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, March 12, 2015

ECR ரோட்டில் கிழிந்து தொங்கும் மன்மத குஞ்சின் கோவனம்


அல்லாஹ்வின் பெயரால்

குறிப்பு: சிவப்பு எழுத்தில் வரும் முதலாம் மதுரை நித்தியானந்தாவின் உளறல்களுக்கு கருப்பு வண்ணத்தில் வருபவை வரிக்குவரி பதிலடிகள்

08/03/2015 அன்று வெளியிட்ட நமது பதிவில் நமது பிரதான குற்றச்சாட்டுகளில் ஒன்றான, ஒரு சில பெண்கள் தொழுவதற்காக, காத்திருந்த பலநூறு ஆண்களை முட்டாளாக்கியது சரியா?” என்ற நமது கேள்விக்கு,  தான் செய்த தவறை அவர்கள் மறைக்க எடுத்த முயற்சி பயனற்று வேறு வழியின்றி தவறை ஒப்புக்கொண்டு விட்டு, நான் குப்புரவே விழுந்தாலும் இரத்தமே வந்தாலும் எனது மீசையை பார் என்பது போல் நமது துணை கேள்விகளையும் நாம் கேட்டதாக அவர்களாகவே சில கேள்விகளை உருவாக்கி அதையும் விமர்சிப்பதாக, தன்னை முகமூடியால் மறைக்க செய்த முயற்சியில் அவர்கள் கோவனம் போனதை கூட அறியவில்லை. கேவலம்.
  
அதை நாம் வரிசையாக பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.

தலைவரை வணங்குவது பற்றி நாம் குறிப்பிட்ட ஹதீஸை இது ஹதீஸே அல்ல என கிண்டல் செய்ய முயற்சித்தவர்கள். அவர்கள் ஹதீஸே (லயீஃபான ஹதீஸ்கூட ) அல்ல என ஒதுக்கித்தள்ளிய ஹதீஸை தற்போது ஆதாரமாக பதிந்துள்ளனர். அவற்றையும் இன்ஷா அல்லாஹ் பார்போம்.

நிர்வாகத்திற்கும் பதவிக்கும் ஆசைப்படும் போலி தவ்ஹீது

// நிர்வாகத்திற்கும் பதவிக்கும் ஆசைப்படும் போலி தவ்ஹீத்வாதிகள் நீங்கள் என்பதையும் பதவிக்காக தவ்ஹீதையும் விற்கும் தவ்ஹீத் வேஷம் போடும் கூட்டம் நீங்கள் என்பதையும் அவர்கள் விளங்காமல் இல்லை. //

ஆம் உண்மைதான். ஷிர்க்வாதிகளின் தாஜுல் இஸ்லாம் சங்கத்தில், துணை  செயலாளர் பதவியில் பீஜேயானிகளின் மாவட்ட பொறுப்பாளர் ராஜிக் என்பவர் உள்ளார்.

செட்டிங் செல்லப்பாவின் பத்வாவை ஏறுக்குமாறாக புரிந்து கொண்ட தக்லீதுகள்

//இணைவைப்பவர்களைப் புறக்கணிக்குமாறும் பல வசனங்கள் வருகிறது. அந்த அடிப்படையில் இணைவைக்கும் இமாம்கள் பின்னால் தொழுவதைப் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லி வருகிறோம்.//

இப்படி ஒரு தகவலை பதிந்து, இதன் காரணத்தால் இந்த இமாம்கள் பின் தொழுவதை தவிர்த்து வருகிறோம் என கூறுகின்றனர். இவர்களின் மாநில தலைவர் செட்டிங் செல்லப்பா இமாம்கள் எல்லாம் ஆய்வாளர்கள் அல்ல குரல் வளத்திற்காகவே தொழுகை வைக்கின்றனர். ஆய்வாளராகவும் இருந்து இணை வைத்தால்தான் அவர் பின் தொழக்கூடாது. இதுபோன்ற ஆய்வாளராக இல்லாத இமாம்கள் பின்னால் தொழலாம் என சொல்லுகிறார்.

இதில் எது விதி? எது விதிவிலக்கு?

//மவ்லித் ஓதும் இமாம் இணைவைப்பவர் என்று சொல்ல இவர்களுக்கு திராணி இருக்கிறதா?//

இப்படி கேட்கும் இவர்களின் மாநில தலைவர்செட்டிங் செல்லப்பா, மவ்லிதில்தான் சிர்க் உள்ளது அதை ஓதுபவர் இடத்தில் இல்லை. எனவே அவரை இமாமாக ஏற்று பின்னால் தொழலாம் என்கிறார்.
இதில் எது விதி? எது விதிவிலக்கு? இதில் ஏற்புடையது எது? நிராகரிக்கப்படவேண்டியது எது? ஏன் இந்த இரட்டை நிலை? நல்ல தெளிவான கொள்கை!.

புள்ளிராஜாவின் வாரிசுகள் என நிரூபிக்கும் பொய்யர்கள்

//இணை வைத்து மக்களை வழிகெடுக்கும் இமாம்களைக் கண்டிக்கத்  துப்பில்லாமல் நம்மை கண்டிக்கின்றனர். இணைவைக்கும் இமாம்களின் இணைவைப்பை விமர்சிக்க இவர்கள் துணிந்தார்களா?

தர்காவை வழிபட்டுக் கொண்டிருக்கும் இமாமின் பின்னால் மவ்லூத் ஓதி வரும் இமாமின் பின்னால் ஜனாஸா தொழுமாறு நம்மை அழைக்கிறார்கள்.//

ஏன் இந்த உலகமகா பொய்? நாம் சொன்னது என்ன?

ஜும்மா பள்ளியில் நீங்கள் தொழவைக்க அனுமதி உள்ளதே, நீங்களே அப்பள்ளியில் தொழவைக்கலாமே என்று தானே சொன்னோம். தர்காவை வழிபடும் இமாம் பின்னால் ஜனாஸா தொழுகையை நிறை வேற்றுங்கள் என்று எப்போது சொன்னோம்?  

இன்னும் தெளிவாகவே சொன்னோம். பீஜேயானி மதத்தில் அறியாமையினால் நீடிக்கும் அப்துல் ரஜாக் அவர்களும் மற்றும் பக்கீர் மொய்தீன் அவர்களும் தொழுகை வைத்ததையும் குறிப்பிட்டு இருந்தோம். இவர்கள் கப்ர் வணங்கியாகவும் உள்ளனரா? நாம் இவர்களை தொழவவைக்க சொல்லவில்லை இவர்களை போல் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் உறவினர்கள் வேறு யாராவது வைக்கலாமே என்று தானே குறிப்பிட்டோம். ஏன் இந்த அபாண்ட பொய்.

இணைவைக்கும் இமாம் பெண் ஜனாஸாவை குளிப்பாட்டுவாராம்

நமது கோரிக்கை ஏற்கப்பட்டால் இணைவைக்கும் இமாம் குளிப்பாட்டுவாராம். இது அடுத்த அபாண்டம். தர்காவாதிகளின் ஜனாஸாவிலும் கூட இறந்தவர் பெண் என்றால் மேற்படி இமாமை கொண்டு குளிப்பாட்ட மாட்டார்கள். தற்போது இறந்தது பெண் என்பது அனைவருக்கும் தெரியும். இப்பெண்ணை அந்த இமாமை கொண்டு குளிப்பாட்ட வேண்டும் என்று எவனாவது கோரிக்கை வைப்பானா? இவ்வாறு எழுத பொய் சொல்ல உங்களுக்கு அறுவறுப்பாக தோன்றவில்லையா? ஆத்திரத்தில் புத்தி பேதலித்து உளராதீர்கள்.

கபரஸ்தானில் இடம் வேண்டும் என்பதற்காக ஷிர்க்வாதிகளுடன் ஒற்றுமையாக உள்ளதாக பீஜே வணங்கிகள் ஒப்புதல்

//தவ்ஹீத் ஜமாத்தை எதிர்க்கும் போது சுன்னத் வல் ஜமாஅத்தினரை தவ்ஹீத்வாதிகள் என்று கூறும் அளவுக்கு இவர்கள் தரம் தாழ்ந்து போய் விட்டனர். //
இப்படி நம்மை விமர்ச்சிப்பவர்கள்,

//மக்காவில் வாழ்ந்த காஃபிர்களும் மதீனாவில் வாழ்ந்த யூதர்களும் கிறித்தவர்களும் நெருப்பு வணங்கிகளும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த சத்தியத்திற்கு எதிராக போலி ஒற்றுமையைக் காட்டியது போல் இவர்கள் அதிரை ஜும்மா பள்ளி நிர்வாகத்துடன் ஒற்றுமையாக இருப்பது போல் காட்டிக் கொள்கின்றனர். //
என்றும் பதிந்துள்ளார்கள். யார் தரம் தாழ்ந்தவர்கள்?

அதாவது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சத்தியவாதி. யூதர்கள் கிருத்தவர்கள், நெருப்பு வணங்கிகள் அசத்தியவான்கள். இருந்தும் சுயநலத்திற்காக போலி ஒற்றுமை காட்டியதுபோல் நாமும் ஜும்மா பள்ளி நிர்வாகமும் உள்ளோமாம். இங்கு ஜும்மா பள்ளி நிர்வாகத்தினரை சத்தியவாதி என பீஜே வணங்கிகள் பதிகின்றனர். இவர்கள் நம்மை விமர்ச்சிக்கின்றனர் சுன்னத்துவல் ஜமாத்தினரை தவ்ஹீதுவாதி என நாங்கள் சொன்னோமாம். மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டுமாம்.

நாங்கள் அவ்வாறு சொல்லவில்லை. நீங்கள் தான் அவ்வாறு சொல்லிகிறீர்கள். ஒரு பேச்சுக்கு, நாங்கள் சொன்னோம் என வைத்துக்கொண்டால், விமர்சிப்பார்களாம். இதே காரணத்தை அவர்கள் சொல்லும்போது அவர்களை யாரும் விமர்சிக்ககூடாது. இது அவர்கள் இயற்றிய விதி.

பெண்கள் ஜனாஸா தொழுகை தொழ அனுமதிக்கும் ஒரே பள்ளி பீஜேயானி பள்ளி????????

//ஐவேளைத் தொழுகைக்கும் ஜனாஸாதொழுகைக்கும் பள்ளிவாசலுக்கு வருவதற்கு தவ்ஹீத் ஜமாஅத்தினரால் நடத்தப்படும் தவ்ஹீத் பள்ளியைத் தவிர வேறு எங்கும்பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை //
இத்தகவலை அவர்கள் பதியலாம்.

இதே தகவலை நாம்,

பீஜேயானிகளுக்கென்று அதிரையில் தனி வணக்கஸ்தலம் உள்ளது அங்கே கொண்டு போய் ஜனாஸா தொழுகை நடத்தவேண்டியது தானே என நாம் கேட்டபோது போலி தவ்ஹீதுவாதியாம். உங்களது சர்டிபிகேட் எங்களுக்கு அவசியமற்றது.

ஒரு விஷயத்திற்காக எங்களை விமர்சிக்க முயற்சித்தோர் அதே விஷயத்தை அவர்கள் உளறினால் விமர்சனத்திற்கு அப்பாலாம். இதுவெல்லாம் எதிலிருந்து பெறப்பட்ட விதி?

ஷிர்க்வாதிகளுடன் நாம் ஒற்றுமையாக இருப்பதாக விமர்சித்த பீஜே வணங்கிகளின் முன்னுக்குப் பின் முரணான உளறல்கள்

// ஜூம்மா பள்ளியினருக்கும்  இவர்களுக்கும் சில மசாயில்களில் மட்டும் தான் கருத்து வேறுபாடாம் மற்றபடி இவர்களும் அவர்களும் ஒன்று என்று ஒற்றுமை பேச வந்து இருக்கும் வெட்கங்கெட்ட போலி தவ்ஹீத் வாதிகளே…… //
இப்படி பதிந்த வெட்கம் கெட்டதுகள், இதற்கு முந்திய பாராவில் பதிந்ததை பாருங்கள்.

//சில மஸாயில்களில் கருத்து வேறுபாடு அவர்களுக்கும் (பள்ளி நிர்வாகத்திற்கும்) நமக்கும் (பீஜேயானிகளுக்கும்) மத்தியில் இருந்தாலும் தவ்ஹீத் திருமணத்தை நடத்தி வைத்தல், ஜனாஸாவை அடக்கம் செய்ய அனுமதித்தல் போன்ற விசயங்களில் தவ்ஹீத் ஜமாஅத்தினருடன் பள்ளி நிர்வாகம் சுமூகமான போக்கையே மேற்கொள்கின்றனர். ஆனால் அதை இவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. //

2400 ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு  திருமணத்தை நடத்தி வைத்தல் போன்றவையெல்லாம் இருவருக்குமிடையில் சுமூகமான போக்காம். அதே நேரத்தில் சில மஸாயில்கள் விஷயத்தில் நமக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் கருத்து வேறுபாடு இருந்தாலும் ஜனாஸா தொழுகை நடத்த அனுமதிப்பது போன்றவற்றில் பள்ளி நிர்வாகம் சுமூகமான போக்கை கடைபிடிக்கின்றனர் என நாம் பதிந்தபோது. வெட்கம் கெட்டவர்களாம். யார் வெட்கம் கெட்டவர்கள்? 19.5 விதியின் கீழ், அவர்கள் விமர்ச்சிக்கலாம்: அவர்கள் விமர்ச்சிக்கப்படக்கூடாது!!!

பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் கொட்டைபாக்கு கிலோ 2400 ரூபாய் எனும் புள்ளிராஜா வாரிசுகள்

ஏன் உங்களது பள்ளியில் தொழவைக்கவில்லை எனகேட்டால்  அவர்களின் வியாபாரத்தை ஆரம்பிக்கின்றனர். பெண்கள் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ள கூடாது என நாம் பதிந்துள்ளோமாம். அவ்வாறு கூறுவோர் அதை ஆதாரத்துடன் குறிப்பிட்டு விட்டு எங்களுக்கு பதில் தரவேண்டும். நீங்களாகவே கற்பனையாக கேள்வியை உருவாக்கிக்கொண்டு நாங்கள் கேட்டதுபோல் பொய் சொல்லிக்கொண்டு உங்கள் விளக்கத்தை பதிவது அயோக்கியத்தனம்.

இஸ்லாத்தில் பொதுவான ஒரு சட்டம் உண்டு என்றால், சிலருக்கு சிறப்பு சலுகைகளும் உண்டு. உதாரணத்திற்கு தொழுகைக்கு முன்பே அறுத்த குர்பானி ஆடு. புஹாரி 955.

அபுதல்ஹா (ரலி) மற்றும் உம்மு சுலைம் (ரலி) அவர்களின் மகன் மரணத்தை குறிப்பிட்டு ஜனஸா தொழுகைக்கு சட்டம் எடுக்கும் நீங்கள், உமைர் அவர்களின் உடல் பாதிப்பு, அபுதல்ஹா (ரலி) பிரயாணம், உமைர் அவர்களின் மரணம், உம்மு சுலைம் (ரலி) அவர்களின் மனநிலை அதை தொடர்ந்த சம்பவம், அதன் பின் உமைர் அவர்களின் மரணம் குறித்து  ரசூல் ஸல் அவர்களுக்கு அபுதல்ஹா (ரலி) தகவலாக கொண்டு சென்றார்களா? புகாராக கொண்டு சென்றார்களா? ரசூல் ஸல் அவர்கள் அபுதல்ஹா (ரலி) அவர்கள் வீட்டிற்கு வந்தது ஏன்? போன்றவற்றையும் கொஞ்சம் விளக்கமாக சொல்லிவிட்டு பிறகு இந்த ஜனாஸா தொழுகையைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தால் மக்கள் விளங்கிக்கொள்ள ஏதுவாக இருக்கும் இது எப்போதும்போல் உள்ள தொழுகையா? அல்லது இத்தொழுகைக்கு சிறப்புண்டா? என்பதை. இத்துடன் நிறுத்தி கொண்டிருந்தால் கூட பரவாயில்லை!

அடுத்து அவர்கள் பதிந்த ஹதீஸ்தான் வேடிக்கை. பெண்கள் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ள சலஃபாக மாறியவர்கள்.

செட்டிங் செல்லப்பா தள்ளுபடி செய்தது குஞ்சுகளுக்கு மட்டும் 'ஹதீஸ்' ஆன விந்தை

ஆயிஷா (ரலி) அவர்களின் ஏவலாக, அப்துல்லாஹ் பின் ஸுபைர் ( ரலி) அவர்கள் அறிவித்ததாக, முஸ்லிம் 1616, 1615, 1617 ஆகிய எண்ணிற்குட்பட்ட ஹதீஸ் என்று ஒன்றை பதிந்துள்ளார்கள்.  முதலில் மேற்படி எண் கொண்ட எந்த ஹதீஸும் முஸ்லிமில் இல்லை. ஒரு வேளை எடிஷன் வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் முஸ்லிம் 1771 ல் ஒரு அறிவிப்பு வருகிறது. அதில்,

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் இறந்தபோது அவரது பிரேதத்தைப் பள்ளிவாசலுக்குக் கொண்டுவருமாறும், தாங்கள் அவருக்கு (இறுதித் தொழுகை) தொழப் போவதாகவும் நபி (ஸல்) அவர்களின் துணைவியர் சொல்லி அனுப்பினார்கள். அவ்வாறே மக்களும் செய்தனர். அப்போது அவரது பிரேதம் நபி (ஸல்) அவர்களின் துணைவியரின் அறைகளுக்கு அருகில் கொண்டுவந்து, அவர்கள் தொழுதுகொள்வதற்காக வைக்கப்பட்டது. பிறகு "மகாஇத்" எனும் இடம் நோக்கி இருந்த "பாபுல் ஜனாயிஸ்" தலைவாயில் வழியாகப் பிரேதம் வெளியே கொண்டுசெல்லப்பட்டது. இது குறித்து மக்கள் குறை கூறுவதாகவும் "பிரேதங்களைப் பள்ளிவாசலுக்குள் கொண்டுசெல்லப்படாது" என்று அவர்கள் பேசிக் கொள்வதாகவும் நபி (ஸல்) அவர்களுடைய துணைவியருக்குச் செய்தி எட்டியது. அப்போது நான் "மக்கள் தங்களுக்குத் தெரியாத விஷயத்தில் ஏன் அவசரப்பட்டுக் குறை கூறுகின்றனர்? பள்ளிவாசலுக்குள் ஒரு பிரேதத்தைக் கொண்டு சென்றதற்காக எங்களை அவர்கள் குறைசொல்கின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுஹைல் பின் அல்பைளா (ரலி) அவர்களுக்குப் பள்ளிவாசலின் நடுப்பகுதியில்தான் தொழுகை நடத்தினார்கள்" என்று கூறினேன்.
 
இதை அப்பாத் பின் அப்தில்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதில் ஆயிஷா (ரலி) தொழுததாக இல்லை நபி (ஸல்) அவர்களின் மற்ற மனைவியர்கள்தான் கலந்துள்ளார்கள் என வருகிறது.

அதே நேரத்தில், 1772 எண்ணாக. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் இறந்தபோது "அவரது பிரேதத்தைப் பள்ளிவாசலுக்குக் கொண்டுசெல்லுங்கள்; அவருக்காக நான் தொழப்போகிறேன்" என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஆட்சேபம் தெரிவிக்கப் பட்டபோது, "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பைளா எனும் பெண்மணியின் இரு புதல்வர்களான சுஹைலுக்கும் அவருடைய சகோதரருக்கும் பள்ளிவாசலில்தான் தொழுகை நடத்தினார்கள்" என்று கூறினார்கள். (முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் கூறுகின்றேன்:) சுஹைல் பின் தஅத் என்பதே அவரது பெயராகும். பைளா என்பது அவருடைய தாயாரின் (புனை) பெயராகும்.

இதில் ஆயிஷா (ரலி) அவர்கள்தான் கலந்துகொள்ள விரும்புவதாக வருகிறது.

மேலும் 1770 எண்ணில் வரும் ஹதீஸ்: அப்பாத் பின் அப்தில்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள், சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களின் பிரேதத்தைப் பள்ளிவாசலுக்குக் கொண்டுசென்று தொழுகை நடத்துமாறு கூறினார்கள். மக்கள் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் எவ்வளவு விரைவாக மக்கள் மறந்துவிடுகின்றனர்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சுஹைல் பின் அல்பைளா (ரலி) அவர்களுக்குப் பள்ளிவாசலில்தான் தொழுகை நடத்தினார்கள்" என்று கூறினார்கள்.

இதில் பெண்கள் தொழுவது பற்றி ஒரு அறிவிப்பும் இல்லை. ஆக ஒரே ஹதீஸ் மூன்று அர்த்தத்தில் வந்தால் அது ஸஹீஹான ஹதீஸாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளலாமா? என்பதை பீஜேயானிகள் தனியாக விளக்க வேண்டும்.

அது ஒருபுறம் இருக்க,

மேற்கூறிய ஹதீஸ், நபிகளாரின் மனைவியரின் (ஸஹாபாக்களின்) விருப்பமாகும். புள்ளிராஜாக்களின் விதிப்படி இது ஹதீஸே அல்ல. ஸஹாபாக்களின் கூற்றை ஏற்றுக்கொள்பவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல தவ்ஹீதுவாதி அல்ல. ஆனால் தற்போது இதை ஆதாரமாக காட்டுகிறார்கள். இவர்கள் எப்போது இவர்கள் கூறும் தவ்ஹீதை விட்டு வெளியேறி சலஃபாக மாறினார்கள்?  இந்த ஹதீஸை ஏற்றுத்தான் பெண்களை ஜனாஸா தொழுகையில் கலந்துகொள்ளச் செய்தீர்கள் என்றால், நீங்கள்தான் சொல்லியுள்ளீர்களே! ஜனாஸாதொழுகைக்கும் பள்ளிவாசலுக்கு வருவதற்கு தவ்ஹீத் ஜமாஅத்தினரால் நடத்தப்படும் தவ்ஹீத் பள்ளியைத் தவிர வேறு எங்கும்பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. என்று, அதை செயல்படுத்த வேண்டியது தானே !

இவர்களின் பார்வையில் ஹதீஸே அல்ல, அதை ஏற்றுக்கொண்டால் முஸ்லிம் அல்ல என்று சொன்னவையை எல்லாம் தன் தேவைக்காக சுய நலத்திற்காக ஹதீஸ் என்பார்களாம். என்ன விதியோ? என்ன கொள்கையோ? நாங்கள் தான் மற்றவர்களை விமர்சிப்போம், எங்களை யாரும் விமர்ச்சிக்ககூடாது.

ஜனாஸாவை வீட்டில் அடக்கம் செய்தல்

இது பற்றி விமர்ச்சிக்கும்போது கூமுட்டை என்ற வார்த்தை பிரயோகம். யார் கூமுட்டை என்பதை பார்ப்போம். ஜனாஸாவை வீட்டில் அடக்கம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்த புஹாரியில் வரும் இரண்டு ஹதீஸ்களை குறிப்பிட்டுள்ளனர்.

ஹதீஸ் எண் 432: உங்கள் இல்லங்களிலும் சில தொழுகைகளைத் தொழுங்கள்! அவற்றை அடக்கஸ்தலங்களாக ஆக்கி விடாதீர்கள்! என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 


ஹதீஸ் எண் 1187: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். "உங்களின் இல்லங்களிலும் சில தொழுகைகளைத் தொழுங்கள். அவற்றைக் கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள்." என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 


இந்த ஹதீஸில் என்ன சொல்லப்பட்டுள்ளது?

வீட்டை தொழுகை இடமாகவும் வைத்துக்கொள்ளுங்கள். தொழுகை நடைபெறாத மண்ணறையாக வைத்திருக்கவேண்டாம் என சொல்லியதன் மூலம் இது எதற்காக சொல்லப்பட்டது. வீட்டில் தொழுகையை வலியுறுத்த வேண்டியா? அல்லது யாரையும் அடக்கம் செய்ய கூடாது என்பதற்காகவா? வீட்டில் தொழுகையை வலியுறுத்தித்தான் என்பது அனைவருக்கும் விளங்கும். இது கூட விளங்காதா கூ…..

சரி, தொழுகையை வலியுறுத்தித்தான். ஜனாஸாவை அடக்கம் செய்வதால் தவறில்லை என எடுத்துக்கொண்டு அடக்கம் செய்து விட்டால் மண்ணறையாகிவிடும் பிறகு எப்படி தொழுவது? என லாஜிக்காக கேள்வி கேட்கலாம்.
இதை விளக்கும் முன், புஹாரி 7328

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். 

உமர்(ரலி) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம், 'என் தோழர்கள் முஹம்மத்(ஸல்) அவர்கள், அபூ பக்ர்(ரலி) ஆகிய இருவருடனும் நான் அடக்கம் செய்யப்பட எனக்கு அனுமதியளியுங்கள்' என்று கேட்டு ஆளனுப்பினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், 'சரி, அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் உமரை நபியவர்களின் அருகே அடக்க அனுமதிக்கிறேன்)' என்றார்கள். ஆனால், (மற்ற தோழர்களில்) எவராவது அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்டு ஆளனுப்பினால், 'முடியாது; அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களுடன் வேறெவரையும் அடக்கம் செய்ய நான் அனுமதிக்க மாட்டேன்' என்று கூறிவிடுவார்கள். 

இந்த ஹதீஸில், நபி ஸல் அவர்களையும் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களையும் அடக்கிய இடம் எது? மைய வாடியா? அல்லது ஆயிஷா ரலி அவர்களின் வீடா? மைய வாடி என்றால் உமர் ரலி ஏன் அனுமதி கேட்க வேண்டும். வீடு என்பதால் தானே! மேலும் 7327 ல் வீடு என்றே தெளிவாக வந்துள்ளது. நபிமார்கள் எவ்விடத்தில் இறந்தார்களோ அவ்விடத்தில்தான் அடக்கம் செய்யவேண்டும் என்பது தனி சட்டம் எனவே அது பற்றி கேள்வி இல்லை. ஆனால் அபூபக்கர் சித்தீக் ரலி ( தனது தகப்பனார், தனது குடும்பம்) இவர்களை அங்கு அடக்கம் செய்த பின் ஆயிஷா ரலி அவர்கள் அங்கு தங்கினார்களா? வேறு இடம் சென்று விட்டார்களா? உமர் ரலி அவர்களையும் அவ்வீட்டில் அடக்கம் செய்தபின் தான் ஆயிஷா ரலி அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறினார்கள். அதுவரை அவ்வீட்டில் தொழுதார்களா தங்கினார்களா இல்லையா? இவற்றை கொஞ்சம் சிந்தித்தால் இது கூமுட்டைத்தனமா? அல்லது ஆய்வு செய்வதா என பீஜேயானிகள் ஒரு முடிவுக்கு வரலாம்.

// வீடுகளை மண்ணறைகளாக ஆக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்திருப்பதால், குடியிருக்கும் வீட்டில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யக் கூடாது.

உங்களால் இது போன்ற நபிவழியை நடைமுறைப்படுத்த துப்பில்லாவிட்டாலும் தைரியம் இல்லாவிட்டாலும்…… //

வீட்டில் அடக்கம் செய்யாமல் மையவாடியில் அடக்கம் செய்வதற்கு துப்பு வேண்டும் தைரியம் வேண்டும் என்கின்றனர்

இவர்களை பார்த்து சிரிப்பதா வேண்டாமா? அட கூறுகெட்ட கூமுட்டைகளா!!!! இதைத்தான் அனைத்து முஸ்லிம்களும் செய்கிறார்கள், கப்ரு வணங்கியும் செய்கிறான், காபிரும் செய்கிறான், கிருத்தவனும் செய்கிறான், நாத்திகனும் செய்கிறான், நீயும் நடைமுறை படுத்துகிறாய் நானும் நடைமுறை படுத்திவருகிறேன். ஏதோ பெரிதாய் சாதித்ததுபோல் பீற்றிக்கொண்டு தைரியம் இருக்கா? துப்பு இருக்கா என்ற கேள்வி வேறு. நான் சோறு சாப்பிடுகிறேன் உன்னால் முடியுமா? என்று கேட்பதுபோல் உள்ளது.

மன்மத லீலைகள்

அவதூறு கூறி வரம்புமீறி சிலரை விமர்சிக்கும் பீஜேயானிகள், அதற்கெல்லாம் ராஜாவான புள்ளி ராஜா பற்றி வாய் திறவாதது ஏன்? மன்மத லீலைகள் உங்கள் வகையறாக்களுக்கு மட்டும் ஹலால் என புது விதி ஏதும் 19 ½ ன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதா?

தலைவரை வணங்குதல்

தலைவரை வணங்குவதை அடையாளம் காட்டிய ஹசன் தரத்திலான ஹதீஸை லயீஃப் என ஏளனம் செய்தோரே! ஹசன் தரத்திலான ஹதீஸ்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறது என்பதை விளக்கினால் யாரை கிண்டல் செய்வது என்பது அனைவருக்கும் விளங்கும்.

ஹசன் தரத்திலான ஹதீஸில் உங்களது நிலைபாடு என்ன என்பதையும் விளக்கினால் இன்னும் உங்களை மக்கள் விளங்கிக்கொள்ள பயன்படும். நீங்கள் 19 ½  ? அல்லது 19 ¼ ? என்பது.

19 ¼ ல் இருப்பீரேயானால், ஹசன் தரத்திலான எந்த எந்த ஹதீஸை எல்லாம் நீங்கள் இன்றும் ஆதாரமாக காட்டி வருகிறீர்கள் என்பதை குறிப்பிட்டு பட்டியல் இடலாம்.

தொப்பி போட்ட சொட்டை தலைவன்

புஹாரி 7562 ஹதீஸை குறிப்பிட்டு, இஸ்லாத்தை விட்டு வெளியேறுபவன், குர்ஆன் தொண்டைக்குழியை விட்டு இறங்காதவனை குறிப்பிடும்போது அவனின் ஒரு அடையாளமாக மொட்டையை சொல்லப்பட்டதை  சொட்டைக்கு மாற்றி அடையாளம் காட்டுகிறீர்கள். உங்கள் வழிகேட்டு தலைவன் சொட்டையை தொப்பி போட்டு மறைத்தாலும், சொட்டை சொட்டைதான்.  கொள்கையிலும் நான் அவந்தான் என்பதை அடையாளம் காட்ட தவறவில்லை.

எல்லாபுகழும் அல்லாஹ்விற்கே!

இதுவும் போதவில்லை என்றால் இன்னும் கேட்டு வாங்கிக் கொள்ளலாம்...... எப்போ கேட்டாலும் சுடச்சுட கிடைக்கும் என்பதை ஆழ்ந்த அனுதாபத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

2 comments:

  1. பதில்கள் எல்லாம் சூடா இருக்கு ஆனால் இதெல்லாம் அந்த மையத்துகளுக்கு விளங்குமா ?

    ReplyDelete
  2. மா ஸா அல்லாஹ்...! அருமை ...!! இப்போ சொல்ல சொல்லுங்க செத்தாண்டா சேகர் என்று.... கூறு கெட்ட பிஜெ யானி கூமுட்டைகளா....

    ReplyDelete